Tuesday, November 29, 2016

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1491 வது மீலாதுப் பெருவிழா!!!



முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர
நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு 
தினங்களும் பயான் செய்யப்படும்,

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1491 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!



தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 15 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான 
மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு 
வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்
 1491 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு 
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை 
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 30--11--2016 புதன் கிழமை  
தொடங்கி 11--12--2016 ஞாயிறு வரை 12 தினங்களுக்கு 
இஷா தொழுகைக்குப் பின் சரியாக 
ஒரு மணி நேரம் பயான் நடைபெறும்.

உரையாற்றுபவர்கள் ;---
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
K.I.ஷாஹுல் ஹமீது ஆலிம் வாஹிதி
இமாம் அப்பா ஜும்ஆப் பள்ளிவாசல்
பேராசிரியர்,ஸபீலுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி
வடகரை,தென்காசி,நெல்லை மாவட்டம்.

ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் 
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் 
அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு 
அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் 
இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ்
 எஸ்.எஸ்,அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் 
அவர்களை  016--9276127  இந்த  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகக் குழு மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.

நாமறிவோம்!
நபி (ஸல்) பிறந்தநாள்
ஹி.மு.53 ரபீஉல் அவ்வல் --12
கி.பி.570 ஆகஸ்ட் --20
திங்கட்கிழமை -- அதிகாலை

வெளியீடு ;-- 
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

உலகம் முழுவதும் நடைபெற்ற பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்கள் !!!




வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்களைப் பற்றிய அழகிய பாடல்கள் !!!




வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பெருமானாரின் மௌலித் ஷரீஃப், மற்றும் மீலாதுப் பெருவிழா பற்றிய பயான்கள் !!!!




வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்ற மகத்தான வெற்றி !!!


இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை.
இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.) Historically, it is quite doubtfull whether Christ ever existed at all.(B.Russell) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.

 நபி (ஸல்) அவர்களின் இருப்பு,சரித்திரத்தைக் கவனித்து, எந்தளவுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி என்றால்,அவர்கள் விஷயத்தில்,ஒரு ஆய்வாளர் இப்படி எழுதவேண்டியது தான் வந்தது.
Mohammad was born within the full light of history(Hitti)  '' முஹம்மது '' வரலாற்றின் முழு ஒளியில் பிறந்தார் (ஹிட்டி) அந்த நபியின் உயிரோட்டத்திற்கான மிக முக்கியமான ஒரு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையான, உயிருள்ள முஃஜிஸாவான அல் குர்ஆனாகும். இது இன்னும் கூட திருத்தப்படாத சரித்திர சான்றாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.

ஆதம் நபி முதல் ஈஸா நபி வரை இலட்சத்திற்கும் அதிகமான தீர்க்கதரிசிகள் மக்களுக்கு இறை உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி,அல்லாஹ்வை பயந்து,வாழ்க்கையை துய்மையாக நடத்துமாறு  வலியுறுத்தினார்கள்.ஆனால் மிகவும் சொற்பமான நபர்களே அவர்களுக்குப்பின் அணி திரண்டனர்.நபி யஹ்யா (அலை) அவர்களுக்கு,கூட செல்ல ஒருவர் கூட கிடைக்கவில்லை என்பதுடன் இறுதியில் அவர்கள் கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள்,நபி லூத் (அலை) அவர்களை அவர்களின் இரு மகளை தவிர வேறு யாரும் ஏற்கவில்லை.நபி நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன்,கப்பலில் பயணித்தவர்கள் தவ்ராத் -- (தோரா) தரும் தகவலின்ப்டி வெறும் எட்டு நபரேயாகும்.

நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களது தாயகமான இராக்கை விட்டு வெளியேறிய போது அவர்களுடன்,அவர்களின் இரு மனைவிமார்களான ஹாஜரா,ஸாரா,அம்மையார்களைத் தவிர அவர்களின் சகோதரர் லூத் (அலை) அவர்களும் இருந்தார்கள். அதற்குப்பிறகு அவர்களின் குழுவில் அவர்களது இரு பிள்ளைகளான நபி இஸ்மாயீல் (அலை) நபி இஸ்ஹாக் (அலை) ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள்.நபி ஈஸா அலை) அவர்களுக்கு முழு முயற்சி செய்த பிறகும் கிடைத்தவர்கள் 12.நபர்கள்.இவர்களும் கடைசி நேரத்தில் அவர்களை கொலை வெறியூதர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர். (மத்தாயு.56,26)

பெரும்பாலான நபிமார்களின் நிலை இவ்வாறு தான் இருந்தது.சில நபிமார்கள் தாங்கள் மட்டுமே இருந்தனர்,சிலருக்கு கூட செல்ல சிலர் கிட்டினர்.மனிதர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் முக்கியமானவர்களாகவும்,மேன்மை மிக்கவர்களாகவும் இருந்தவர்கள் நபிமார்கள்.ஆனால் ஆச்சரியம் என்னவெனில்!எல்லா வரலாற்றிலும் இவர்களே மிகவும் வேண்டாதவர்களாக நடத்தப்பட்டார்கள்.நாட்டை ஆண்ட அரசர்கள்,படை நடத்திச் சென்ற சிப்பாய்களின் சரித்திர சம்பவங்களை, வரலாறுகள் முழுமையாக குறித்து வைத்திருக்கின்றன.ஆனால் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல்,நபி ஈஸா (அலை) அவர்கள் வரை,எந்த நபிக்கும் முறைப்படி தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களில்,இடம் கிடைக்கவில்லை

அரிஸ்டாட்டில் (கி.மு,384 -- 322) நபி மூஸா அலை அவர்களுக்கு,ஆயிர வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர்.ஆனால் நபி மூஸா (அலை) அவர்களின் பெயரைக் கூட அந்த அறிஞர் தெரிந்து வைத்திருக்கவில்லை.இதற்கு காரணம் அதிகமான நபிமார்களை அவர்களின் சமூக மக்களே நிராகரித்துவிட்டார்கள்.அவர்களின்,வீடுகளையும்,சுவடுகளையும்,தொடைத்தெறிந்து சமூகத்தில் மதிப்பில்லாமல் ஆக்கினர்.

அவர்களைக்குறித்து,பதிவு செய்து வைக்கும்,அளவுக்கு அவர்களை முக்கியமானவர்களாக கருதவில்லை.நபிமார்களுடன் அவர்கள் இப்படி ஏன் நடந்துகொண்டார்கள் இதற்கு ஒரே காரணம்தான் இருந்தது.அவர்கள் தங்களுடைய கூட்டத்தார்களை விமர்ச்சித்தார்கள்.மனிதனுக்கு அதிகம் பிடித்தது,அவனைப் புகழ்வது.மனிதனுக்கு அறவேபிடிக்காதது,அவனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது.

நபிமார்கள் எது சரி,எது தவறு என்று தெளிவாக்க வந்தவர்கள்.அதனால் அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் சமரசம் செய்துகொள்ளாமல் அவர்களின் தவறான கொள்கைகளையும்,தவறான செயல்பாடுகளையும்,சாடுவதற்கு சற்றும் தயங்கியதே இல்லை.இதனால் அவர்களின் கூட்டத்தினர் அவர்களுக்கு எதிரிகளாயினர்.இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு என்னவெனில், அந்த நபிமார்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதங்கள்.ஆகமங்கள் மற்றும் இறக்கியருளப்பட்ட இறைச்செய்திகள் எதுவும் பாதுகாக்கப்படாமல் போயின.ஏனெனில் நபிமார்களுக்குப் பிறகு அவைகளை பாதுகாப்பது,அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள்தான்.ஆனால் துரதிஸ்டவசமாக அவர்களைப் பின்பற்றுவோர் யாரும் இல்லாமல் போயினர்.அல்லது அதைப் பாதுகாக்குமளவுக்கு பெரிதாக இல்லாமல் போயினர்.

மனிதர்களின் இந்த நிலை குறித்து ஆதியிலேயே அறிந்திருந்த அல்லாஹ்,ஆதியும்,அந்தமும் இல்லா அந்த காலமில்லா அஸலியத்தான அமைப்பில் அவனது விதிப்படி தீர்க்கமான ஒரு முடிவு செய்திருந்தான் நபிமார்களின் வரிசையில் கடைசி கால கட்டத்தில் தனது பிரத்யேகமான ஒரு வழிகாட்டியை அனுப்புவது என்றும்,அந்த நபியின் மார்க்கம் தழைத்து வளரும்.அவருக்கு தனது பலமான பேருதவி கொண்டு அவர்கள்,ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது முன்னிலையாளர்களை,மிகைத்து,அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தை அவர்களை ஏற்க்க செய்யும் வரை அவர்களை அல்லாஹ் தன் பக்கம் கைப்பற்றுவதில்லை என்றும்,இறைவனின் படை எப்போதும் அவர்களுடன் இருந்து அவர்களை -- நிராகரிப்பவர்களை நிர்மூலமாக்கி இறை மார்க்கத்தை எப்போதும் உறுதியான தளத்தில் கொண்டு வந்து நிறுத்துவது என்றும்,அப்போது இறைவேதத்தை பாதுகாக்க தனி அமைப்பு உருவாகி விடும்,என்றெல்லாம் அவனது இந்த முடிவான முடிவு மண்ணுலகில் மன்னர் நபி(ஸல்) அவர்களின் வருகையால் வாகை சூடியது.''

