Sunday, December 25, 2016

சித்தார் கோட்டையில்,நடைபெற்ற பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழா !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்,
வலமை போல், 21-12-2016 அன்று சித்தார் கோட்டையில், 
மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெருமானாரின் 1491 வது 
மீலாதுப் பெருவிழா, மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

 


 நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில், 
சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலின்,இமாம் மௌலானா 
மௌலவி முஹம்மது ஆரிஃப் ஆலிம் மஸ்லஹி அவர்கள், 
கிராஅத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்கள்.


 நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில், 
சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலின்,தலைமை 
இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரீ 
அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹழ்ரத் அவர்கள்,
துவக்கவுரையாற்றினார்கள்.


 நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,தேவி பட்டிணம் 
புஹாரியா மெட்ரிகுலேசன் பள்ளியின் இமாம், 
மௌலானா ராஜா முஹம்மது ஆலிம் 
கைரி அவர்கள், இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.


நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில், 
சித்தார் கோட்டை மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா 
மாணவர்கள்,இஸ்லாமிய பாடல் பாடினார்கள்.


இச்சிறப்பு வாய்ந்த மீலாதுப் பெருவிழாவில்
 மேலப்பாளையம், உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் 
பேராசிரியர், சொல்லின் செல்வர்,கலீபத்துஸ் ஷாதுலி, 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
P,A.ஹாஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் அவர்கள் 
மீலாதுப் பெருவிழா சிறப்புப் பேருரையாற்றினார்கள்.   .

நடைபெற்ற,மீலாதுப் பெருவிழாவில்,
சுற்றுப்புற உலமாப் பெருமக்களும்,ஏராளமான முஸ்லிமான 
ஆண் பெண்களும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் 
அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்,
அல்ஹம்துலில்லாஹ்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார் கோட்டையில் பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழா ஊர்வலம் !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 
வலமை போல்,  13-12-2016 அன்று மாலை 5-00 மணியளவில், 
சித்தார் கோட்டை,ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் ஜும்ஆப் 
பள்ளிவாசலில் இருந்து,பெருமானாரின் 1491 வது மீலாதுப் 
பெருவிழாவை முன்னிட்டு,மீலாது ஊர்வலம், மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.










இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில், சித்தார் கோட்டை மற்றும் சுற்றுப்புற 
முஸ்லிம்கள் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சித்தார் கோட்டையில், பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு,மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 
வலமை போல், சித்தார் கோட்டை,ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்
 ஜும்ஆப் பள்ளிவாசலில், அகிலத்தின் அருட்கொடை, நம் 
உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
 அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த 
மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதம், பன்னிரெண்டு 
தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான 
மவ்லிது ஷரீஃப் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


வலமை போல்,13-12-2016 அன்று காலை 10-00 
மணியளவில், சித்தார் கோட்டை,ஜன்னத்துல்
 ஃபிர்தௌஸ் ஜும்ஆப் பள்ளிவாசலில்,பெருமானாரின் 
1491 வது மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு,
மௌலிது ஷரீஃப் ஓதி,சிறப்பு துஆ மஜ்லிஸ் மிகச்சிறப்பாக 
நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான சுற்றுப் புற 
உலமாப் பெருமக்களும்,சித்தார் கோட்டை மற்றும் சுற்றுப்புற 
முஸ்லிம்களும் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வாழூரில், பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை முன்னிட்டு,மௌலிது ஷரீஃப் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், 
வலமை போல்  அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் 
மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ 
ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு 
வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதம், பன்னிரெண்டு தினங்கள் 
சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான 
மவ்லிது ஷரீஃப் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


13-12-2016 அன்று காலை 8-00 மணியளவில், வாழூர் 
அல் மஸ்ஜிதுர் ரைய்யான் ஜும்ஆப் பள்ளிவாசலில்,
பெருமானாரின் 1491 வது மீலாதுப் பெருவிழாவை 
முன்னிட்டு,மௌலிது ஷரீஃப் ஓதி,சிறப்பு துஆ மஜ்லிஸ் 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான சுற்றுப் புற 
உலமாப் பெருமக்களும்,வாழூர் மற்றும் சுற்றுப்புற 
முஸ்லிம்களும் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டனர்.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Tuesday, November 29, 2016

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1491 வது மீலாதுப் பெருவிழா!!!



முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர
நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு 
தினங்களும் பயான் செய்யப்படும்,

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1491 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!