Monday, August 29, 2016

மலேசியாவில் இப்னு தைமியாவின் நூல்கள்,கருத்துக்களுக்குத் தடை !!!


மலேசியாவில் பஹாங் மாநிலத்தில் இப்னு தைமியாவின் 
கிதாபுகளையோ, கொள்கைகளையோ மேற்கோள் 
காட்டி பேசுவது ஹராம்.
.
இவ்வாறு அம்மாநிலத்தின் முஃப்தி டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான்
 ஒஸ்மான் அவர்களும் மலேசிய இஸ்லாமிய அமுலாக்க துரையினர், 
மற்றும் மற்ற மாநிலத்தின் மார்க்க அறிஞர்களின் ஆய்வு முடிவில் 
இப்னு தைமியாவின் தீவிரவாதக் கருத்துக்களை கொண்ட 
எந்த ஒரு கிதாபுகளை உபயோகித்து பேசக்கூடாது 
என்று பத்வா வெளியிடப்பட்டுள்ளது.
.
இது மட்டுமல்லாமல் சமீபத்தில் நடந்த தீவிரவாததிற்கு எதிரான 
விழிப்புணர்வு மக்கள் சந்திப்பில், தீவிரவாதக் குற்றப் புலனாய்வு 
உயர் அதிகாரி டத்தோ அயுப் கான் மைடின் பிச்சை அவர்கள் 
கூறும்போதும் இதையே வலியுறுத்தி பேசினார். 
.
இதுவரையில் மலேசியாவில் தீவிரவாதப் போக்கில் சென்று 
பிடிபட்டு கைதானவர்கள் அனைவருமே இப்னு தைமியாவின் 
கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்களே.
.
இப்னுதைமியா போன்ற கடும்போக்கு கொண்ட வஹாபிகள் 
மிகவும் அச்சுருத்தலுக்கு உரியவர்களே என்றும் பேசப்பட்டது.
.
மேலும் முஃப்தி அப்துர் ரஹ்மான் ஒஸ்மான் அவர்கள் 
கூறும்போது மலேசியா காலங்காலமாகவும் இனி எந்தக் 
காலத்திலும் அஷ் அரியா, மாத்துரிதியா 
(ஸுன்னத் வல் ஜமாஅத்) கொள்கையிலேயே 
அமல் செய்யக் கூடியவரகள். 
.
அதனால் இப்னு தைமியா போன்ற வழிகேடுகளையும், 
தீவிரவாதக் கொள்கைகளையும் பரப்பக்கூடிய எந்த 
கருத்துக்கும் அனுமதி கிடையாது என்றார்.
.
மேற்காசிய நாடான மெஸ்ஸிர், ஜோர்டான் மற்றும் 
அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஏற்கனவே இப்னு தைமியா 
போன்ற வழிகெட்ட கொள்கைகளை கொண்ட பலருடை 
நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
.
இந்த உம்மத்தில் பிளவுகளை ஏற்படுத்தி குழப்பத்தை 
உண்டாக்கியவர் இந்த வஹாபிகள் என்பதை 
மக்கள் விளங்கி விலகிக் கொள்ளவேண்டும் 
என்றும் வலியுறுத்தினார்.
.
முஃப்தி அவர்களின் இதற்கு முந்திய 
எச்சரிக்கைகளும் ஃபத்துவாவும் கீழே..

https://m.facebook.com/story.php…
https://m.facebook.com/story.php…
.
நன்றி: Aziz Ahamed Bin Habib.

வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Thursday, August 25, 2016

ஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக மற்றும் கேரளவைச் சார்ந்த பாடகர்கள் பாடிய அழகிய பாடல்கள் !!!!!

ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி 
அபுல் பரக்கத் அவர்கள் பாடிய பாடல்கள்.

ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
கேரளச் சிறுமியின் அழகிய பாடல்

ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
கேரளச் சிறுவனின் அழகிய பாடல்

ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
அழகிய மலையாளப் பாடல்

ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
ஏர்வாடி ராஜா மாப்பிள்ளை பாடல்

வெளியீடு-மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி 
இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்  
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்யித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின்  சிறப்பை பற்றி
நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர்
அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.


வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

புனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு !!!

முதல் பாகம்.

இரண்டாம் பாகம்.

மூன்றாம் பாகம்.

நான்காம் பாகம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்

12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்..

கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் ..

அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.

நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் கு.சே பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்..


மீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்..
அதன்பின் போரில் மாண்ட விக்கிரம பாண்டியனின் உறவினனான திருபாண்டியன் என்பவன் ஆந்திரா மன்னனின் உதவியோடு ஆன்மீக செல்வருடன் போர் புரிய போரில் ஆன்மீக செல்வரும் அவர்களுடன் வந்த ஏனைய இஸ்லாமிய வீரர்களும் ஷகிதாகினர்..

இஸ்லாத்தை பரப்பி நியாயத்துக்காக போராடி வென்று செங்கோலும் செலுத்தி நல்லாட்சிப் புரிந்து மனித நேயராய் மார்க்க சீலராய் வாழ்ந்து உயிர் நீத்த அந்த உத்தமரின் உடல்
ராமநாதபர மாவட்டம் ஏர்வாடி என்னும் ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது .. அந்த இறைநேசர்தான் செய்யது இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ்..அதற்கு பிறகு பட்டத்திற்கு வந்த திருபாண்டியன் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் முந்திய ஆட்சியை பாராட்டி அன்னாரின் மகனுக்கும்,வழித்தோன்றல் களுக்கும் பல மானியங்களை வழங்கி கெளரவித்தான்..

இன்று மதுரையில் உள்ள காஜியார் குடும்பத்தினர் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் வழித்தோன்றல்கள் என கூறபடுகிறது ..இவர்கள் இன்றும் அந்த மானியங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர் ..இது ஏர்வாடி இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம் முழுமையான வரலாறு நீளுகிறது..அது மூமின்களின் உள்ளங்களை ஆளுகிறது.வஸ்ஸலாம்.


நன்றி ;- கவிஞர் நாகூர் காதர்ஒலி...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.

ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.

அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.


அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.

அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போது, மதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.

இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.



பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வர, ஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள். எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான். மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.

உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்ட, பதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,


ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.

ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 


தகவல்- காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் 
அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்) வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Saturday, August 20, 2016

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய காஃபிர்களான TNTJ விற்கும், சுன்னத் ஜமாஅத் ஃ பெடரேஷன் (SYF) க்கும் நடைபெற்ற கோவை விவாதம் !!!

 கடந்த ஜூலை மாதம் 19,20,ஆகிய தேதிகளில், இஸ்லாத்தை
 விட்டு வெளியேறிய காஃபிர்களான TNTJ விற்கும், 
சுன்னத் ஜமாஅத் ஃ பெடரேஷன் (SYF) க்கும் நடைபெற்ற 
விவாதத்தின் முதல் தலைப்பின் 
எடிட்டிங் செய்யப்படாத வீடியோ !!!
வெளியீடு ;-  மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

Monday, August 15, 2016

Monday, August 1, 2016

சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் !!!


சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலின்
 சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!!

ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள் 
இது ஒரு ஷாபி பள்ளிவாசல்......

இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்?????
ஒரே ஒரு ஹதீஸ் வசனம்தான்!!!!!

ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள்.
இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை....

இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று.........

உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார்கள்.  அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப்.

மன்னர் தண்ணீர் ஊற்றுகிறார் என்று எல்லோரும் பட்டும் படாததுமாக கையை கழுவி விட்டு போய் விட்டார்கள். அதில் ஒருவர் பெரியவர் மட்டும் கை, முகம், கால்கள் என்று சாவகசமாக எல்லோரும் வியக்கும் விதமாக நடந்து கொண்டார்கள்...

எல்லா ஆலிம்களும், உலமாக்களும் சொன்ன விளக்கங்கள் 
மன்னருக்கு நிம்மதி தரவில்லை. .....

அந்த ஒரு பெரியவர் மன்னரிடத்தில் உங்கள் கேள்வி என்ன என்று கேட்க அந்த மன்னர் அந்த ஹதீஸின் வசனத்தை கூறினார்.