'' எப்படி கடல்,நீரால் நிரம்பிஉள்ளதோ அது போல பூமி,இறைவனின் மகத்துவமிக்க ஆன்மீக அறிவால் நிறையும்.'' என்ற பைபிளின் வார்த்தை வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வருகையால் நடந்தேறியது.ஆயிரமாயிரம்,ஆண்டுக்கு முன்னரே வேதமறைகளின் மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்ட அந்த நபி,அரேபியாவின் பாலைவன பூகோள அமைப்பிலிருந்து தோன்றுவார்.இஸ்ரவேலர்களின் இன்னொரு வீட்டிலிருந்து தோன்றுவார் -- அதாவது அவர்களது சகோதரர்களான பனூ இஸ்மாயீல் சந்ததியினரின் பிள்ளைகளிலிருந்து தோன்றுவார் -- அது ஏசுவின் வருகைக்குப் பிறகு ஆகியிருக்கும். அவர்களுடைய தோழர்கள்.'' இறைவனால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள்'' எனப்படுவர். அவர்களை எதிர்க்கும் சமுதாயம் நாசத்தை சந்திக்கும்.ஆதி மலை (போன்ற) பாரசிகமும்,ரோமபுரியும்,அவருக்கு முன் மண்டியிடும்.அவர்களின் ஆட்சி தரையிலும்,கடலிலும்,வியாபித்திருக்கும்.என்பன போன்ற, இறுதி நபியை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது -- இன்னும் பல விளக்கத்தொகுப்புகள் பல அழித்தல் திருத்தல்களுக்கு மத்தியிலும்  மாறாமல் மறுதலிக்க  முடியாமல் இன்னும் பைபிளில் காணப்படுவது கண்டிப்பாக ஒரு அதிசயமே!

குறிப்பாக ஏசு நாதர் நபி (ஈஸா) அவர்கள்,இவ்வுலகிற்கு வருகை தந்ததே உலகிற்கு குறிப்பாக யூதர்களுக்கு இறுதி நபியின் வருகை குறித்து,விழிப்பூட்டுவதற்காகத்தான்.எந்த புதிய ஏற்பாட்டைக்குறித்து நன்மாராயங்கூறினார்களோஅது யதார்தத்தில் இஸ்லாமாகும்.இது யூதர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பனு இஸ்மாயீல் மூலமாக நிலை நிறுத்தப்படவிருந்த சத்திய மார்க்கமாகும்.இந்த வகையில் ; இஞ்ஞில் என்பது புதிய ஏற்பாடல்ல.புதிய ஏற்பாடான இஸ்லாம் குறித்த நன்மாராயமேயாகும்.

ஹழறத் நபி ஈஸா (அலை) அவர்கள்,இறுதி நபிக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு வருகை புரிந்தார்கள்.திருக்குர்ஆனில் ( 61; 06) வருகிறது.நபி ஈஸா அலை அவர்கள்,பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களிடம் கூறினார்கள்.அல்லாஹ் என்னை அடுத்து வரக்கூடிய நபியைக் குறித்து நற்செய்தி சொல்வதற்காக அனுப்பினான்.அவர்கள் எனக்குப்பிறகு வருவார்கள்,''அவர்களின் பெயர் அஹ்மது'' என்பதாகும்.

அஹ்மது -- முஹம்மது,இந்த இரண்டும் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள்.இதன் பொருள் ''புகழப்பட்டவர்''இஞ்ஜில் பர்னாபாஸில் ''முஹம்மது'' என்று தெளிவாகவே அவர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.

யூஹன்னாவின் பைபிளில் -- இஞ்ஜீலில்) முன்னறிவிப்பு செய்யப்பட்ட,வரப்போகும் இறைதூதரின் பெயர் முன்ஹமன்னா'' இதற்கு கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட போது '' பாரகலீது'' என்று ஆகிவிட்டது.இதுதான் இப்போது பிரபல்யம்.

இப்படி நற்செய்தி சொல்லப்பட்ட சுந்தர் நபி (ஸல்) அவர்கள்.கி.பி 570 ஏப்ரல்.20 திங்கட்கிழமை அரபு நாட்டில் திருமக்கா நகரில் பிறந்தார்கள்.63 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி 633 ஜூன்.08 திங்கட்கிழமை திரு மதினாவில் மறைந்தார்கள்.

நபித்துவப் பிரகடனம் செய்து மொத்தம் 23 ஆண்டுகளே அழைப்புப் பணி செய்தார்கள். ஆகக்குறைந்த இந்த கால கட்டத்தில் அரபு இனக்குழுக்களுக்கு மத்தியில் அவர்கள் ஏற்படுத்திய எழுச்சி,இஸ்லாமிய சகோதரத்துவ ஏகத்துவப்புரட்சி,வரலாற்றில் ஈடு இணையற்றது.இந்த இஸ்லாமியப்புரட்சி நூறு ஆண்டுக்கும் குறைவானதொரு கால கட்டத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசான பாரசிக சாசானி சாம்ராஜ்யத்தையும்,ரோமாபுரியின் பாஸநதினி பேரரசையும் கைப்பற்றியது

ஒரு பக்கம் இராக் ஈரானிலிருந்து ரஷியாவின் புகாரா வரை.மறுபக்கம் சிரியா, பாலஸ்தீனத்திலிருந்து எகிப்து மற்றும் வட ஆப்ரிக்கா முழுவதையும் வெற்றி கொண்டது.பின்னர் இந்த வெற்றி முகாம் மேற்கு பக்கம் திரும்பியது.கி.பி.711-ல் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக்கடந்து ஸ்பெயின் மற்றும் புர்துகாலில் பிரவேசித்தது.

மேற்கு ஐரோப்பாவில் கி.பி 732--ல் அடியெடுத்து வைத்த இஸ்லாமியப்படை பிரான்ஸ் மன்னர் ஜார்லஸ் கார்ட்லால் 'தூர்''என்னுமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.இது மட்டும் நிகழாமல் இருந்தால் ஜவஹர் லால் நேரு எழுதுவது போல் இன்று ஐரோப்பாவின் மதம் இஸ்லாமாக இருந்திருக்கும்.இடையில் இரண்டு நூற்றாண்டுகள் சிலுவை யுத்தம்.அதற்குப்பின் மங்கோலியப்படையினரால் இரத்தவெறி தாக்குதல்கள்.எல்லாம் இருந்தும் 15 ஆம் நூற்றாண்டு வரை பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.எனினும் உள் மோதலால் ஸ்பெயினை மட்டும் இழக்கவேண்டியது வந்தது.அதற்குப்பிறகு உள் வெளி ஆற்றல் துர்க்கியர்களையும்,முகலாயர்களையும் தூக்கி நிலை நிறுத்தியது துர்க்கியர் 1453 --ல் காஸ்டான்டி நோபிலை வெற்றி பெற்றனர்.கிழக்கு ஐரோப்பாவில் யுகோஸ்லாவியா வரை சென்றனர்.

வியன்னாவுக்கு முன்னர் 1683 வரை துருக்கிப்படை இருந்தது.16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள்,இந்தியா,ஆப்கானிஸ்தானில்,இஸ்லாமியர் ஆட்சியை நிறுவினர்.ஆக 13 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு இஸ்லாம் எந்த அளவு விரிவடைந்தது என்றால் இன்று உலகில் அனேகமாக எல்லா பகுதியிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

உலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்.ஐம்பது நாடுகளில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் உள்ளனர்.இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு மூலதனம்,அந்த் 23 ஆண்டு கால அழைப்பு பணி.ஹிஜ்ரத்துக்குப்பிறகு ஆறு வருடம் கழித்து உம்ராவுக்கு வந்தபோது 1400.பேர் இருந்த ஸஹாபாக்கள்.இன்னும் இரண்டு வருடம் கழித்து மக்கா வெற்றிக்கு வந்த போது 10.000 பேர் இருந்தனர்.இது மதீனாவிலிருந்து மட்டும் வந்த முஸ்லிம்கள் தான்.மற்ற ஊரிலிருந்து வந்தவர்களையும் சேர்த்தால் 12,000.முஸ்லிம்கள்.அடுத்து  இரண்டு வருடம் கழித்து, இறுதி ஹஜ்ஜுக்கு வந்த முஸ்லிம்கள்,பெருமானாருடன் மதீனாவிலிருந்து புறப்பட்டவர்கள் மட்டும் 90,000.மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் சேர்த்தால் இன்னும் அதிகம்.ஒரு அறிவிப்பின் படி 1,24,000.பேர் இருந்தார்கள்.

இவர்கள் மூலம் உலகெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.5.PILLIAN. (200 கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.இவ்வளவு பெரிய குறியீட்டை எட்ட உதவியது  நபிகள் நாயகத்தின் 23 ஆண்டுகால சரித்திரமே! அல்ஹம்துலில்லாஹ்...

 என்றும் தங்களன்புள்ள.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மன்னர் நபியின் மாண்பார் அற்புதங்கள் !!!


வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்களின் வாழ்வுக்காலம்.
அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்புவியில் சந்திரக் கணக்குப்படி 63 ஆண்டுகள், 3 நாட்கள், 6 மணி நேரமும்,சூரியக் கணக்குப்படி 61 ஆண்டுகள், 49 நாட்கள், 6 மணிநேரமும் வாழ்ந்து வையகத்திற்கு வெற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.

சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்களின் சரீர சக்தி!

ஒரு நபிக்கு 500 மனிதர்களின் சக்தி உண்டு,காரணம் வஹியைத்தாங்க அதிக சக்தி வேண்டும். ஆனால் நீதர்  நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்கள் 40 நபியின் சக்தியை கொடுக்கப்பட்டவர்கள்.சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார்!..... ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்.

1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  தங்கள் முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப் பார்ப்பது போன்றே,பின்னாலும் தொலைவிலும் இருப்பதையும் ஏக காலத்தில் ஒன்றாகவே பார்ப்பவர்களாக இருந்தார்கள்.

2. பகலிலும்,வெளிச்சத்திலும் பார்ப்பதைப் போன்றே,இரவிலும்,இருளிலும் சிறியன - பெரியன யாவையும் பார்ப்பார்கள்.

3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும்.

4. பாலருந்தும் பாலர்களின் வாயைத் தங்களின் முபாரக்கான உதட்டுடன் இணைத்து முத்தமிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்களின் உமிழ் நீர் பட்ட அக் குழந்தை அன்று முழுவதும் பசி தீர்ந்திருக்கும்.தாயைப் பாலுண்ணத் தேடாது.இதனைத் தங்கள் வீட்டுக் குழந்தைகள் விஷயத்தில் அனுபவ ரீதியாக காணப் பட்டிருக்கிறது.

5. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  'அக்குள் ' பகுதி வெண்மையாகவும் நறுமணம் கமழுவதாகவுமிருக்கும்.

