Thursday, July 28, 2016

முஸ்தபா மஸ்லஹியின் முன் மண்டியிட்ட வஹ்ஹாபிசம் ( த த ஜ )


கோவையில் நடந்த மாநாடு ஒன்றில் வஹ்ஹாபிகளே! உங்களுக்கு ஆண்மை இருந்தால் நீங்கள் பெட்டைகள் இல்லையென்றால் வாதத்துக்கு வாருங்கள் என ஓர் குரல் ஒலித்து சொரணைகெட்டுக் கிடந்த வஹ்ஹாபிசத்துக்கு கொஞ்சம் ரோஷமேற்றியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் முஹம்மது முஸ்தபா மஸ்லஹி என்னும் வஹ்ஹாபிசத்தின் சிம்ம சொப்பணம்!ரோஷத்தி விளைவு வேறு வழியில்லாமல் விவாத களத்தை சந்தித்து தனக்கு தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார்கள ததஜ மூடர்கள்.விவாதத்தில் த த ஜ வினர் எழுந்து நிற்க முடியாத வகையில் சொத்தைகளாக்கப்பட்டனர்.

திருக்குர் ஆனில் எழுத்துப்பிழையென ஓர் கொள்கையை வகுத்து யூத கைக்கூலித்தனத்தின் முழு செல்லப்பிள்ளைகளாக வலம் வந்த ஜெயினுலாபிதீன் கோஷ்டியினரின் வேஷ்டியை தூத்துக்குடியில் அவிழ்த்தெறிந்ததில் தொடங்கியது மஸ்லஹியின் விவாதப்பயணம்! அல்ஹம்துலில்லாஹ்!

அற்புதமான பேச்சாற்றலும் தெளிவான சொற்களும் கொண்ட முஸ்தபா மஸ்லஹியின் வாதங்களுக்கு முன் வஹ்ஹபிசத்தால் எழுந்து நிற்கமுடியவில்லை.இதுவே கோவை விவாதத்திலும் தொடர்ந்தது.

எந்தெந்த ஹதீதுகளை எல்லாம் ஆபாசம் என த த ஜ காபிர்கள் மறுத்து வந்தார்களோ அவை அத்துனையையும் தெளிவாக மொழிபெயர்த்து ஆபாசம் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் விளக்கமளித்து பெருமானாரின் ஹதீதுகளின் கௌரவத்தை விவாத களத்தில் பாதுகாத்த முஸ்தபா மஸ்லஹி ஹசரத் அவர்களின் வாதங்கள் எதிர்த்தரப்பு பார்வையாளர்களைக்கூட சிந்திக்க வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை!

த த ஜ இயக்கத்தின் போதை என அறியப்படக்கூடிய கஞ்சா இபுராஹீம் செய்த கேலி கிண்டல்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் புன்சிரிப்போடு ஹசரத் அவர்கள் வைத்த மறுப்புக்கள் நிச்சயம் கஞ்சாவை கடுப்பாக்கியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை!

ஹழரத் அவர்களின் வழிகேட்டுக்கெதிரான சத்தியமெனும் வாள் மத் ஹபு விவாதத்திலும் வஹ்ஹபிசத்தை கருவறுக்கும்! வஹ்ஹாபிசத்தின் மரண ஓலத்தை கோவையில் மீண்டும் ஒலிக்கச் செய்யும்!

முஸ்தபா மஸ்லஹி போன்ற இளம் அறிஞர்கள் களத்தில் இருப்பது த த ஜ போன்ற யூத சரக்கு வியாபாரிகளுக்கு ஒரு போதும் நல்ல சகுணமாக இருக்கப்போவதில்லை!

யா அல்லாஹ்! முஸ்தபா மஸ்லஹி ஹழரத் அவர்களின் ஆயுளை நீடித்து அவர்களின் இல்மிலும் பரக்கத் செய்து சத்தியத்துக்காக தொடர்ந்தும் போராடக்கூடிய ஆற்றலையும் வழங்கிடுவாயாக!

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

யார் இந்த தலைமை காஜி !!!