இதை பொறுமையாக கேட்ட அந்த பெரியவர் அந்த மன்னரிடம்,

நீங்கள் தான் மன்னர் ஆச்சே உங்களுக்கு குடிக்கும் பழக்கம் இருக்கா என்று நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் பல பெண்களுடன் உறவு வைத்து உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

நீங்கள் சூது விளையாடியது உண்டா, நவாப் அதிர்ந்து போய் உடனே மறுத்தார் மார்க்கத்தில் ஹராம் ஆக்கப்பட்டதை நான் செய்வதில்லை என்று.

இப்படி ஒவ்வொன்றாக கேட்டு விட்டு பிறகு அந்த பெரியவர் நவாபிடம் கூறினார் ஒரு மன்னர் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்று இருந்தும் அல்லாஹ் தடுத்த விஷயத்தை விட்டும் உங்கள் கல்பை சிறை வைத்து இருப்பதால் நீங்களும் சிறைவாசிதான்..... கவலை பட தேவை இல்லை என்று சொன்னதும் நவாப் மகிழ்ந்து விட்டார்...

அந்த பெரியவருக்கு நவாப் அவர்கள் பொன்னும் பொருளும் கொடுத்தும் அவர்கள் அதை ஏற்க வில்லை, அந்த பெரியவரோ எனக்கு எதுவும் வேண்டாம் அப்படி தருவதாக இருந்தால் அல்லாஹ்வின் பாதையில் ஒரு பள்ளிவாசலை மட்டும் கட்டுங்கள் என்று கூறினார்கள்..... அது தான் மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மாமூர் பள்ளி வாசல் ....


மார்க்க விளக்கம் தந்த அந்த பெரியவர்கள் தான், கீழக்கரையில் மறைந்து வாழும் வலியுல்லாஹ் (இறை நேசச் செல்வர் ) மஹான்  சதகத்துல்லாஹ் அப்பா ரஹ்மத்துல்லாஹி அலைஹி   அவர்களாகும்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்..

இராமநாதபுரத்தை கலக்கும் இஸ்லாமிய மருத்துவர்கள் குடும்பம் !!!


ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மர்ஹூம் அப்துல்லாஹ் இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை.

மறைந்த டாக்டர்  மர்ஹூம் அப்துல்லாஹ்வுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள்.

மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் மர்ஹூமா செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவிடாமல் தடுக்க, வேலைக்குப் போனார். அவரது ஆசிரியர் ராமகிருஷ்ண அய்யர்தான் வற்புறுத்தி, அப்பாவைப் படிப்பைத் தொடரவைத்தார். நன்றாகப் படித்து, ‘சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’யில், பெஸ்ட் அவுட்ஸ்டாண்டிங் மாணவனாக வந்தார். ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில், ஹானரி டாக்டராக முதலில் பணியாற்றினார். பிறகு, தாயாரின் பெயரில் செய்யதம்மாள் மருத்துவமனையைச் சிறிய அளவில் ஆரம்பித்தார்.

எங்களுடைய மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால், குறைந்த செலவில் எல்லோருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் என்று செயல்பட்டார். அவரைப் பார்த்துதான் எங்களுக்கும் டாக்டர் ஆக வேண்டும் என்கிற ஆர்வம் வந்தது. என் தம்பி, தங்கை இருவரும் டாக்டர் இல்லை. ஆனால், எல்லோரும் ஒரே வீட்டில் இருந்ததால், அவர்களின் பிள்ளைகள் இன்று டாக்டர்களாகிவிட்டார்கள். சிலர், எங்கள் மருத்துவமனையிலும், சிலர், வெளியூர் மருத்துவமனைகளிலும் பிராக்டீஸ் செய்கிறார்கள்.

அவர்கள் திருமணம் செய்துகொண்டவர்களும் டாக்டர்கள்தான். மொத்தமாக எங்கள் வீட்டில் இப்போது 20 டாக்டர்கள்.’’ என்று பெருமிதமாகச் சொன்னார். ஒரு பழமையான மரத்தை வெட்டுவதற்கு, அரசு நிர்வாகம் முயற்சி எடுத்தபோது, அதில் உள்ள பறவைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றம் மூலம் தடுத்து நிறுத்திவர் டாக்டர் பாபு அப்துல்லா.