6. அவர்கள் வெளியிடும் சப்தம் அருகிலிருப்பவர்களுக்கு, உரத்ததாகத் தோன்றாது. ஆனால் தொலை தூரம் வரை சென்று கேட்கும்.

7. அது போன்றே மற்றவர்களால் கேட்க முடியாத, வெகு தொலைவிலிருந்து வரும் சப்தத்தை  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்கள் மிகத் தெளிவாக கேட்பார்கள்.

8. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  தூக்கத்தின் போது  உடல் மட்டும் தூங்கும்,உள்ளம் விழித்தே இருக்கும்.கண்கள் உறங்கும்.கல்பு    ( இதயம் ) உறங்காது.

9. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு  எப்பொழுதும் கொட்டாவி ஏற்பட்டதில்லை.

10. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை,அம்பர் கஸ்தூரி போன்ற நறுமணத் திரவியங்களை நாணச் செய்து விடும் அளவுக்கு சிறந்த மணமுள்ளதாக இருக்கும்.

11. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் திரு மேனியிலிருந்து நறுமணம்,அவர்கள் சென்ற வழியிலுள்ள காற்றில் கலந்து நின்று,அவர்களை சந்திக்கத் தேடி வருபவர்களுக்கு வழி காட்டும்.

12.  நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  பிறந்த போது தொப்புள் கொய்யப்பட்ட நிலையில் பிறந்தார்கள்.

13. அது போன்றே கலிமா விரலை வானின் பால் உயர்த்தியவர்களாக,  நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்தார்கள்.

14. காத்தமுன் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்கள்  கத்னா ( சுன்னத் ) செய்யப்பட்டவர்களாகப் பிறந்தார்கள்.

15. அவ்வாறே தொழுகையின் உச்சகட்டமான சுஜூதுடைய நிலையில் கிப்லாவை முன்னோக்கியவர்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள் பிறந்தார்கள்.

16. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சரீரத்தில்  ( மலம் ஜலம் ) போன்ற அசுத்தங்கள் எதுவும்,எப்பொழுதும் பட்டதில்லை.

17. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  பால்குடித்த பருவத்திலேயே மற்றவ ( மனித ) ர்களிடம் வசனித்திருக்கிறார்கள்.

18. எப்பொழுதும் வெயில் காலத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள் தலைக்கு மேல் சூரியன் நிழல் தரும்.

19. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் உடைகள்,ஆடைகள் மீது எப்பொழுதும் ஈக்கள் உட்காருவதில்லை.

20. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் சிறு நீரில் வாடையே ஏற்படுவதில்லை.

21. ஆத்ம உலகில் ( ஆலமுல் அர்வாஹில் ) முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆத்மா  (ரூஹ் ) நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் ஆத்மாவே ஆகும்.

22. நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு ஒருபோதும் உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டதில்லை.

23. ஒரு கூட்டத்தின் மத்தியில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் அமர்ந்தால் அவர்களின் இரு புஜங்களும் மிக 
உயர்வாகக் காட்சி தரும்.

24. ஆத்ம உலகில் ' அலஸ்து பிரப்பிகும் ' நான் உங்கள் இறைவனல்லவா? என்று இறைவன் வாக்குறுதி கேட்ட போது '' பலா '' -- ஆம்! என முதன் முதலில் ஒப்புதல் அளித்தவர்களும்,நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே ஆவார்கள். வஸ்ஸலாம்.

நன்றி ;- 1990 ஆம் ஆண்டு, இராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை மாநாட்டு மலர்.

- ; என்றும் தங்களன்புள்ள ;-


மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா மர்ஹூம் 
S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் 
ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
(முன்னால் இமாம். வாழூர் மற்றும் சித்தார்கோட்டை )

வெளியீடு ;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யா, வாழூர்.

சுப்ஹான மௌலிது ஷரீஃப் தமிழாக்கத்துடன் !!!!




வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முதல் மீலாது மாநாடு !!!


இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம்.

ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது.

வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர்.
وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا

தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89

பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர் அண்ணல் நபி நாயகம் [ஸல்] அவர்களுக்கு முதல் மீலாது மாநாடு நடத்தப்பட்டது.

அந்த மீலாது மாநாட்டை நடத்தியவன், எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா வாகும். அந்த மாநாட்டில் கலந்து பங்கேற்றவர்கள், இவ்வுலகை திருத்த வந்த தீர்க்கதரிசிகளான இலட்சத்திற்கும் அதிகமான நபிமார்கள். மாநாட்டு சிறப்பு சொற்பொழிவு, அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனாகிய அல்லாஹ் தஆலா நிகழ்த்தினான்.

அந்த மீலாது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் :-
"இப்பிரபஞ்சத்தில் நபிமார்களாகிய உங்களுக்கு வேதமும் ஞானமும் வழங்கி,பிறகு இந்த நபி ஸல் அவர்கள் உங்களிடம் வருகை தரும்போது நீங்கள் அனைவரும் அந்த நபியை விசுவாசிக்க வேண்டும்.அவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்க வேண்டும்"
இதற்கு பிறகு இந்த தீர்மானத்தை அங்கிருந்த அனைத்து நபிமார்களும் வழிமொழிந்தார்கள்.இது வின்னில் நடந்த மீலாது விழா.

இனி இந்த மண்ணில் நடக்கப்போகிற எல்லா மீலாது விழா மட்டுமல்ல எல்லா நிகழ்வுக்கும் அஸ்திவாரமாக அமைந்த ஆதார நிகழ்ச்சி.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آَتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ

"அல்லாஹ் நபிமார்களிடம் வாக்குறுதி வாங்கினான்.வேதத்தையும் ஞானத்தையும் நான் உங்களுக்கு கொடுத்து பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் [நபி ஸல்] உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்.[இதனை] நீங்கள் உறுதி படுத்தினீரிகளா? இதன் மீது எனது வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா என்று அல்லாஹ் கேட்டான்.[அதற்கு] அவர்கள்,நாங்கள் [அதனை] உறுதிபடுத்துகிறோம் என்று கூறினார்கள்.[இதற்கு] நீங்கள் சாட்சியாக இருங்கள். நானும் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கிறேன்.
எனவே இதற்குப் பின்னர் எவரேனும் புறக்கனித்தால் நிச்சயமாக அவர் தாம் பாவிகள்" என்று அல்லாஹ் கூறினான். [அல்குர்ஆன் 3 81,82]

قال علي بن أبي طالب وابن عمه عبد الله بن عباس، رضي الله عنهما: ما بعث الله نبيا من الأنبياء إلا أخذ عليه الميثاق، لئن بَعَث محمدًا وهو حَيّ ليؤمنن به ولينصرنه، وأمَرَه أن يأخذ الميثاق على أمته: لئن بعث محمد [صلى الله عليه وسلم] 
وهم أحياء ليؤمِنُنَّ به ولينصرُنَّه.

இந்த வசனத்திற்கு விளக்கமளித்த ஹள்ரத் அலி [ரலி] அவர்கள்,ஹள்ரத் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் கூறினார்கள் :-  எல்லா நபிமார்களிடமும் நமது நாயகம் முஹம்மது முஸ்தபா [ஸல்] அவர்களைப் பற்றி அல்லாஹ் வாக்குறுதி வாங்கினான்.நபியவர்கள் உங்கள் காலத்தில் வந்தால் நீங்கள் அவர்களை விசுவாசித்து உதவி செய்ய வேண்டும்.மேலும் உங்கள் சமூகத்தாரிடமும் இதைப்பற்றி பிரஸ்தாபிக்க வேண்டும். [இப்னு கசீர்]

இவ்விதம் வாக்குறுதி வாங்காத எந்த நபியும் இல்லை.இதன் படி எல்லா நபிமார்களும் தங்கள் சமூகத்தாரிடம் இறுதி நபியின் வருகையைப்பற்றி எடுத்துச்சொல்லி அவர்களை விசுவாசித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வாக்குறுதி வாங்கினார்கள்.

பெருமானார் ஸல் அவர்களின் உம்மத்தில் நாம் மட்டுமல்ல.முந்தைய நபிமார்களும் அவர்களின் உம்மத்துகளும் அடங்குவர்.எனவே நமது நாயகம் ஸல் அவர்கள் நமக்கு மட்டுமல்ல நபிமார்களுக்கும் நபியாக இருக்கிறார்கள்.

ஆகவே தான் ஒரு ஹதீஸில் ;

والذي نفسي بيده ! لو كان موسى حيا ما وسعه إلا أن يتبعني

"இன்று மூஸா நபி [அலை] அவர்கள் உயிருடன் இருந்தால் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை " என்று நபி [ஸல்] அவர்கள் அருளினார்கள். [முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா]
இன்னொரு நபிமொழியில் ; "ஈசா நபி [அலை] அவர்கள் இறுதி காலத்தில் இறங்கினால் அவர்கள் குர்ஆனையும் உங்களுடைய நபியின் சட்டங்களையும் தான் அமல் செய்வார்கள்" வந்துள்ளது.
இதன் மூலம் தெரிய வரும் உண்மைகள் ; நாயகம் [ஸல்] அவர்களின் நபித்துவம் சர்வதேச அம்சம் கொண்டது.அவர்களின் ஷரீஅத்தில் முந்தைய எல்லா நபிமார்களின் ஷரீஅத்தும் மூழ்கி விடும் என்பதாகும்.

மேலும்  وَبُعِثْتُ إِلَى النَّاسِ كَافَّةً

"நான் சர்வதேச மக்களுக்கு ஒட்டு மொத்த நபியாக அனுப்பப் பட்டுள்ளேன்" [புகாரி,முஸ்லிம்] என்று நபிகளார் சொன்னது, அவர்களின் காலத்திலிருந்து கியாமத் வரை உள்ள எதிர் காலத்தை நோக்கி நீளும் நபித்துவத்தை மட்டுமல்ல.அவர்களின் நபித்துக் காலம்,அதை விடவும் ரொம்ப விசாலமானது.கடந்த காலத்தையும் கடந்து ஆதிபிதா ஆதம் நபி [அலை] அவர்களின் நபித்துவத்திற்கும முந்தி தொடங்குகிறது.
ஒரு நபிமொழியில்,

عن عبد الله بن شقيق أن رجلا سأل النبي (ص) : متى كنت نبيا ؟ قال : 
كنت نبيا وآدم بين الروح والجسد.

