Saturday, January 17, 2015

சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)








அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், ஹிஜ்ரி 1436 ரபீஉல் அவ்வல் பிறை 19 (09-01-2015) வெள்ளிக்கிழமை மதியம் 2-30 மணியளவில் சித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா 
ஷஹீத் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் கந்தூரிப் பெருவிழா 
மிகச்சிறப்பாக நடைபெற்றது.















இப்பெருவிழாவில் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின்,
முதல்வர் மற்றும் பேராசிரியர்கள்,இன்னும் சித்தார் கோட்டையின் இமாம்கள்,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் 
மாணவர்கள் இன்னும் வெளியூர் உலமாப் பெருமக்கள்,
பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புனிதம் 
வாய்ந்த மௌலிது ஷரீஃப், ஓதினார்கள்.


இந்நிகழ்ச்சிக்கு வேதாளை ,மௌலானா மௌலவி நூரிஷா தரீக்காவின் ஹலீஃபா,அஷ்ஷைகு அப்துல் கனீ மன்பயீ  ஹஜ்ரத்  அவர்கள்,சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துஆச் செய்தார்கள். 


இந்நிகழ்ச்சியில் உள்ளூர்,மற்றும் வெளியூர் பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,இறைநேச செல்வர்களின் அன்பையும்,பெற்றுக் கொண்டார்கள்.அனைவருக்கும் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது அல்ஹம்து லில்லாஹ் வஸ்ஸலாம்.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய அலுவலகத் திறப்பு விழா !!!


முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின், 
புதிய அலுவலகத் திறப்பு விழா ரபீவுல் அவ்வல் பிறை 
09 ( 01-01-2015 ) வியாழக் கிழமை அன்று அல்லாஹ்வின் 
மாபெரும் பேரருளால் திறப்பு விழா கண்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.


இவ்விழாவிற்கு கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா 
அரபுக் கல்லூரியின் அரங்காவலர்,மற்றும் 
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவத் தலைவருமான,அல்லாமா அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு 
டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A(Hons),M.A..,Ph.D.
அவர்கள் தலைமை தாங்கி,அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். 






இராமநாதபுரம் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகளின்  தலைவர்கள்.நிர்வாகிகள் மற்றும் ஏழு வட்டார 
ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்கள்,
செயலாளர்கள் & பொருளாலர்கள் ஆகியோர்கள் 
முன்னிலை வகித்தார்கள்.


இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் 
தலைவர் மௌலானா அல்ஹாஜ் A.வலியுல்லாஹ் 
ஹஜ்ரத் நூரி அவர்கள் துவக்கவுரையாற்றினார்கள்.

இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலானா அல்ஹாஜ் M.அப்துற் ரஹ்மான் மிஸ்பாஹி 
ஹஜ்ரத் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்கள்.


இராமநாதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் 
A.அன்வர் ராஜா Mp அவர்கள் வாழ்த்துரையாற்றினார்கள்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாலர், மற்றும் மதுரை ஜாமிஆ நாஃபிவுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா அல்ஹாஜ் M.முஹம்மது காசிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,மற்றும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர், மற்றும் காரைக்குடி ஜாமிஆ பத்ஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் முதல்வருமான, மௌலானா அல்ஹாஜ் A.முஹம்மது ரிழா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் 
ஆகியோர் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.


இவ்விழாவில் மாவட்டதின் பல பகுதிகளிலிருந்தும் 
ஏராளமான உலமாப் பெருமக்கள் கலந்து சிறப்பித்தனர். 
அல்ஹம்து லில்லாஹ். வஸ்ஸலாம்.

வெளியீடு  -- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

மலேசியத் தலைநகர்,கோலாலம்பூரில் நடை பெற்ற மாபெரும் மீலாதுப் பெருவிழா மற்றும் மீலாது ஊர்வலம் !!!


முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுன்னத் ஜமாஅத் கோட்டையான, வளம் கொழிக்கும் மலேசியாவில்,
மலேசிய மொழியில் '' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் 
மீலாதுப் பெருவிழா மற்றும் மீலாது ஊர்வலம் ( 03-01 2015 ) சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி,மலேசியாவின் மாமன்னர்,மற்றும் பிரதமர்,தலைமையில்,அமைச்சர்கள், முன்னிலையில் 
மிகச்சிறப்பாக, மலேசிய அரசாங்கத்தால் நடத்தப்பட்டது.

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், கண்ணிய மிகு உலமாப் பெருமக்கள், 
மற்றும் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களுக்கு,
தொக்கோ '' மௌலிதுர் ரஸுல் '' என்ற சிறப்பு  விருதுகள் 
வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இது போன்று மலேசியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்,அந்தந்த மாநிலங்களின் மாமன்னர்கள் மற்றும் முதலமைச்சர்களின் தலைமையில் நடைபெற்றது. '' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும்,மலேசியா முழுவதும், 
மலேசியா அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.

இச்சிறப்பு வாய்ந்த '' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவில்  
பல்லாயிரக்கணக்காணோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

                                       இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற்ற 
'' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் 
பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவின் 
வீடியோ காட்சிகள்.

முதல் பாகம்.



இரண்டாம் பாகம்.



மூன்றாம்  பாகம்.



 நான்காம் பாகம்.



இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற்ற
'' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும்
பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவின்
புகைப்படங்கள்.























வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.