‘‘வீட்டில் எல்லோரும் டாக்டர்கள் என்பதால், வருடத்துக்கு ஒருமுறையோ, ஏதாவது விசேஷத்துக்கோதான் ஒன்று சேர முடிகிறது. எங்களுக்கு ஓய்வே இல்லை. நாங்கள் வீட்டில் இருந்த நாட்களைவிட, மருத்துவமனையில் இருக்கும் நாட்கள்தான் அதிகம்’’ என்று சிரிக்கிறார் டாக்டர் சுல்தானா. சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்துவரும் இந்த நாட்களில், சுல்தானா டாக்டரிடம் போனால், சுகப்பிரசவம் என நம்பி வருகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப, சிசேரியன் பிரசவங்களை முடிந்தவரையில் தவிர்த்து, அதிக அளவில் சுகப்பிரசவங்களை நடத்தி, கைராசிக்காரர் எனப் பெயர் வாங்கியிருக்கிறார்.

“ஓய்வே இல்லாமல் மற்றவர்களின் உடல்நலனைக் கவனித்துக் கொள்கிறீர்கள். உங்கள் உடலைக் கவனிக்க நேரம் இருக்கிறதா?”

“காலையில் எழுந்து தோட்டத்தில் உள்ள செடி, மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவேன். வாக்கிங் போவேன். வீட்டுக்குள்ளேயே சிம்பிளான உடற்பயிற்சிகளைச் செய்வேன். அதுவே சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது, பேட்மிண்டன் விளையாடுவேன். மேலும், சில விளையாட்டு கிளப்களுக்கும் ஆதரவாகச் செயல்படுகிறோம்” என்கிற பாபு அப்துல்லாவைத் தொடர்ந்தார் தம்பி சின்னத்துரை அப்துல்லா. “நானும் என் மனைவியும் சேர்ந்து, வீட்டுத் தோட்டத்தில் வாக்கிங் போவோம். சிம்பிளான உடற்பயிற்சிகள் தினமும் செய்வோம். உடற்பயிற்சியைப் போல, உணவுக்கும் அதிக முக்கியத்துவம் தருவோம். காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வோம். விசேஷ நாட்களில் மட்டும்தான் அசைவம் சாப்பிடுவோம். எங்கள் வீட்டிலேயே எல்லா ஸ்பெஷலிஸ்ட்களும் இருப்பதால், உடலில் ஏதாவது பிரச்னை வந்தால், கன்சல்ட் செய்வோம். உடற்பயிற்சி, சரியான உணவு, மருத்துவ வேலைகளில் பிஸி என இருப்பதால், இதுவரை யாருக்கும் எந்த பெரிய நோயும் வந்தது இல்லை.’’

இந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை மருத்துவரான ஷாநாஷ் ஃபாருக் அப்துல்லா, “குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியாது. டி.விகூட அதிகம் பார்ப்பது இல்லை. வீட்டுக்கு வந்தால் உடனே, ஹாஸ்பிட்டலில் இருந்து ‘சீரியஸ் கேஸ்’ னு போன் வரும். இந்தப் பரபரப்பிலும், வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எங்கள் வாழ்க்கை மருத்துவத் துறையைச் சார்ந்து இருப்பதால், குடும்பமாகச் சேர்ந்து பேசும் போதுகூட, மருத்துவம் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். ரம்ஜானுக்கு எங்க வீட்டுக்கு வந்து பாருங்க. வீடே ஒரு மருத்துவ மாநாடு மாதிரி இருக்கும்.” என்று சிரிக்கிறார்.



“ராமநாதபுரத்தை மருத்துவ நகரமாக மட்டும் இல்லாமல், கல்வி நகரமாகவும் மாற்ற எங்கள் அப்பா கனவு கண்டார். அதை நாங்கள் முடிந்த அளவு நிறைவேற்றிவருகிறோம். கூடுதலாகப் பசுமை நகரமாக்குவதும் எங்கள் குடும்பத்தின் கனவு. யார் போன் செய்து கேட்டாலும் மரக்கன்றுகளை வழங்கியும், நடுவதற்கு இடம் கொடுத்தால் நட்டுப் பராமரிக்கவும் செய்கிறோம். மருத்துவம் மட்டுமல்ல, மக்களுக்காகச் செய்யும் எல்லா சேவையுமே உயர்வானவைதான்’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா.