 "ஆதம் நபி [அலை] அவர்கள் ஜடத்திற்கும் ஆன்மாவிற்கும் இடையில் இருக்கும்போதே நான் நபியாக இருந்தேன்" என வந்துள்ளது. [முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா]

மஹ்ஷர் பெருவெளியில் ஷஃபாஅத்தே குப்ரா – மாபெரும் சிபாரிசு செய்யும் மகத்தான வாய்ப்பு, எல்லா நபிமார்களும் அவர்களின் "லிவாவுல் ஹம்து" என்னும் புகழ் கொடியின் கீழ் ஒன்று கூடுவது,மிஃராஜ் இரவு சம்பவத்தில் பைத்துல் முகத்தஸில் வைத்து எல்லா நபிமார்களுக்கும் இமாமத் செய்த சிறப்பு இதுவெல்லாம் நாயகத்தின் சர்வதேச நபித்துவத் திற்கும் மாபெரும் தலைமைத் துவத்திற்கும் தகுந்த சான்றுகளாகும்.

மேலும் இது அனைத்துலக சமூகத்தை ஈர்க்கும் ஒரு ராஜ தந்திர நிகழ்வாகும். நாம் நபியாக ஏற்றுக் கொண்டிருக்கும் நபிமார்களே இந்த நபி முஹம்மது [ஸல்] அவர்களை நபியாக விசுவாசித்து அவர்களின் தலைமையை ஒப்புக் கொள்கிறார்கள் என்றால், நாம் நமது நபியைப் பின்பற்றி, இந்த இறுதி நபியை விசுவாசித்து, இஸ்லாத்தை ஏற்போம் என்று எல்லா சமூகமும் இஸ்லாத்தை ஏற்க எளிதில் முன் வருவார்கள்.

"இஸ்லாத்தை ஏற்பது தங்களது நபிக்கு எதிரானதல்ல.ஆதரவானதே!" என்பதை புரிகிற போது இடையில் இருக்கிற இருக்கம் அகன்று,அகத்தில் இடம்பிடித்திருந்த  வேறுபாடுகள் விலகி மனதளவில் இருந்த தடைகளும் நீங்கி விடுகிறது. நபிமார்களிடத்தில் அல்லஹ் வாங்கிய உறுதி மொழி அந்த நபிமர்களை நம்பியிருக்கும் சமூகத்தாரின் மனதில், இறுதி நபியை ஏற்பதில் இருக்கும் தயக்கத்தைப் போக்கி விடுவதற்கு மனோதத்துவ ரீதியில் நடைபெற்ற சிறந்ததோர் சிகிச்சையாகும்.

இத்தகு மீலாது விழாக்கள் ஏன் நடத்தப்பட வேண்டும் என்றால், நபியின் மாண்பை எடுத்து இயம்புவதோடு எவ்வளவு தான் நபி [ஸல்] அவர்கள் ஏற்றம் பெற்றாலும், "அவர்கள் அல்லாஹ் அல்ல" என்பதை இந்த மீலாது விழா பறைசாட்டுகிறது.

காரணம் அல்லாஹ்வுக்கு மீலாது – பிறப்பு இல்லை. நபி [ஸல்] அவர்களுக்கு மீலாது விழா எடுப்பதன் மூலம் அவர்களின் பிறப்பை – சிறப்பை எடுத்துச் சொல்வதன் மூலம் – அவர்கள் மனிதப்பிறவி தான். கடவுளல்ல என்பதை தெளிவு படுத்துகிறோம்.
இந்த வகையில் பார்த்தால், மீலாது விழாக்கள் ஷிர்க்கை ஒழித்து ஏகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

பாலஸ்தீன் யூதர்களுக்கு இரசூலாக – இறைத்தூதராக அனுப்பப்பட்ட நபி ஈசா [அலை] என்ற ஏசுவை உலகின் எல்லா இடத்திற்கு எடுத்துச் சென்று விட்டது கிருஸ்துவ சமூகம். ஆனால் இன்டர்நேஷனல் நபியாக எல்லா காலத்துக்கும் எல்லா கண்டத்திற்கும் நபியாக இறைத்தூதராக அனுப்பப்பட்ட அஹ்மது நபி, தாஹா நபி, முஹம்மது [ஸல்] அவர்களை – அவர்கள் கொண்டு வந்த செய்தியை எவ்வளவு தூரம் முஸ்லிம்களாகிய நாம் கொண்டு சென்றிருக்கிறோம்? இதுதான் மீலாது செய்தியும் சிந்தனையும். சிந்திப்போமோ? செயல்படுவோமோ?

 என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மௌலித் என்பது பித்அத்தாகுமா? அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகுமா?


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இல்லாத அல்லது செய்யாத கந்தூரிகளை, கத்தமுல் குர்ஆன் எனும் ஈஸால் ஸவாப் மற்றும் ஸியாரதுல் குபூர் மற்றும் ஏராளமாக உள்ள தரீக்கா வழிமுறைகளை எவ்வாறு நாம் செய்யலாம்? அது பித்அத்தான செயல்பாடுகள்தானே, பித்அத்கள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்வதாக நபிமொழி கூறுகிறதே? நபி ﷺ செய்யாத நல்ல விடயங்களை செய்யலாமா? 

ஆம், இருள் நிறைந்த பாதையில் செல்லவேண்டுமெனில் அங்கு வெளிச்சம் தேவைப்படும். அவ்வாறு வெளிச்சம் இன்றேல் அவன் பாதையில் வழி தவற நேரிடும். இது போலவே மார்க்கச்சட்ட விளக்கங்களைப் பெறும்போது சரியாக அறிந்தவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களை பெறவேண்டும். இமாம்களை புறக்கணித்து சுயபுத்தியைக் கொண்டு குர்ஆன், ஹதீஸை ஆராய்வது தடியெடுத்தவன் வேட்டைக்காரன் என்பதற்கு ஒப்பானதொன்றாக காணப்படுகிறது. பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன போன்ற விடயங்களுக்கு எமது இமாம்கள் கூறிய விளக்கங்களையும், பித்அத்தை வாதமாக கொண்டு ஸுன்னத்தான வழிமுறைகளையும், ஸஹாபாக்கள் முதல் நல்லடியார்கள் வரை மார்க்கத்தின் பெயரால் தோற்றுவித்த நற்செயல் முறைகள், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட நல்ல வழிமுறைகளை எதிர்த்து நிற்கும் சகோதரர்களின் வாதங்களுக்கான தெளிவை அறிந்து வைப்பது ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அந்த வகையில் பித்அத் எனும் நூதன வழிமுறை பற்றிய விளக்கத்தை கீழே காணலாம். 

பித்அத்தை (புதிதாக உருவாக்கப்பட்டது) இரண்டு வகையாக பிரிக்கலாம். 

* பித்அதுல் ஹஸனிய்யா (அழகான நூதனம்) 
* பித்அதுல் ஸய்யிஆ (கெட்ட நூதனம்) 

1. பித்அதுல் ஹஸனிய்யா (அழகான நூதனம்)

எல்லா பித்அத்தும் வழிகேடு என்ற விளக்கம் எந்தவொரு இமாமாலும் கூறப்படவில்லை. இமாம்களின் விளக்கப்படி பித்அத்தை இரண்டு வகையாக பிரித்து அதில் பித்அதுல் ஹஸனிய்யா என்ற அழகிய வழிமுறைகளை செய்வது ஆகும். என்றும் அதற்கு நன்மையுண்டு. எனவும் இமாம்கள் ஆராய்ந்து தீர்ப்பளித்துள்ளார்கள். மௌலித் என்பதும், கத்முல் குர்ஆன், தரீக்கா வழிமுறைகள் அனைத்தும் இந்த பகுதியில்தான் உள்ளடக்கப்படும், இவைகள் ஏன் உருவாக்கப்பட்டன, எதற்காக உருவாக்கப்பட்டன, அதில் நடக்கின்ற விடயங்கள்தான் என்ன என்று பார்த்த பின்புதான் எதிர்க்க முற்படவேண்டும். வெறுமனே கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்களா இல்லையா என்ற விடயத்தை மட்டும் பார்த்தோமானால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது. ஏனெனில் அவ்வாறு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் செய்தால் அல்லது சொன்னால் மாத்திரம் செய்ய வேண்டுமெனில் இன்று காணப்படும் தர்ஜுமதுல் குர்ஆனையோ, ஸஹீஹுல் புஹாரியையோ பின்பற்ற முடியாமல் போய்விடும். சரியான செய்தியை அறிய புஹாரியைத்தான் பார்க்க வேண்டும் என்றோ ஹதீஸ்களின் ஸஹீஹ், லஹீப் தரம் பற்றியோ எதுவும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டார்களா? இல்லை. அவ்வாறாயின் இவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஸுன்னாவிற்கு வரைவிலக்கணத்தை சரியாக புரியாததனால் வந்த கோளாராகவே கருத முடியும். ஸுன்னா என்றால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சொல், அன்னவர்களின் செயல், அன்னவர்கள் மார்க்க விடயமாயினும், ஏனைய விடயங்களாயினும் ஸஹாபாக்கள் நடந்து கொண்ட முறைகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம், என்றால் எப்படி ஸஹாபாக்களின் நடைமுறை பிழையாக முடியும்? கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை பற்றி நாயகத்தோழர்கள் ஓதிய மவ்லிதுகளை சற்று பாருங்கள். 

ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைபோன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப்பிரார்த்தித்தார்கள். 
அறிவிப்பவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)  நூல் - புகாரி எண் 453, முஸ்லிம் 4545. மிஷ்காத் 

இதே ஸஹாபியின் மற்றொரு சம்பவத்தில், இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும் 
(அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)  நூல்: முஸ்லிம் எண்: 4545 கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிய மவ்லித் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது பார்க்கவும். (நூல்: ஹாகிம் எண்: 6558) 

மதீனாவுக்கு செல்லும்போது சிறுவர், சிறுமிகளால் தலஅல் பத்ரு கஸீதா படித்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வரவேற்கப்பட்டார்கள். இது போன்று இன்னும் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றதை அன்னவர்களின் வரலாற்றிலே காணலாம். இவைகளுக்கு இந்த வழிகேடர்கள் என்ன பெயர்கொண்டு அழைக்கப் போகிறார்கள். இது பற்றி என்ன தீர்ப்பு கூறப்போகிறார்கள். 

எனவே அன்பின் வாலிபர்களே! நிகழ்வுகளின் வடிவங்கள் வேண்டுமானால் வேறுபட்டிருக்கலாம். ஆனால் அடிப்படை எல்லாம் ஒன்றென்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அன்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன்னை புகழ்ந்து பாடுவதற்காக மேடை போட்டு கொடுத்தார்கள். ஆனால் இன்று அது புகழ்மாலைகளாக கோர்வை செய்யப்பட்டும், அவர்களின் சரிதைகள் தொகுக்கப்பட்டும் மௌலித் என்ற பெயரில் இன்று அது நடைமுறைப் படுத்தப்படுகின்றது. இதில் என்ன தவறு இருக்கின்றது? ஒரு வகையில்இது ஒரு ஸுன்னத்தான வழிமுறையாக இருக்கும் போது ஏன் இவைகளை பிரச்சினையான ஒரு விடயமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? என்பது தான் புரியாமல் இருக்கின்றது. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் ஏன் அப்படி கந்தூரி ஓதவில்லை, அவர்களின் சிறப்புகளை புத்தகங்களில் எழுதி ஏன் வாசிக்கவில்லை என்று கேள்வி கேட்கிறார்கள். என்றால் அது அவர்களின் அறிவீனத்தை உலகுக்கு காட்சிப்படுத்தும் விடயமாகவே கருத வேண்டியிருக்கிறது. ஏனென்றால் கதாநாயகன் நேரடியாகவே மக்களோடு வாழும் போது கதாநாயகனின் சிறப்புகளை புத்தகம் எழுதித்தான் வாசிக்கவேண்டும். என்ற அவசியம் கிடையாது, கதாநாயகன் வாழும் போது சிறப்புகளை பாக்களாக இயற்றி, மெட்டுக்களை போட்டுத்தான் பாடவேண்டும். என்ற அவசியமும் கிடையாது. ஏனெனில் ஸஹாபாக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் நினைவுபடுத்துவார்கள். அன்னவர்களை புகழ்ந்து படிப்பார்கள். அதற்கு நன்மையுண்டு உண்டு. இது போன்ற கவிகளை ஸஹாபாக்கள் படித்தும் இருக்கிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களின் வாயிலாக அறிகின்றோம். அப்படியானால் இது போன்ற விடயங்களுக்கு அங்கீகாரம் உண்டா இல்லையா என்று பார்க்கவே கூடாது என்ற முடிவுக்கு வரமுடியும். மேலே குறிப்பிட்ட ஸஹாபாக்கள் மூலம் இவைபோன்ற விடயங்களை அனுமதித்திருக்கும் பொழுது எதற்காகத்தான் இந்த வஹாபிகள் அடம்பிடிக்கிரார்கள் என்பதுதான் திகைப்பாக இருக்கிறது. 

2. பித்அதுல் ஸய்யிஆ (கெட்ட நூதனம்) 

இரண்டாம் வகை பித்அத் என்பதுதான் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டித்த கெட்ட வழிமுறையாகும். இந்த பித்அத்துதான் நரகில் கொண்டுபோய்ச்சேர்க்கும். உதாரணம் ஓர் மதுபானசாலையை உருவாக்குதல், போதை தரக்கூடிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தல், வட்டி கலந்த நிறுவனங்களை அமைத்தல், மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம் உம்மத்தை கூறுபோட்டு பிரித்தல், இதன் மூலம் ஏப்பம் விடும் ஸியோனிஸ்ட்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தல், இப்னு தைமியாவினால் உருவாக்கப்பட்டு முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபினால் வார்த்தெடுக்கப்பட்ட வஹ்ஹாபிக்கொள்கை போன்ற ஏராளமான பாவம் கிட்டக்கூடிய அம்சங்களே இவ்வகை பித்அத்தை சாரும். மேலும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் பெரும்பாவங்கள் எனக்கூறப்பட்ட வட்டி, மதுபானம், சூது, கொலை போன்ற பாவப்பட்டியல்களில் கூட மௌலித், மற்றும் மேலே கூறப்பட்ட எவ்வழிமுறையும் இல்லை. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் கூறப்பட்ட இறுதிநாள் அடையாளங்கள் ஏராளம் இருக்க அதில் எங்கேயும், அஹ்லுஸ்ஸுன்னா வழிமுறைகளான கத்தமுள் குர்ஆன், மௌலித் வைபவங்கள் போன்றவைகளை குறித்துக்காட்டி இவ்வழிமுறைகளிலிருந்து சமூகத்தை எச்சரிக்கைப்படுத்தப்படவுமில்லை. இல்லை நாம் ‘ஷிர்க் வைக்கிறோம் என்று கூறும் வஹ்ஹாபிகளின் பிரதான குற்றச்சாட்டை எடுத்து நோக்கினால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எனது உம்மத் ‘ஷிர்க் வைப்பார்கள்’ என்பதை நான் பயப்படவில்லை. நான் பயப்படுவதேல்லாம் ரியா என்ற முகஸ்துதியும், அல்குர்ஆனுக்கு சொந்தக்கருத்து கூறுவதையும் தான் என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்குர்ஆனுக்கு சொந்த கருத்து கூறுபவர்களும் இதே வஹ்ஹாபிகள்தான் இதனை வேறு தலைப்பில் விரிவாக அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையானால் இது பற்றிய மேலதிக விபரங்களை அப்துல் பாரி ஆலிம் அவர்களின் (இஸ்லாத்தை அழிக்கும் வஹ்ஹாபிகள், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் வஹ்ஹாபிகள் என்ற தலைப்புகளில் பேசிய பயான்களை) www abdulbary.tk என்ற இணையத்தளத்தில் போய்ப்பார்க்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். மேலும் வஹ்ஹாபிகள் குல்லு பித்அதின் ழலாளா என்பதற்கு எல்லாம் என்று தான் பொருள் கொடுக்கவேண்டும் என்றுகூட வைத்துக்கொண்டாலும் விளைவு விபரீதத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும். 

* முதலாம் கலீபா அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்திலே அல்குர்ஆனை ஒன்று திரட்டி நூலுருப்படுத்தினார்கள். 

* உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் காலத்தில் ஜமாஅத்தாக செய்யாத தராவிஹ் தொழுகையை முதன் முதலில் அறிமுகம்செய்து ஆரம்பித்து வைத்தார்கள். 

* உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் ஜும்மாவுக்கு முன் சிறு அதான் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். 

அன்பின் வாலிபர்களே! மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் செய்யாத அல்லது சொல்லாத விடயங்களை மூன்று முக்கிய ஸஹாபாக்கள் புதிதாக ஏற்படுத்தி இஸ்லாமிய நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அத்தோடு இந்த ஸஹாபாக்கள் மேற்படி விடயங்களை ஏற்படுத்தியதன் காரணத்தால் இம்மார்க்கம் பூர்த்தியாக்கப்பட்டது என்ற நாயகத்தின் வாக்கும், அல்குர்ஆனின் அறிவிப்புக்கும் மாற்றமாக அமையாது அப்படி மாற்றமாக இருக்குமானால் ஸஹாபாக்கள் செய்யவும் மாட்டார்கள். அத்துடன் குல்லு பித்அதின் ழலாளா என்ற ஹதீஸ் வாசகத்திற்கு எல்லா பித்அத்துகளும் என்று வியாக்கியானம் சொல்வதானால் இதனை விட ஆபத்தான ஒரு முடிவை எடுக்கவும் நிர்பந்திக்கப்பட வேண்டியிருக்கும்.

நிச்சயமாக அல்லாஹ் எல்லா வஸ்துவின் மீதும் சக்தி படைத்தவன்’ அப்படியானால் இந்த இடத்தில் குல்லு என்ற சொல்லுக்கு எல்லாம் என்ற பொருளைத்தான் எடுக்க வேண்டுமெனில் அல்லாஹ் அவனின் ஸாத்திலும் (ஸிபத்து அல்லது அவனின் பண்புகள்) சக்தி படைத்தவனாக முடியுமா? உதாரணமாக அல்லாஹ்வுக்கு அடக்கியாளும் வல்லமையுடையவன் என்ற தன்மை காணப்படுகிறது. இங்கே அல்லாஹ்வுக்கு அல்லாஹ்வை அடக்கியாள முடியுமா? இது போலவே எல்லா வஸ்துவின் மீதும் சக்தி படைத்தவன் என்றால் அல்லாஹ்வின் சக்தியிலும் அல்லாஹ் சக்திபடைத்தவனாக முடியுமா? முடியாது இந்த இடத்தில் இதற்கான விளக்கம் மனித சக்திக்கும், கற்பனைக்கும், அறிவிற்கும் உட்பட்ட வஸ்து படைப்பினங்களில் அவனின் வஸ்துவைத் தவிரவுள்ள கற்பனை அறிவுகளுக்கு உட்படாத வஸ்து என்பதுதான் இதற்கான பொருளாகும். 

