Saturday, January 12, 2013

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் 1487 வது மீலாது விழா




முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!! முஸல்லியன்!!!!வமுஸல்லிமா!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான 
மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம்.

மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு தினங்களும் பயான் செய்யப்படும்,

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1487 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்

Friday, January 11, 2013

தவறு செய்யனுமா? தாராளமாக! ஆனால்....?




பல்கு நாட்டுப் பேரரசராக இருந்து முடி துறந்த இறை ஞானி இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களிடம் வழிகெட்ட ஒரு இளைஞன் வந்து,நான் வரம்பு மீறி நடந்துவிட்டேன்.பல பாவச் செயல்கள் புரிந்து விட்டேன் அதற்காக இப்போது மனம் வருந்துகிறேன். ஆனால் பாவத்தை விட்டும் விலகி வாழ வழி தெரியாமல் வகையற்று உங்கள் முன் வந்து நிற்கிறேன்.நான் திருந்தி வாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார்.

அதற்கு ஞானி மகான் அருளிய உபதேசம் இதோ.நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால்,தாராளமாக நீ தவறு செய்யலாம்.முதலாவது '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்க் -- உணவு எதையும் சாப்பிடாதே!'' இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவ்வாலிபன், '' அது எப்படி முடியும்? எது சாப்பிட்டாலும் அது அவனுடைய ரிஸ்க் -- உணவுதானே! அப்படியானால் அவனுடைய உணவையும் உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா? உண்ட வீட்டுக்கு இது இரண்டகமல்லவா? '' 

ஆம்!  நியாயமில்லைதான்.இரண்டாவது உபதேசத்தைக் கூறுங்கள்''. '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் -- இடத்திலும் தங்காதே! அவனுடைய நாட்டை -- இடத்தை விட்டும் முதலில் வெளியேறிவிடு.'' முன்பை விட இப்போது அதிர்ச்சி அடைந்த அவ்வாலிபன்,எங்கு இருந்தாலும்,சென்றாலும்,எல்லாம் அவனுடைய நாடாக -- இடமாக இருக்க,இது எப்படி சாத்தியமாகும்.என்னப்பா! அப்படியென்றால் அவனுடைய நாட்டில் - இடத்தில் இருந்து கொண்டே அவனுக்கு எதிராக பாவம் செய்யப் போகிறாயா? '' 

இல்லை.இல்லை செய்யமாட்டேன் செய்யவும் கூடாது,'' சரி சரி மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்.நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்குத் தெரியாமல்,அவன் பார்க்காத இடமாகப் பார்த்து அங்கு போய் பாவம் செய்! ''  '' இது எப்படி முடியும் அவன் பார்வை படாத இடமே இவ்வுலகில் இல்லையே! அவன் அந்தரங்கங்களை அறிந்தவனாயிற்றே.'' நிச்சயமாக அவன் ரகசியத்தையும், அதை விட மறைவாக (மனதில்) இருப்பதையும் அறிகிறான்.'' (அல்குர்ஆன் 20 ; 7)

கும்மிருட்டில்,கறுப்புப் பாறையில் ஒரு கறுப்பு எறும்பு ஊர்ந்து போவதையும்,அவன் பார்ப்பவனாயிற்றே! '' அப்படியானால் அவன் பார்க்கிறான் என்று தெரியவே நீ அவனுக்கு மாறு செய்யலாமா நீ தனியறையில் யாருக்கும் தெரியாமல் தவறாக நடக்க முற்படும் போது, அந்த அறையினுள்ள ஒரு துவாரத்தின் வழியாக யாரோ ஒரு ஆள் உன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்தால்,உன்னால் அங்கு தவறு செய்ய முடியுமா ? உனது உடம்பில் டெம்பரேச்சர் அப்படியே இறங்கிவிடாது! ஆம்! நீ வியர்த்து விறு விறுத்துப் போவாய்.உன்னால் அப்போது எந்த தவறும் செய்ய முடியாது.அப்படியானால் உன்னைப் போல ஒரு மனிதன் பார்க்கவே, தவறு செய்ய வெட்கப்படுபவன்,உன்னைப் படைத்த இரட்சகனாம் அல்லாஹ் பார்க்கின்றான் எனத் தெரிந்தும் வெட்க மில்லாமல் அவனுக்கு முன்னால் பாவம் செய்யலாமா ? இது தகுமா ?
கூடவே கூடாது! நான்காவதைக்கூறுங்கள்'' உனது உயிரைக் கைப்பற்ற மலக்குல் மவ்த் -- மரண தூதன் உன்னிடம் வந்தால் அவரிடம் கெஞ்சித் கூத்தாடி கொஞ்சம் டைம் -- தவனை கேள்! தௌபா -- பாவ மன்னிப்புக் கேட்டு மீட்சி பெறுவதற்கு ''

'' அது நடக்கவே நடக்காதே '' அவர்களுடைய காலம் வரும் பட்சத்தில் ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள், முந்தவும் மாட்டார்கள் '' (அல்குர்ஆன் 7 ; 34) 
என்று அல்லாஹ் கூறுகின்றானே.