டாக்டர் குடும்பம் தரும் டிப்ஸ் வெயில் காலங்களில், காட்டன் உடைகளை அணியுங்கள். உணவில் காரத்தைக் குறைப்பது நல்லது. பழங்கள் அதிகமாகச் சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். செயற்கையான குளிர்பானங்களைத் தவிர்த்திடுங்கள்.

உடல் ஆரோக்கியத்துக்கு, தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி அவசியம். ஒருமணி நேர சிம்பிள் உடற்பயிற்சிகளை வாரம் மூன்று நாட்களாவது செய்யுங்கள். 20 வயதுக்கு மேல் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள். எண்ணெயில் பொரித்த, ஜங் ஃபுட் உணவுகளைத் தொடாதீர்கள். குழந்தைகளுக்குக் காய்கறிகள், கீரைகள், மீன் என சத்தான உணவை, சின்ன வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். உடலில் பிரச்னைவந்தால், சுயமாக மருத்துவம் பார்க்காமல் டாக்டரைப் பாருங்கள்.

சுற்றுப்புறத்தைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொண்டாலே, பல நோய்கள் நம்மை அணுகாது. மனதை அலைபாயவிடாமல், ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ளுங்கள். 


விதை ஒன்று விருட்சமானது!

ராமநாதபுரத்தின் முதல் டாக்டரான மர்ஹும்  அப்துல்லாஹ், தன் தாய் பெயரிலேயே செய்யதம்மாள் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். வறுமை, அறியாமை காரணமாக, அந்த காலத்தில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அந்தத் தருணத்தில், டாக்டர் அப்துல்லாஹ், மற்ற ஆசிரியர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று, வயல்வேலை, கால்நடை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை, சாப்பாடுபோட்டுப் படிக்கவைப்பதாக உத்தரவாதம் கொடுத்து, மாணவர்களை விடுதியில் தங்கிப் படிக்க வைத்தார்கள்.. அப்படிப் படித்த மாணவர்களில் இன்று பலர், ஐ.ஏ.எஸ் உட்பட பல உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்..

தூக்கம் !!!


"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் :
* பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது 
வறுமையை உண்டாக்கும்.

* லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில் 
சோம்பலை ஏற்படுத்தும்.

* சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில் 
தூங்குவது அறிவாற்றலை அதிகப்படுத்தும்.

* சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம் 
சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும் 
தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும்.

* பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது 
அழிவை ,நாசத்தை ஏற்படுத்தும்.

மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில் 
கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது 
அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும்.


அதிகமான தூக்கம் கீழ் காணும் 
விளைவுகளை ஏற்படுத்தும் ,

* மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும்,

* சளியை அதிகப்படுத்தும்,

* உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்.,

* வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்,

* பார்வையை பலகீனப்படுத்தும்..

இன்னும் இது போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றது.
எனவே ஸுப்ஹு , அசர் நேரத்தில் தூங்குவது இதை 
விட தங்கடமானதும் கெட்டதுமாகும்.

( நூல் - முஹிம்மாதுள் முதஅல்லிமீன்)


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

இராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையானில் அரசாட்சி புரியும் மஹான் சீனி அப்பா ஷஹீது வலியுல்லாஹ் !!!


இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளிக்கு அருகிலுள்ள, சுந்தரமுடையான் என்ற அழகிய கிராமத்திலுள்ள, அந்தக் கடற்கரையில் அலைகள் இல்லை. அமைதி கொஞ்சும் ஏரி போல் நீலக்கடல் விரிந்து கிடக்கிறது. பறவைகள் சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன. பல மரங்கள் நிழல் விரித்திருக்கின்றன. மன அமைதியை நாடி மணிக்கணக்கில் இங்கே அமர்ந்திருக்கலாம். இங்குதான் அமைந்திருக்கிறது சீனி அப்பா தர்கா.
ராமநாதபுரம் மாவட்ட இறைநேசர்களின் உறைவிடங்களில் சிறப்புக்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. இது. மண்டபத்திற்கு மேற்கே சுமார் பத்து மைல் தூரத்தில் தர்கா அமைந்துள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து சில கிலோமீட்டர்கள் மண் சாலையைக் கடந்து வரவேண்டும். வந்து சேர்வதற்கு சிலருக்குக் களைப்பாகவும் தோன்றலாம். ஆனால்,தர்காவுக்கு வந்த பிறகு நிழலும் கடல் காற்றும் தரும் சுகத்தில் அலுப்பும் களைப்பும் அகன்றுவிடும். இந்த இடத்திற்குப் பெயர் மரைக்காயர்பட்டினம். பிரபலமான பாம்பன் கடல் பாலமும் அருகிலுள்ள மண்டபம் பகுதியில்தான் அமைந்துள்ளது.

ஹழரத் யாசீன் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு என்று சிறப்பிக்கப்படும் சீனி அப்பா, ஏர்வாடியில் அடக்கமாகியுள்ள இறைநேசர் மஹான் சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களுடன் அரேபியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து திருப்பணிகளில் ஈடுபட்டார்கள்.

சீனி அப்பாவின் செல்வாக்கு கொஞ்ச நஞ்சமல்ல. ஏர்வாடி தர்காவை தரிசிக்க வருபவர்கள் சீனி அப்பா தர்காவையும் தரிசித்து நல்லாசி பெறாமல் போவதில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் பலர் சீனி முகம்மது, சீனி வாப்பா என்று பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். அப்பாவின் செல்வாக்கே இதற்குக் காரணம்.

தர்காவுக்கு அருகிலேயே ஒரு பள்ளிவாசல் இருக்கிறது. உள்ளூர் மக்களும், தர்காவுக்கு வரும் வெளியூர் அன்பர்களும் அங்கு தொழுகிறார்கள். தர்காவுக்கு வருபவர்கள் தங்கிச் செல்வதற்கு இடவசதியும் உள்ளது.



அப்பா நிகழ்த்திய அற்புதங்கள் ;-

யாசீன் எனும் இயற்பெயரைக் கொண்ட சீனி அப்பா ஹிஜ்ரி 582-ல் (கிபி 1177) தமிழ்நாட்டுக்கு வந்ததாகச் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அவருடைய மற்றொரு பெயர் அப்துல் காதிர் என்றும் சொல்லப்படுகிறது. அவர் ஒரு போரில் உயிர் துறந்தார். சீனி அப்பாவைப் பற்றியும் மரைக்காயர் பட்டினத்தைப் பற்றியும் சரித்திர ஆசிரியர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் தமது நுாலில் எழுதியுள்ளார்.

கீழக்கரை சையிது முகம்மது ஆலிம் புலவர் எழுதிய சீனி அப்பா பற்றிய கஸீதா முக்கியமான ஒன்று. தனது வயிற்று வலியைக் குணமாக்கியதால் நன்றி கூறி எழுதப்பட்ட கஸீதா அது. இறைநேசர் சீனி அப்பா பல அற்புதங்களை அவ்வப்போது நிகழ்த்தி வந்துள்ளார். நோயுற்றவர்கள் குணமடைவதற்காக இந்த தர்காவிற்கு வந்து தங்கிச் செல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்


யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்.
அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதீனா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மகிமை:

ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.




மக்பராக்கள்:

ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.

நோய் தீர்க்கும் தலம்:

ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். 

மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.

சந்தனக்கூடு திருவிழா: 

சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும்.

சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

இறை நேசர்களின் பிறப்பிடங்கள் !!!