அல்குர்ஆனின் மேலும் ஒரு வசனத்தில் ‘குல்லு நப்ஸின் தாஇகதுல் மௌத்’ எல்லா ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என குறிப்பிடுகின்றது. மற்றுமொரு இடத்தில் சூரா மாஇதா 116 வது வசனம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் கேட்கிறார்கள் ‘இறைவனே! நீ என்னுடைய நப்ஸில் (உள்ளத்தில்) உள்ளவற்றை எல்லாம் அறிகின்றாய். ஆனால் எனக்கோ உன் நப்சில் இருக்கும் விடயத்தை அறிய முடியாதவனாய் இருக்கிறேன். மேலும் மறைவான விடயங்கள் அனைத்தையும் நீதான் அறிந்தவன்.’ என கூறினார்கள். எனவே இங்கே இறைவனுக்கும் நப்ஸ் ஒன்று உண்டு என பார்க்கிறோம். அவ்வாறெனில் மேலுள்ள குர்ஆன் வசனத்திற்கு குல்லு நப்ஸ் எல்லா நப்ஸும்தான் என்று கருத்தெடுத்தால் இறைவனின் நப்ஸ் (ஆத்மாவும்) மரணிக்கும் என்ற ஆபத்தான முடிவை எடுக்க நேரிடும் என்பதை வஹ்ஹாபிகளால் ஏன் இன்னும் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை. தௌஹீத் என்று வெறுமனே பெயரை வைத்துக்கொண்டு பித்அத் என்ற வாதத்தில் இறைவனுக்கே மரணம் உண்டு என்பதை கூறும் தனது கொள்கையின் குப்ரியத்தான அல்லது இறைவனுக்கே இணைவைக்கும் இந்த விபரீதங்களை ஏன் இன்னும் அக்கொள்கையிலுள்ள சகோதரர்கள் அறியாமல் இருக்கிறார்கள்? 


சற்று சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! 

மேலே பித்அத் பற்றிய போதிய விளக்கத்தையும் அது தொடர்பான ஆதாரங்களையெல்லாம் மேலே குறிப்பிட்டேன். அத்தோடு மௌலித் கந்தூரி வைபவங்களில் நடைபெறுவதென்ன எனப்பார்த்தால் அங்கே அல்குர்ஆன் வசனங்கள் ஓதப்படுகின்றன, நபிமார்கள், வலிமார்களின் சரிதைகள் வாசிக்கப்படுகின்றன. அவர்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் செய்த சேவைகள் போற்றப்படுகின்றன. அவர்களை பாக்கலாகவும், கவிதைகளாகவும் பாராட்டி பாடப்படுகின்றன. அவர்கள் மூலம் வஸீலா தேடப்படுகின்றன. ஸலவாத், திக்ர்கள் செய்யப்படுகின்றன. உணவு பரிமாற்றம் செய்கின்றனர். இவைகள்போன்ற நல்ல விடயங்களை கூட்டாக உருவாக்கி செய்வது எப்படி தவறாக முடியும்? இவைகளுக்கு இஸ்லாத்தில் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இதற்கு அங்கீகாரமும் வழங்கியுள்ளனர். 

கதீஜா நாயகியவர்கள் தனக்கு ஹிரா மலைக்கு உணவு கொண்டு வந்து கொடுத்த நிகழ்வு மற்றும் வஹி இறக்கப்பட்டு முதன் முதலில் கதீஜா நாயகியவர்களிடம் ஓடோடிப்போய் என்னைப் “போர்த்துங்கள் என்னைப் போர்த்துங்கள்” என்று உதவிகேட்டதையும் அவர்களின் நற்குணங்களையும் இஸ்லாத்திற்கு செய்த சேவைகளையும் அடிக்கடி சொல்வார்கள். சில சந்தர்ப்பங்களில் கதீஜா நாயகியவர்களை ஞாபகம் செய்துவிட்டு அன்னாரின் பெயரால் ஆடுகளை வாங்கி அறுத்து அதன் மாமிசங்களை கதீஜா நாயகியின் தோழியர்களுக்கு அனுப்பியும் வைப்பார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா. நூல்: புஹாரி) என்ற ஹதீஸ் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களே கதீஜா நாயகியவர்களுக்கு மௌலித் ஓதி சாப்பாடு பரிமாரியிருக்கிரார்கள். என்பதைப் பார்க்கிறோம். எனவே மேலே கூறப்பட்ட மௌலித் மற்றும் கந்தூரி மஜ்லிஸ்களில் பாவம் விளைகிறதா? நன்மை விளைகிறதா? எனப்பாருங்கள் இல்லை இல்லை கந்தூரி ஓதுவதைவிட குர்ஆன் ஓதினால் நன்மைதானே மௌலித் ஓதுவதற்கு நன்மை கிடையாதே எனக்கூறுவோர் அல்குர்ஆனின் இந்த வசனத்திற்கு என்ன கூறப்போகின்றார்கள்? ‘யார் ஓர் அணுவளவு நன்மை செய்கின்றாரோ அவர் அதற்கான கூலியையும் கண்டு கொள்வார், யார் அணுவளவு பாவம் செய்கின்றாரோ அவர் அதற்கான கூலியும் கண்டுகொள்வார்’ (அல்குர்ஆன்) 

எனவே இறைவன்தான் யாவற்றுக்கும் கூலிவழங்குபவனாவான், எனவே இறைவன் நாடியவர்களுக்கு நன்மையை வழங்குவான். இதைத்தீர்மானிக்க எந்த ஒரு அடியானாலும் முடியாது. இறைவனின் தீர்ப்புகளிலும் இறைவன் அடியார்களுக்கு வழங்கும் அருட்கொடைகளில் எந்தவொரு அடியானும் இறைவனோடு கூட்டுச்சேர்ந்து வரையறை போடவும் முடியாது. இவற்றுக்கு நன்மையுண்டு என்பதை ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் சம்பவம் (முஸ்லிம் எண் 4545) என்ற ஹதீஸ் மூலம் நிரூபனமாவதால் இதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது. 

அது மாத்திரமல்ல இஸ்லாத்தில் ஜினாயத் என்ற குற்றப்பரிகார தண்டனைகளை எடுத்து நோக்கினால் மதுபானம் அருந்தியவனுக்கு இத்தனை கசையடி என்றும் விபச்சாரம் புரிந்தவனுக்கு இத்தனை கசையடிகள் என்றும் கொலைக்கு இன்ன தண்டனை என்றெல்லாம் குறிப்பிட்ட இஸ்லாம் ஏன் மௌலித்கள் கந்தூரிகளுக்கு குறிப்பிடவில்லை. அப்படியாயின் நன்மை தீமைகளை பதியும் மலக்குமார்கள் இதன் கூலியை எங்கு பதிவர்கள் வலப்பக்கமா? இடப்பக்கமா? எனவே இணைவைத்தலுக்கோ, பித்அத்துக்கோ தெளிவான ஆதாரமோ விளக்கமோ இல்லாத போது தௌஹீத் என்று பெயரை மாத்திரம் வைப்பதனால் அவன் உண்மையான ஏகத்துவ வாதியாக முடியுமா? விதண்டாவாதங்களை விடுத்து பித்அத்வாதங்களை முடித்து ஸுன்னத்தை எடுத்து நடந்து ஈருலகிலும் ஜெயம்பெற்ற அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்திலே வாழ்ந்து மரணிப்பதற்கு எல்லாம் வல்ல ரைவன் நல்லருள்பாலிப்பானாக ஆமீன். 

இறுதியாக பின்வரும் கூற்றுக்களை வாசித்து வஹ்ஹாபிகளால் இக்கேள்விக்கு என்ன பதில் தரப்போகின்றார்கள் என்பதை அன்பின் வாலிபர்களே உங்களின் போலித்தௌஹீத் நண்பர்களிடமும் கேட்டு ஒரு முடிவுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

* பித்அத் என்ற மார்க்கத்தில் புதியன ஏற்படுத்தல் என்பதில் இரண்டு விடயங்கள் இருக்கலாமா? அல்லது குல்லு என்ற வசனத்திற்கு எல்லா பித்அத்தும் என்றுதான் பொருள் எடுக்க வேண்டுமா? 

* நல்ல புதியவழிமுறைகள் பல்வேறுபட்ட துறைகளிலும் ஆரம்பிக்கலாம் எனில் அதே நல்ல நூதன வழிமுறைகளில் மௌலித் போன்றவைகளில் சேர்க்காமலிருப்பதன் காரணமென்ன? 

* கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் காலத்தில் செய்த நபி மீது புகழ்பாடுதல், அவர்களின் சிறப்புக்கள் கூறும் மஜ்லிஸுகள் கதீஜா நாயகி மீது நடத்திய நினைவு மஜ்லிஸுகள் போன்றவற்றை என்ன பெயர் கொண்டு அழைக்கலாம்? அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? 

* கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், வலிமார்கள் போன்றோரின் சரிதைகளை வாசிக்க கூடாது என்பதற்கு பித்அத் என்பதைத் தவிரவுள்ள ஆதாரங்கள் யாவை? 

* உண்மையில் பித்அத் என்ற வாதத்தைத்தான் முன்வைக்கின்றீர்கள் என்றால் மேலே பித்அத்துக்கள் பல செய்த ஸஹாபாக்கள் நரகவாதிகள் என குறிப்பிடுவீர்களா? 

* மேலும் எல்லா நூதனமும் என்ற பொருளைத்தான் எடுக்க வேண்டுமென்றால் இறைவனின் விடயத்தில் வரும் குல்லு என்ற சொல்லுக்கும் அப்படித்தான் பொருள் எடுக்க வேண்டுமா? அப்படி அதற்கு முடியாது என்றால் ஏன் இந்த விடயத்திலும் அவ்விதி பொருந்தாமல் இருப்பது? 

* இது போன்ற மௌலிதுகள், கந்தூரிகள் மற்றுமுள்ள தரீக்கா வழிமுறைகளை செய்வதனால் இஸ்லாமிய தண்டனை முறையில் கிடைக்கும் தண்டனை யாது? 

* அல்குர்ஆனோ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களோ தெளிவாக குறிப்பிடாத இணைவைத்தல், கெட்ட பித்அத் போன்ற மிகப்பெரிய பாவங்களை ஏற்படுத்தக்கூடிய காரணிகளில் எவ்வாறு மௌலித், கந்தூரிகளை குறிப்பிட்டு தீர்ப்பு சொல்வது? இதற்கான அடிப்படை எங்கிருந்து பெறப்பட்டது? 

* உலகில் பல்வேறுபட்ட பிரதேசங்களிலும் பிரபலமான இமாம்கள், வலிமார்கள் ஹதீஸ்களை அறிஞர்கள் குறிப்பாக புர்தாவை இயற்றிய இமாம் பூஸரி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் போன்றவர்களின் நிலை என்ன? வஹ்ஹாபிகளின் பார்வையில் இவர்கள் பித்அத்து செய்தார்கள் என்றால் இவர்களும் நரகம்தான் செல்வார்களா? 

* கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கதீஜா நாயகியின் பெயரால் ஆட்டை அறுத்து மாமிசத்தை தர்மம் செய்தது போல் முஸ்லிம்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பெயரிலும், ஸஹாபாக்கள், வலிமார்கள் பெயரிலும் பிராணிகளை அறுத்து உணவளிக்கும் முறையிலும் ஏதும் வேறுபாடுகள் காணப்படுகின்றதா? 

SUKRAN - - MAILOF ISLAM.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மீலாது விழாவின் அடிப்படை நோக்கங்கள் !!!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!! 

மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள் :

மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும்.

இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும். 

அல்லாஹுதஆலா கூறுகிறான்:
"அல்லாஹுதஆலா உங்களுக்கு செய்த நிஹ்மத்தை நினைவு கூறுங்கள்." இவ்வசனத்தின் மூலமாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த தினத்தை நாங்கள் கொண்டாடுகின்றோம். காரணம் அருட்கொடைகளிலே மிகச் சிறந்த அருட்கொடை இறுதி தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஆவார்கள். 

மற்றுமொரு ஆயத்தில் அல்லாஹ் குறிப்பிடும் போது:
"உங்களுடைய அல்லாஹ் அளித்த நிஹ்மத்துகளை சொல்லிக்காட்டுங்கள்." இவ்வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ் எங்களுக்கு அளித்த எத்தனையோ விதமான அருட்கொடைகளை நாங்கள் சொல்லி காட்டுகிறோம். எனவே அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகையே. எனவே அவர்களின் வருகையை கொண்டாடுவது எவ்வாறு விலக்கப்பட்ட விடயம் என்று கூற முடியும்? 

மற்றொரு ஆயத்தில் அல்லாஹு த ஆலா குறிப்பிடுகின்றான்:
"அல்லாஹு த ஆலா முஹ்மின்களின் மீது மாபெரும் உபகாரத்தை செய்துள்ளான். எப்பொழுதெனில் அவர்களில் ஒரு ரசூலை அனுப்பிய போது." இவ்வாயத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது. 

எனவே நபிமார்களுடைய பிறப்பு பற்றி எடுத்து சொல்லுவது என்பது இறை வழிமுறையில் நின்றும் உள்ளது என்பது தெளிவாகின்றது. அது மட்டும் இன்றி அல்லாஹு தஆலா குர் ஆனிலே பல இடங்களில் நபிமார்களுடைய பிறப்புகளை பற்றி கூறுகிறான் உதாரணமாக: நபி ஈஸா அலைஹி ஸலாம் அவர்களுடைய பிறப்பையும் அச்சமயம் ஏற்பட்ட அற்புதங்களையும், அவர்களுடைய வாழ்கையில் நடந்த சம்பவங்களையும் அதே போன்று நபி மூசா அலைஹி ஸலாம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பு, வளர்ந்த முறை, நபித்துவம் பெறல் போன்ற அனைத்தையும் அல்லாஹு சிறப்பான முறையில் குறிப்பிடுகின்றான். 

இதே அமலைதான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் இது இறை வழிமுறை. இறை வழிமுறையை ஏற்று நடப்பது தான் நல்லடியார்களின் பண்பு. அது மட்டுமன்றி நபி ஈஸா, நபி மூசா அலைஹி ஸலாம் அன்னவர்களுடைய பிறப்பை எடுத்து சொல்வதே மிக உன்னதமான செயலாயின் நபிமார்களிலே இறுதியானவரும், மிக உயர்வானவருமாகிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை எடுத்துக் கூறுவது மிகவும் சிறப்பானது. 

நபியவர்களும் ஸஹாபா பெருமக்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் யா ரசூலல்லாஹ்!! உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள். என சஹாபாக்கள் கூறுவார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள். என இமாம் ஹாகிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கின்றார்கள். (பைலுள் கதீர் - ஷரஹு ஜாமிஉஸ்ஷகீர்)

இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. 

மாறாக மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும். எப்படி என்றால்,
"அல்லாஹ்வுடைய "பள்ல்" " ரஹ்மத்" தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்." என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (10 - 58)

மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" " ரஹ்மத்" என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். 

ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும். 

எனவே இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஹுமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக!

நன்றி ;- MAIL OF ISLAM .

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Wednesday, November 23, 2016

ஒடுக்கத்துப் புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ


ஒடுக்கத்துப் புதன் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும் 
“புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து 
நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது 
சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது.
அன்று யாராவது நான்கு “றக்அத்” தொழுது ஒவ்வொறு 
றக்அத்திலும் பாத்திஹா சூறா ஒதியபின் “இன்னாஅஃ தைனா 
கல் கவ்தர்” என்ற சூறத்தை 17 தரமும், “குல்குவல்லாஹ்வை” 
05 தரமும்,“குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும் “குல் அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் 
அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்துப் புதன் ஓர் ஆய்வு !!!



கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன?

பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர்.
பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233

குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது.

நன்றி: வஸீலா 1-11-87

ஒடுக்கத்துப் புதன் 
بسم الله الرحمن الرحيم
سَلاَمٌ قَوْلاًَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى 
وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ .

இதை கரைத்து குடித்த பின் நக்ஷபந்தியா ஷெய்குமார்கள் பேரில் பாத்திஹா ஓதி ஹதியா செய்யவும்.

ஒடுக்கத்துப் புதன் உண்டா?
சபர் மாத இறுதிப் புதன் கிழமையினையே ஒடுக்கத்துப் புதன்என்று அழைக்கின்றனர்.
இந்த நாளில் வாழை இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும்வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம்
இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களாக இருந்தனர்.அவர்களின் பார்வையில் இது மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே தெரிந்தது. எனவே அதை அவர்கள் தடுக்கவில்லை.

எனவே இது பற்றி திருக்குர்ஆனும் நபி மொழிகளும், இஸ்லாமிய அறிஞர்களால் சொல்லப்பட்ட தகவல்களையும் சுருக்கமாகத் தருகின்றோம்.
அல்லாஹ் படைத்த ஏழு நாட்களில் கெட்ட நாள், மிடிமை,கஷ்டம், நோய் போன்றவற்றுக்கான நாள் உண்டு என்பதற்கு திருக்குர்ஆனில் ஆதாரம் உள்ளது. 
انا ارسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ("ஆத்" கூட்டத்தினர் மீது) "நஹ்ஸ்" உடைய நாளில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – கமர் அத்தியாயம் – வசனம் – 101 
فارسلنا عليهم ريحا صرصرا في ايام نحسات
நிச்சயமாக நாம் அவர்கள் மீது "நஹ்ஸ்" உடைய நாட்களில் கடுமையான காற்றை அனுப்பி வைத்தோம். 
திருக்குர்ஆன் – புஸ்ஸிலத் அத்தியாயம் – வசனம் – 16 
மேற்கண்ட இரு வசனங்களிலும் முன் வாழ்ந்த கூட்டத்தினருக்கு அல்லாஹ் கடுங் காற்றை அனுப்பி அவர்களைத் தண்டித்ததாக கூறியுள்ளான். 
மேற்கண்ட இரு வசனங்களில் முந்திய வசனத்தில் "நஹ்ஸ்" என்ற சொல் ஒருமையாகவும் இரண்டாம் வசனத்தில் பன்மையாகவும் வந்துள்ளது. இச்சொல்லுக்கு தீமை, மிடிமை,தரித்திரம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மேற்கண்ட இரு வசனங்கள் மூலம் "நஹ்ஸ்" உடைய நாளொன்று உண்டு என்பது தெளிவாகின்றது. 

அந்நாள் எது என்பதில்அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது இவ்விவரத்தை சரியாக அறிந்து கொள்வதாயின் "ஆத்" கூட்டத்தினருக்கு அல்லாஹ் பயங்கர காற்றை காற்றைஅனுப்பிய மாதம், நாள் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். இதில் கூட வரலாற்று ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. எனினும் இது தொடர்பாக சொல்லப்பட்டுள்ள பலருடைய கருத்துக்களையும் இங்கு தருகின்றோம்.

அந்த நாள் புதன் கிழமைதான் என்று அநேக அறிஞர்கள் கருத்துக் கூறி உள்ளனர். ஆயினும் அவர்கள் எந்த மாதம் என்பது பற்றி தெளிவாகவும் திட்டவட்டமாகவும் ஒன்றும் சொன்னதாகக் காணவில்லை. தப்சீர் றூஹுல் மஆநீயில் ஆசிரியர் அவர்கள்தங்களின் மேற்கண்ட விரிவுரை நூல் 27 ம் பாகம் 119 ம் பக்கத்தில் அது  ஷவ்வால் மாதப் பிற் பகுதியிலுள்ள புதன் கிழமை என்று கூறியுள்ளார்கள். அல்லாமா வகீஉ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் "குறர்" என்ற நூலில் ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன்கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்துள்ளதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத்தொட்டும் வந்துள்ள நபீ மொழியை இப்னு மர்தவைஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும், அல்ஹதீபுல் பக்தாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் அறிவித்துள்ளதாக எழுதியுள்ளார்கள். இமாம் தபறானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அந்நாள் புதன் கிழமை என்று தங்களின்தபறானீ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஆயினும் மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் அபூ ஹாதம், இப்னு ஜவ்ஸீ, இப்னு றஜப், சகாவீ ஆகியோர் "ழயீப்"  பலம் குறைந்தவை என்று கூறி உள்ளனர்.

