twitterfacebookgoogle pluslinkedinrss feedemail
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! வாழூர் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Sunnath Jamath valoor

அனைவருக்கும் ஹிஜ்ரி 1443 இஸ்லாமியப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, August 19, 2020

ஹிஜ்ரி 1442 இஸ்லாமியப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட நல் வாழ்த்துக்கள்.

பிறந்திருக்கும் புதுவருடத்தில் ஏற்பட்டுள்ள பேராபத் நீங்கி,

உலகில் சாந்தி, சமாதானம், 

அன்பு மலர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு.
.
அனைவர்களின் ஈருலக வாழ்க்கையிலும் 
வெற்றி கிடைக்க,வாழூர் அஹ்லுஸ் 
சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,
அல்லாஹ்விடம் 
துஆச்செய்கின்றோம்.ஆமீன்!

Thursday, February 14, 2019

தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா !!!


தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா தென் இந்தியா தமிழ்நாடு கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா مدرسة العروسية‎ 
மறைக்கப்பட்ட வரலாறு

தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்கள் தமிழ்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதோ அதேபோன்று தான் இஸ்லாத்திற்கு வழங்கிய பங்களிப்புக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. 

போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பாரிய சமூக சமயப் புணர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனை செவ்வனே நிறைவேற்றிய அறிஞராக செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா) வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். 

முகலாய மன்னர் அவுரங்கஸீப் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் "பத்வா ஏ ஆலம்கீரி" சட்டவாக்க நூலை தொகுக்கும் குழுவிற்கு பொறுப்பாக இருந்தார்கள்.இமாம் அவர்களின் பரிந்துரைக்கு அமைய மன்னர் அவுரங்கஸீப் அவர்கள், சீதக்காதி அவர்களை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராகவும் நியமித்தார்கள். 

செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் மக்கா, மதீனா, டமஸ்கஸ், பலஸ்தீன் உட்பட பல இடங்களுக்கும் விஜயம் செய்தார்கள். மஸ்ஜிதுன் நபவியில் இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரஹிமஹூல்லாஹ் அவர்களின் மாணவர்களும் செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்களிடம் கற்றதாக வரலாறு கூறுகிறு. 

துருக்கியின் சுல்தான் முராத் அவர்களோடும் தொடர்புகளைப் பேணிவந்தார்கள். இவ்வாறான பயணங்களின் பின்னரே கீழக்கரையில் கி.பி 1671ல் அரூஸிய்யா மத்ரஸாவை உருவாக்கினார்கள்.

கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா பல சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது. இந்த மத்ரஸாவிற்கு ஆர்காடு நவாபுகள் ஆரம்பம் முதல் உதவி வழங்கிவந்தார்கள். செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம், முதல் அரபு - தமிழ் Dictionary ஐ தொகுத்த செய்யித் ஜமாலிய்யா யஸீன் மௌலானா, அமெரிக்காவின் Pacific Colombia பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கலாநிதி தைக்கா சுஐப் ஆலிம் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

வேலூர் அல்பாகியாதுஸ் ஸாலிஹாத்

ஆனால் வேலூர் அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவே முதலாவது தமிழ் அரபு மத்ரஸா என்ற கருத்து தெரிந்தோ தெரியாமலோ சமூகமயப்படுத்தப்படிருப்பதை அவதானிக்க முடியும். அஹ்லா ஹஸ்ரத் என்று அழைக்கப்படும் வேலூர் ஷா அப்துல் வஹாப் ஸாஹிப் அவர்களே வேலூர் அல் பாகியாதுஸ் ஸாலிஹாதின் ஸ்தாபகராவார். 

இந்த மத்ரஸா உருவாக்கப்படுவதற்கு சுமார் 186 வருடங்களுக்கு முன்னரே கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா உருவாக்கப்பட்டது. மற்றுமொரு விடயத்தை நாம் இங்கு அவதானிப்பது அவசியமாகும் அஹ்லா ஹஸ்ரத் என்று அழைக்கப்படும் வேலூர் ஷா அப்துல் வஹாப் ஸாஹிப் அவர்களின் தந்தை அதாஉல் ஹாபீஸ அப்துல் காதிர் லெப்பை ஆலிம் (1784-1866) அவர்கள் கீழக்கரை தைக்கா சாஹிப் றஹிமஹூல்லாஹ் அவர்களிடம் அரூஸிய்யா மத்ரஸாவில் கற்றவராவார்.

அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் மத்ரஸாவில் இருந்து 1930 ம் ஆண்டில் வெளியிடப்பட்ட "அல் பாகியாதுஸ் ஸாலிஹாதின் அழகிய சரிதை" என்ற சிறப்பு மலரில் இந்த வரலாறு மறைக்கப்பட்டிருந்தாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ் ஆய்வுத்துறையின் முன்னாள் பேராசிரியர் P.M அஜ்மல் ஹான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வட இந்தியர்கள் தமிழ் முஸ்லிம்கள் செய்த உதவிகளை ஒர் ஆவணத்திலேனும் பதிவு செய்யவில்லை. குறிப்பாக தாருல் உலூம் தேவ்பந்த், ஸஹ்ரான்பூர், முபாரக்பூர் போன்ற தேவ்பந்த் மத்ரஸாக்களுக்கு பொருளாதார ரீதியில் செய்யத உதவிகளைக் கூட நன்றியுடன் நினைவுகூற மறந்துவிட்டார்கள். இவ்வாறு தான் தமிழ் நாட்டில் பேசும் முஸ்லிம்களின் வரலாறுகள் மெதுமெதுவாக மறைய ஆரம்பித்துவிட்டன. விரும்பியோ விரும்பாமலே மறைக்கப்பட்ட எமது வரலாற்றை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

படம் -- கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா

பஸ்ஹான் நவாஸ்

செய்தி ஆசிரியர் 
இலங்கை வானொலி 
கொழும்பு.

Tuesday, January 29, 2019

இந்தியாவின் 70 வது குடியரசு தின விழா !!!


70 வது குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது. 
தேசியக் கொடி உயர்ந்து, அவிழ்ந்து, பூமாரி பொழிந்து பட்டொளி வீசிப் பறக்கிற போது இந்தியன் என்ற பெருமிதத்தில் எல்லா சிரமங்களையும் கடந்து நெஞ்சு புடைக்கத்தான் செய்கிறது.

1947 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றோம். மூன்றாண்டுகள் நமது தேசத்தின் அறிவாற்றலும் தியாக உணர்வும் மிக்க நேரு , அம்பேத்கர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்ற மூத்த தலைவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசணம் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 ம் தேதி. அன்றைய தினம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடியரசாக மலர்ந்தது. 

இங்கிலாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சாசணங்களை முன்னோடிகளாக கொண்டு இந்திய அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது என்றாலும் உலகில் உள்ள அனைத்து அரசியல் சாசணங்களையும் விட இந்திய அரசியல் சாசணம் பெரியது. குடிமக்களுக்கு அதிக உரிமைகளை தரக் கூடியது. எந்த ஒரு குடுமபமோ அதிகார பீடமோ அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல. 

இந்தியக் குடியரசு, நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை தந்துள்ளது. இந்தக் குடியரசை காப்பாற்ற மக்கள் செய்ய வேண்டிய முக்கியக் கடமை தேர்தல்களில் வாக்களிப்பதாகும். நம் நாட்டில் வாக்களிப்பு சதவீதம் 60 % குறைவாகவே உள்ளது. இது கவலைக்குரியது. பிரம்மாண்டமாக கொடியேற்றி வைப்பதை விட தேர்தலில் வாக்களிப்பதே உண்மையில் ஒரு குடியரசுக்கு நாம் செய்கிற கடமையாகும். உள்ளாட்சித் தேர்தலோ நாடாளுமன்றத் தேர்தலோ குடியரசுக் கான சோதனைகளம் அது தான். அந்த வாக்களிக்கும் கடமையை எந்தச் சூழலிம் தவற மாட்டோம் என உறுதியேற்போம் என உரையாற்றினேன். 