'' மரணத்தை தள்ளி வைக்க முடியாது என்று தெரிந்திருக்கும் நீ, பாவத்தில் மூழ்கியிருக்கும் போது உனது மரண நேரம் வந்து விட்டால் உனது கதி என்னவாகும்''? '' விபச்சாரம் செய்பவன் அவன் விபச்சாரம் செய்யும் போது அவன் முஃமினாக -- இறை விசுவாசியாக இருக்கமாட்டான்.திருடன் திருடும்போது அவன் முஃமினாக இருக்க மாட்டான்.குடிகாரன் குடிக்கும்போது முஃமினாக இருக்கமாட்டான் '' (புகாரி ; 2475, முஸ்லிம் ; 57) என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.ஈமானின் -- இறை நம்பிக்கையின் -- பிரகாசம் உன்னை விட்டும் விலகி இருக்கும் போது உனக்கு மரணம் வந்தால் உன் நிலை என்னவாகும்?

'' ஆகா! ரொம்ப ஆபத்தாகும்.ஐந்தாவது காரியத்தையும் கூறிவிடுங்கள்.''
நரகத்தின் காவலர்களான சபானிய -- மலக்குமார்கள்,வானவர்கள் உன்னை நரகத்திற்கு இழுத்துச் செல்ல உன்னிடம் வந்தால் நீ அவர்களுடன் போகாதே!''

இதுவெல்லாம் நடக்கக்கூடியதா? ஒருக்காலும் நடக்கமுடியாத காரியம்,எனக்கூறி அழ ஆரபித்த அவ்வாலிபர் முடிவில் போதும் போதும் ..... மகான் அவர்களே! நான்  இஸ்திஃக்பார் -- பாவ மன்னிப்பு அல்லாஹ்விடம் கேட்டு,அவனிடமே தௌபா -- மீட்சி பெறுகிறேன்.எனக்கூறி விடைபெற்றார்.

அதற்குப் பிறகு அவர் திருந்தி வாழ்ந்து இறை வணக்கத்திலே முழுமையாக ஈடுபட்டு இறை நேசரானார்.உண்மையான கடவுள் நம்பிக்கையாளன் ஒரு போதும் பாவம் செய்யவே மாட்டார்.அவனது கடவுள் மெய்யாகவும்,அவனது நம்பிக்கை உண்மையாகவும் இல்லாத போதுதான் அவன் பாவம் செய்ய முற்படுகின்றான்.

மெய்யான கடவுளின் வரைவிலக்கணம் அவன் அகிலங்களின் அதிபதி.அவனே படைத்தவன்.உணவளிப்பவன்.எங்கும் நிறைந்த அவனது ஞானம்,பார்வை படாத இடமே இல்லை.அவனுக்கு எங்கும் எதுவும் மறைவானது இல்லை.அவன் ஏகன் இணை துணையற்றவன்.அத்தகய அல்லாஹ்வின் பேரருள் நம் அனைவர் மீதும் நிலவட்டுமாக! ஆமீன்!!! வஸ்ஸலாம்..

என்றும் தங்களன்புள்ள





மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி
(தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா.)

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

Tuesday, January 1, 2013

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்!



நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:


 (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும் 
அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று'' (புஹாரி. முஸ்லிம்)

அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?
அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்.
إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح100، ومسلم 2673].

''நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  (புஹாரி. முஸ்லிம்)


இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுவது:

قال ابن مسعود: عليكم بالعلم قبل أن يرفع، ورفعه هلاك العلماء، والذي نفسي بيده ليودن رجال قتلوا في سبيل الله أن يبعثهم الله علماء لما يرون من كرامتهم. [مفتاح دار السعادة 1/121].
يقول ابن مسعود: أتدرون كيف ينقص الإسلام؟ يكون في القبيلة عالمان، فيموت أحدهما فيذهب نصف العلم، ويموت الآخر فيذهب علمهم كله.
وعنه رضي الله عنه أنه قال: (أتدرون كيف ينقص الإسلام ؟ قالوا: كما ينقص الثوب، وكما ينقص سمن الدابة، وكما ينقص الدرهم. قال: إن ذلك لمنه. وأكبر من ذلك موت العلماء) [رواه الطبراني، وقال الهيثمي: رجاله موثوقون. مجمع الزوائد 1/202]

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதற்குமுன் அறிவை அவசியாமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்கள் மறைவதுதான் அறிவு உயர்த்தப்படுவதாகும்.
அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான தியாகிகள் கூட மறுமையில் ஆலிம்களாக எழுப்பப்படவேண்டுமென்று மிகவும் விரும்புவார்கள் ஏனெனில் மறுமையில் ஆலிம்களுக்கு அவ்வளவு மரியாதையும் சங்கையும் செய்யப்படும் என்பதை அறிந்துகொண்டதால்.
ஆலிம்கள் மறைவதன் மூலம் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிடும்.