கவ்துல் அஃலம் அப்துல் காதிர் ஜிலானி (ரழி) - ஜீலான் , ஈரான்
இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதிலி (ரழி) - சியுட்டா - மொராக்கோ
கரீப் நவாஸ் அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரழி) 
- சிஸ்தான் - கிழக்கு ஈரான்
ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மத் கபீர் ரிபாய் (ரழி) - பஸ்ரா - ஈராக்
ஷெய்க் பஹாவுத்தீன் நக் ஷபந்த் புஹாரி(ரழி) - கஸ்ரி ஆரிஃபீன் - உஸ்பெகிஸ்தான்
ஷெய்க் ஷிஹாபுத்தின் யஹ்யா இப்னு ஹபஷ் அஷ்ஷுஹரவர்த்தி (ரழி) - சொஹர்வர்த் (ஜன்ஜான் மாகாணம்) - ஈரான்
இமாம் புஹாரி(ரஹ்) - புஹாரா - உஸ்பெகிஸ்தான் - மத்திய ஆசியா
இமாம் முஸ்லிம்(ரஹ்) - நிஷாப்பூர், ஈரான்
இமாம் அபு தாவூத்(ரஹ்) - ஸிஸ்தான், கிழக்கு ஈரான்
இமாம் திர்மிதி(ரஹ்) - உஸ்பெகிஸ்தான், மத்திய ஆசியா
இமாம் இப்னு மாஜா(ரஹ்) - கஸ்வின், ஈரான்
இமாம் அபுஹனிஃபா(ரஹ்) - குஃபா, ஈராக்
இமாம் ஷாஃபிஈ(ரஹ்) - காஸா, பாலஸ்தீன்
இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) - பாக்தாத் ஈராக்
இமாம் மாலிக்(ரஹ்) - மதீனா - சவுதி அரேபியா
இமாம் கஸ்ஸாலி(ரஹ்) - துஸ் - ஈரான்
மௌலானா ரூமி(ரஹ்) - பலக் - ஆஃப்கானிஸ்தான்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் !!!


காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது.

ஞான மேதை கீழக்கரை தைக்கா ஸாஹிபு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவராக விளங்கும் பேற்றினை பெற்றார்கள். தமது பத்தாம் வயதில் திருக்குர்ஆனை மனனம் செய்து, பின் இஸ்லாமியக் கலை ஞானங்களை கற்றுத் தேர்ந்தனர். தமது ஆசிரியரின் மகளான சாரா உம்மாளை மணமுடித்தார்கள். அதனால் மாப்பிள்ளை என்று அழைக்கப்பட்டதால் மாப்பிள்ளை லெப்பை ஆலிமாக-இமாமுல் அரூஸாக அழைக்கப்பட்டார்கள்.

 தமது மாமனாரிடம் பைஅத்தும், கிலாபத்தும் பெற்றார்கள். அரூஸிய்யா மத்ரஸாவை அமைத்து அதில் நூலகம் ஒன்றை நிறுவினார்கள். இவர்களுக்கு கல்வத் நாயகம், சாகுல் ஹமீது என்ற ஜல்வத் நாயகம் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகிய இரு மகன்கள் பிறந்தார்கள்.

இலங்கையிலும், தமிழகத்திலும் இவர்கள் ஆற்றிய மார்க்க சேவை மிக மகத்தானது. இலங்கையில் 355 பள்ளிவாசல்களையும் தைக்காக்களையும் நிறுவினர். இலங்கையில் போர்ச்சிக்கீசியர்கள் மார்க்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை தகர்த்து மார்க்கத்தை புணருத்மானம் செய்ய இவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் மகத்தானது.

மஙானீ, பத்ஹுத் தைய்யான், ஙனீமத்துஸ்ஸாலிஹீன்,மின்ஹத்து ஸரன்தீப், ஹதிய்யா மாலை, ஹத்யா ஷரீப், ராத்திபத்துல் ஜலாலிய்யா போன்ற எண்ணற்ற கிரந்தங்களை நமக்குத் தந்துள்ளார்கள்.

தங்களது 84 ம் வயதில் ரஜப் பிறை 5 ஹிஜ்ரி 1316 சனிக்கிழமை 
மாலை (கி.பி. 1898)யில் மறைந்தார்கள். இவர்களின் 
அடக்கஸ்தலம் கீழக்கரை தைக்காவில் உள்ளது.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! 
முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். 


மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.



இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணிய மிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.



இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே! தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால், 


அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனது குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன். 

அல்லாஹ்வின்  மாபெரும் கிருபையால்,அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் ஆரம்ப மாகிவிட்டது. பயணடைந்து கொள்வீர்களாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.