புதன் கிழமை "நஹ்ஸ்' உடைய நாள் என்று தகவல்  இருப்பது போல அது நல்ல நாள் என்றும் தகவல் உள்ளன. மின்ஹாஜுல் ஹுலைமீ, ஷுஆபுல் பைஹகீ ஆகிய இரு நூல்களிலும் புதன் கிழமை மதிய நேரத்தின் பின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இமாம் புர்ஹானுல் இஸ்லாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்கள் "ஹிதாயஹ்" என்ற நூலில் வந்துள்ளதாக "தஃலீமுல் முதஅல்லிம்" என்ற நூலில், புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என்றும் அன்றுதான் அல்லாஹ் ஒளியைப் படைத்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் பெரியோர்கள்-ஹஸ்ரத்மார்கள் கல்வி சம்பந்தமான வகுப்புக்களை புதன் கிழமையில் தொடக்கி வந்துள்ளார்கள். அதோடு புதன் கிழமை கல்விக்குரிய நாளென்றும் பரவலாக கணிக்கப் படுகின்றது. 

எவனாவது புதன் கிழமை மரங்களை நட்டு "சுப்ஹானல் பாஇதில் வாரிதி" என்று சொல்வானாயின் அவை அவனுக்கு காய் கனிகளைக் கொடுக்கும் என்ற இந்த நபீ மொழியை ஜாபீர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இப்னு ஹிப்பான் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் தைலமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும்  தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள். இந்த நபீ மொழியை ஆதாரமாகக் கொண்டு பெரியோர்கள் செயல் பட்டு வந்துள்ளார்கள்.

புதன் கிழமை "நஹ்ஸ்" உடைய நாள் என்பதற்கு சில தகவல்களை இங்கு தருகிறோம். "எனது உம்மத்துக்கள் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று நான் அவர்களை பணித்திருப்பேன்" என்று பி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  கூறியதாக ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹ அறிவித்துள்ளார்கள். இந்த நபீ மொழி "பிர்தௌஸ்" என்ற நூலில் பதிவாகி உள்ளது" 

'வார நாட்களில் சனிக்கிழமை – சூட்சி, துரோகத்துக்குரிய நாளாகும். ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல், கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். வியாழக் கிழமை தேவைகளைத் தேடுவதற்கும் அதிகாரிகளிடம் செல்வதற்கும் உரிய நாளாகும்.வெள்ளிக் கிழமை திருமணப் பேச்சுக்கும், திருமணம் செய்வதற்கும் பொருத்தமான நாளாகும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். 

இந்த நபீ மொழியை இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅறிவித்ததாக அபூயஃலா ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும், அபூ சயீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் அறிவித்ததாக இப்னு அதிய்யஹ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், தமாம் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களும் "அல்பவாயித்"என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

ஆயினும் சகாவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இந்த நபீ மொழியை பலவீனமானது என்று கூறியுள்ளார்கள். 

வெண்குஷ்டம்,கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபீ மொழியை இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவித்துள்ளதாக இப்னு மாஜாவும், வேறு இரு வழிகளில் ஹாகிம் அவர்களும் பதிவு செய்துள்ளார்கள். புதன் கிழமை நகம் வெட்டுதல் கூடாதென்றும் அவ்வாறு செய்தால் குஷ்ட நோய் வரும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒருநோயாளியிடம் நலம் விசாரிக்கச் செல்வது நல்லதெனினும் அதை புதன் கிழமை தவிர்த்துக் கொள்வது நல்லதென்று தகவல்கள் கூறுகின்றன. 

புதன் கிழமை மிடிமைக்குரிய நாளாக கருதப்படும் என்றும்,மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிகவும் கடுமையான மிடிமைக்குரிய நாளென்றும் "அர்றவ்ழஹ்" என்ற நூலில்கூறப்பட்டுள்ளது.

மாதத்தின் கடைசிப் புதன் கிழமை மிடிமைக்குரிய நாளென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுஅறிவித்தார்கள்.   

"ரூஹுல் பயான்" என்ற திருக்குர்ஆன் விரிவுரை நூல் வால்யூம் 09 பக்கம் 324 புதன் கிழமையில் சுவர்கத்து நீர் உலகத்து நீருடன் கலக்கப் படுவதால் அன்று குளிப்பதுசிறந்ததென்று கூறப் பட்டுள்ளது. 

தண்டனை பெற்ற எந்த ஒரு கூட்டமாயினும் அது புதன் கிழமையிலேயே தண்டிக்க பட்டுள்ளது. இத்தகவல் ரூஹுள் பயான் வால்யூம் 08 பக்கம் 328 இல் இடம்பெற்றுள்ளது.

சபர் மாதத்தின் கடைசிப் புதன் கிழமையில் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள், துன்பங்கள் இறங்குவதாகவும்,வருட நாட்களில் அந்நாள் ஒன்று மட்டுமே கஷ்டமான நாள் என்றும் இறைஞானிகள் சொல்லியிருப்பதாக "முஜர்றபாதுத் தைறபீ" என்ற நூல் 103 ம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது. 
அஷ் ஷெய்குல் காமில் பரீதுத்தீன் மஸ்ஊத் கன்ஜே ஷகர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், தங்களின் ஞான குரு ஹாஜா முயீனுத்தீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹிஅவர்களின் அவ்ராத் தொகுப்பில் பின்வருமாறு இருக்கத் தான் கண்டதாக கூறியுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் முன்னூற்று இருபதாயிரம் சோதனைகள் – துன்பங்கள் இறங்குகின்றன அவை யாவும் சபர் மாதத்தின் இறுதிப் புதன் கிழமையிலேயே இறங்குகின்றன. அந்த வருட நாட்களில் இந்நாள் மிகவும் கஷ்டமானது. அன்று யாராவது நான்கு ரக்அத் தொழுது நான்குரக்அத்திலும் "பாத்திஹா சூரா" ஓதிய பின் இன்னா அஃதைனாகல் கவ்தர் என்ற சூரத்தை 17 தடவைகளும்,குல்ஹுவல்லாஹ்வை ஐந்து தரமும் , குல் அஊது பிறப்பில் பலக் ஒரு தரமும், குல் அஊது பிறப்பின் நாஸ் ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும் அவன் சகல பலாய்களிலிருந்தும் பாதுகாக்கப் படுவான். பின்பு "சலாம்" என்று சொல்லப்படுகின்ற திருக்குர்ஆன் வசனங்களை பன்னீர், கஸ்தூரி,குங்குமம் கொண்டு பீங்கானில் எழுதிக்குடிக்கவும் வேண்டும்.

 பழாயிறுஷ் ஷுஹூரில் ஹிஜ்ரிய்யஹ் – பக்கம் – 33 ,34 
من بشرني بخروج صفر ابشره بالجنة
சபர் மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச்செய்தி சொல்பவனுக்கு சுவர்கத்தைக் கொண்டு நான் சுபச்செய்தி சொல்வேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறியுள்ளார்கள் என்றும் "ஹயாதுல் ஹயவான்" என்ற நூல் முதலாம் பாகம் 120 ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

"இஆனதுத் தாலிபீன்" என்ற சட்டக்கலை நூலை எழுதியவரும்,  மக்காவில் பிறந்து மதீனாவில் சமாதி கொண்டுள்ளவருமான அஸ்ஸெய்யித் முஹம்மத் ஷதா அத்திம்யாதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களின் "நிஹாயதுல் அமல்" என்ற சட்ட நூலில் 208 ம் பக்கத்தில்ஒடுக்கத்துப் புதன் பற்றிக் குறிப்பிடுகையில் ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய், கஷ்டங்கள், சோதனைகள், "லவ்ஹுல் மஹ்பூல்" பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்துக்கு சபர் மாத இறுதிப் புதனன்று இறக்கப்படுகின்றன. ஆகையால் கீழ் காணும் திருவசனங்களைப்

سلام قولا من رب الرحيم
سلام على عباد الذين اصطفى
سلام على نوح في العلمين سلام على ابراهيم
سلام على موسى وهارون
سلام على الياسين
سلام هي حتى مطلع الفجر

   பாத்திரங்களில் எழுதி அதைத் தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு குறித்த சோதனைகள் ஏற்படமாட்டாது என்று கூறியுள்ளார்கள். 
மக்காவில் பிறந்த இந்த நூலாசிரியர்கள் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது விதண்டாவாதம் செய்வோர் ஒடுக்கத்துப் புதன் பற்றி சொல்லும் கதை மூடத்தனமானது என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் குறிப்பாக'சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமையும் "நஹ்ஸ்" மிடிமைக்குரிய நாட்கள் என்பதற்கான மேற்கண்ட ஆதாரங்கள் கொண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு மரண வருத்தம் "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை ஆரம்பமானதை கருத்திற் கொண்டும் அன்றைய தினம்திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ அல்லது வேறு பாத்திரங்களிலோ எழுதி நோய், மிடிமை, கஷ்டம்,போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் குடிப்பதை இஸ்லாமிய மூத்த அறிஞர்கள் நல்ல காரியமெனக் கூறியுள்ளதால் இவ்வழக்கம் எந்த வகையிலும் "ஹறாம்" ஆகவோ "பித்அத்" ஆகவோ "ஷிர்க்" ஆகவோமாட்டாது. 

எனவே "சபர்" மாதத்தின் இறுதிப் புதன் கிழமை திருக்குர்ஆன் வசனங்களை வாழை இலையிலோ காகிதத்திலோ எழுதிக் கரைத்துக்  குடிப்பதும், உடலில் தேய்த்துக் குளிப்பது "முபாஹ்" ஆகுமாக்கப்பட்ட காரியமே அன்றி அது எந்த வகையிலும் மார்கத்துக்கு முரணாகி விடாது. அதனால் ஏதோ ஒரு வகையில் பயன்தான் கிடைக்குமேயன்றி பாவம் வந்துவிடாது. இது தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளில் பலம் குறைந்தவை என்று வைத்துக் கொண்டாலும் கூட பலம் குறைந்த நபி மொழிகளை ஆதாரமாக கொண்டு செயல்பட முடியுமென்பதை அவர்கள் தெரிந்து கொள்ளல் வேண்டும். இவ்வழக்கம் "ஹறாம்"என்பதற்கோ "ஷிர்க்" என்பதற்கோ ஆதாரம் இல்லாதிருப்பதாலும், ஆனால் "முபாஹ்" ஆஹும் என்பதற்கு ஆதாரம் இருப்பதாலும் இதை தடுப்பது கூடாது என்பதே தெளிவான முடிவு.

நன்றி ;- சூஃபி மன்ஜில்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.