ஆலிம்களின் மறைவு அகிலத்தின் முடிவு:

{أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا} [سورة الرعد الآية (41)] قال سيّدنا عبدالله بن عباس رضي الله عنه:نقصانها خرابها، وخرابها بموت علمائها وفقهائها وأهل الخير منها.
''பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?''
என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு குர்ஆன் விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்:
பூமியிலுள்ள ஆலிம்களும் சட்டக்கலை நிபுணர்களும் நல்லவர்களும் குறைந்துகொண்டே வருவதுதான் இங்கு குறிப்படப்பட்டுள்ளது.
எனவே،
 ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:
((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير
நபி ஸல் கூறினார்கள்:
''ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு; நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட லேசானது.''     (தப்ரானி)

 قال رسول الله صلى الله عليه وسلم (فقيه أشد على الشيطان من ألف عابد) رواه الترمذي وابن ماجه وغيرهما. 
''ஆயிரம் வணக்கசாலிகளைவிட ஒரு மார்க்கசட்ட நிபுணர் ஷைத்தானுக்கு மிகக் கடுமையானவர்.'' (திர்மிதி, இப்னுமாஜா)

இந்த நபிமொழிக்கு விளக்கம் தந்த விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுகிறார்கள்:


 إنّ الشياطين قالوا لإبليس: يا سيدنا مالنا نراك تفرح بموت العالم ما لا تفرح بموت العابد؟ والعالم لا نصيب منه والعابد نصيب منه؟ قال: انطلقوا، فانطلقوا إلى عابد فأتوه في عبادته، فقالوا: إنا نريد أن نسألك فانصرف، فقال إبليس: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ فقال: لا أدري، فقال: أترونه كفر في ساعة، ثم جاؤوا إلى عالم في حلقته يضحك أصحابه ويحدثهم فقالوا: إنا نريد أن نسألك، فقال: سل، فقال: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ قال: نعم، قالوا: كيف؟ قال: يقول كن فيكون. فقال: أترون ذلك لا يعدو نفسه، وهذا يفسد عليّ عالماً كثيراً، وفي رواية أخرى قال: فقال: أترون ذلك أترون؟ هذا يهدم في ساعة ما أبنيه في سنين (مفتاح دار السعادة لابن القيّم (2/69)

ஒருமுறை மற்ற ஷைத்தான்களெல்லாம் தலைவன் இப்லீசிடம் வினவினார்களாம்: ''ஒரு ஆபித் இறந்தால் மகிழ்ச்சியடையாத நீ ஒரு ஆலிம் இறந்தால் ஆனந்தத்தில் துள்ளுகிறாயே?''

''அதற்கு காரணம் இருக்கிறது. ஆபிதை (சுலபமாக வழிகெடுத்து ) நாம் நிறைய பலன் பெறமுடிகிறது. ஆனால் ஆலிமிடம் அவ்வாறு முடிவதில்லை. (வாருங்கள் இதைக் கண்கூடாகக் காட்டுகிறேன்)''
முதலில் ஒரு ஆபிதிடம் சென்றார்கள். அவரிடம் வினவினார்கள்:
''அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''எனக்குத் தெரியாது'' என்றார்.
''பார்த்தீர்களா? கண நேரத்தில் அவர் காஃபிராகிவிட்டதை (குஃப்ருடைய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை)!

அடுத்து ஒரு ஆலிமிடம் சென்றார்கள். அவர் தன் சகாக்களிடம் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார்.
இப்லீஸ் கேட்டான்: ''உம்மிடம் ஒரு கேள்வி. அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''நிச்சயமாக முடியும்''
''எப்படி?'' ''
''ஆகு! என்பான் அது ஆகிவிடும்''
''பார்த்தீர்களா? இவர் (எந்த நிலையிலும்) நிலை தவறாமல் இருப்பதை!'' இப்படித்தான் அதிகமான ஆலிம்கள் என்னை நிலைகுலைய வைத்துவிடுகின்றனர். நான் ஆண்டாண்டு காலம் சிரமப்பட்டு அமைத்ததை சிறிது நேரத்தில் தகர்த்துவிடுகின்றனர்'' என்றான் இப்லீஸ்.

அதுமட்டுமல்ல.. அண்ணல் நபி ஸல் அவர்களுக்கும் இப்லீஸுக்கும் நடந்த ஒரு நீண்ட உரையாடலில் ''உன் கோபத்திற்குரிய பிரதான எதிரிகள் யார் யார்? ''என்ற நபிகளாரின் கேள்விக்கு அவன் கூறிய பதிலில் முதலாவது இடம் நாயகம் ஸல் அவர்கள். இரண்டாவது அல்லாஹ்விற்காக தன்னை அற்பணித்த இளைஞன். மூன்றாவது பேணுதலுள்ள ஒரு ஆலிம். அதற்குப் பிறகு அவனது எதிரிகள் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான். அவ்வாறெனில் ஒரு இறையச்சமுள்ள ஆலிம் அல்லாஹ்விற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
நன்றி ;--மௌலானா சதக் மஸ்லஹி

வெளியீடு;--  மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.