நேற்றிரவு நீண்ட நேரமாக தப்லீக் ஜமாத்தில் ஏற்பட்ட பிளவுக்ள குறித்து படித்துக் கொண்டிருந்த்ததில் மெளலானா சஃது சாஹிப் பற்றிய அதிர்ச்சியளித்த குற்றச் சாட்டுக்களில் ஒன்று நினைவுக்கு வந்தது. 
மெளலானா சஃது சாஹிப் தேர்தல்களில் ஓட்டுப் போடக் கூடாது என்று கூறுகிறார். 

ஒட்டுப் போடும் போது விரல்களில் வைக்கப் படுகிற மை யினால் ஓளு கூடாது என்கிறார். 
சஃது மெளலானாவின் பத்வாவை எந்தக் குப்பை தொட்டியில் வீசுவது ? 
சஃது மெளலானா 50 கோடி மதிப்பில் பண்ணை வீடு வைத்திருக்கிறார். மோடியின் நணபருடன் சேர்ந்து மிகப் பெரிய இறைச்சிக் கூடம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் அவர் மீது கூறப்படுகிற குற்றச் சாட்டுக்களை அது வெறுப்பில் பேசப்படக் கூடியது அல்லது தனிநபர் சார்ந்ட்து என்று நாம் ஒதுக்கி விடலாம். ஆனால் அவருடைய இந்தக் கருத்து அப்படி ஒது க்கி விடக் கூடியதா ? 
ஒரு குடியரசு தினத்தில் திருச்சியில் கூடியிருக்கிற 50 இலட்சம் பேருக்கு இந்த வழிகாட்டுதல்கள் வழங்கப் படுமானால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது நிலை என்ன வாகும் ? 
அவருக்கு எவ்வளவு தடவை புரியவைத்தும் எத்தனை பெரிய மனிதர்கள் புரிய வைத்தும் அவர் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறார் என்று அழுகையோடு புலம்புகிறார் ஷூரா பிரிவின் முக்கிய தலைவர் அஹ்மது லாட் சாஹிப். 

இதற்கெல்லாம் பதிலளிக்காமல், அல்லது எங்களது தலைவர் இப்படி எல்லாம் பேசவில்ல என்று விளக்கம் தராமல் , மார்க்க தீர்ப்புக்களை கடந்து தனி நபர் துதி பாடுதலில் அல்லது அமைப்பை தூக்கிப் பிடிப்பதில் கவனமாக இருக்கிற தமிழ ஆலிம்கள் இது வரை தேவ்பந்த் – மற்றும் பாக்கியாத்தின் பத்வாக்கள் குறித்து வாய் திறவாமல் இருப்பது என்ன நியாயம் என்று அல்லது என்ன தைரியம் என்று எனக்கு இது வரை புரியவில்லை. நான் இதைக் கள்ள மெளனம் என்று சொனால் அதை கண்ணியமில்லாத வார்த்தை வழக்காட வந்து விடுகிறார்கள். 

குறைந்த பட்சம் அவர்களது அரபுக்கல்லூரிகளிலிருந்து சஃது மெள்லானாவின் மீதான குற்றச் சாட்டுக்களை மறுத்தே அல்லது அவரது கருத்துக்கள் அனைத்தோடும் தங்களுக்கு உடன்பாடு இல்லை “தாவத்” உடைய வேலைகளில் மட்டும்தான் தங்களுக்கு தொடர்பு என்றோ எந்த விளக்கமும் தராமல் இருப்பது நாட்டில் நடைபெறும் கொடூரங்கள் குறித்து வாய் திறக்காத மோடியை விட பெரிய மெளனிகளாக அவர்களை காட்டுகிறது. 

தமது தரப்பை நியாயப் படுத்தி ஒரு மதரஸாவின் சார்பாகவேணும் பத்வா வெளியிடாமல் இத்தகை பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவது தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு எந்த விதமான சிக்னல்களை தரக்கூடியது ? 

ஏ கியா ஹோராஹே பாய் !
மன்னிக்கனும். மறந்து விட்டேன். 
இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.