அரபு நாட்டில் இருந்து சுமார் 700 வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்த அரபு வம்சாவளியினரின் குடும்பத்தினர் இவர்கள் நவாயத் என்று அழைக்கப் படுகின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய இவர்கள் 1700 களில் தமிழகத்தின் ஆற்காடு பகுதியிலும் பிறகு சென்னை பகுதிகளில் குடியேறினர். மார்க்க அறிஞர்கள் நிரம்பிய இவர்களின் குடும்பம் காஜி என்ற பெயராலேயே அழைக்கப் பட்டது. இவரது மூதாதையர்கள் பல மார்க்க விளக்க நூல்களை எழுதியவர்கள். குர்ஆனுக்கு உருது மொழியில் மொழி பெயர்ப்பு, தப்சீர் எனும் விளக்கவுரை என மார்க்கத்துக்கு அளவற்ற சேவைகள் புரிந்த இவர்களது குடும்பத்தை சார்ந்த அறிஞர்கள் ஆற்காடு நவாபுகளால் அரசு காஜியாக நியமிக்கப் பட்டனர். (அந்த காலத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்று வைத்துக் கொள்ளுங்களேன்).அன்றைய தமிழகத்தை ஆற்காடு நவாபுகளே ஆண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஜி சலாஹூத்தீன் அய்யூப் இந்த குடும்ப பாரம்பர்யத்தில் பிறந்தவர். உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய பல்கலைக் கழகமான எகிப்தின் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

நவாபுகள் காலத்தில் 1800 களில் ராயப் பேட்டை திவான் தோட்டத்தில் மதரஸா முஹம்மதியா என்ற பெயரில் பள்ளிவாசலுடன் இணைந்த மார்க்க கூடத்தை இவர்களது முன்னோர்கள் நடத்தி வந்துள்ளனர். அதுவே தற்போதைய தலைமை காஜியின் அலுவலகமாகவும்,இருப்பிடமாகவும் உள்ளது.

இங்கு அரிய வகை 
நூல்களை கொண்ட நூற்றாண்டுகளை கடந்த ஒரு நூலகம் இயங்கி வருகிறது. சென்னையின் பழமையான நூலகம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். உருது,பார்சி,அரபி மொழிகளின் பழமையான மேனுஸ்கிரிப்ட் என்று சொல்லப்படும் குர்ஆன்,மார்க்க,வரலாற்று நூல்களை தேடி உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள்,ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு வருகின்றனர்.

கடைசியாக விஷயத்துக்கு வருவோம். தமிழக காஜியின் பத்வா அடிப்படையிலிலேயே தமிழக முஸ்லிம்கள் தங்கள் பெருநாள்களை கொண்டாடி வருகின்றனர். சுன்னத் வல் ஜமாத்இனரின் எந்த பத்வாவையும் ஏற்காத மாறாக முஷ்ரிக்குகள் என்று தங்கள் கருத்துக்களை ஏற்காத சுன்னத் ஜமாத்தினரையும் பிற அமைப்புகளை சார்ந்த முஸ்லிம்களையும் தூற்றி வரும் ததஜ அமைப்பினர் பிறை விஷயத்தில் தங்கள் விருப்பத்துக்கு தலைமை காஜியை பத்வா கொடுக்க வேண்டும் என நினைப்பதும், அவ்வாறு நடக்கவில்லையென்றதும் தலைமை காஜியின் வயதையும் அவர் மார்க்க அறிஞர் என்பதையும் பொருட்படுத்தாமல் மிகக் கேவலமாக ஏசி வருவதையும் சகிக்க முடியவில்லை.

இறுதியாக தலைமை காஜியை மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்திலும் இறங்கியுள்ளனர்.

தலைமை காஜி அவர்களை நன்கறிந்தவர்களுக்கு தெரியும் அவர் மிக,மிக எளிமையானவர், மக்கள் எளிதில் அணுகக் கூடியவர் அது மட்டுமல்ல எந்த நிர்பந்தத்திற்கும் அடி பணியாதவர்.தான் வகிக்கும் பொறுப்புக்காக அரசிடம் இருந்து சம்பளமோ,சலுகைகளோ பெறாதவர்.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழகத்தின் ஒரு கோடி முஸ்லிம்களும் தலைமை காஜிக்கு ஆதரவாக உள்ளனர். ததஜ வினரின் நிர்பந்தத்துக்கு அரசு இணங்கினால் பெரும்பான்மை முஸ்லிம் மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லி வைக்கிறோம்.


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

தமிழ்நாடு அரசு தலைமை காஜி !!!


தமிழ்நாடு அரசு தலைமை காஜி மௌலவி “அப்லளுள் உலமா” 
முப்தி டாக்டர் ஸலாஹுத்தீன் முஹம்மத் ஐயூப் (அல் அஸ்ஹரி)
 M.A, M.Phil, Phd. 
.
இவர்கள் உலக முஸ்லிம்களின் மார்க்க தீர்ப்பு தலைமையகமான 
எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் கற்றவர். வயதில் 
முதிர்ந்த நல்ல அனுபவசாலி, மார்க்க கல்வியும் உயர்கல்வியும் கற்றவர். ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றவர்.
.
1. அரசு கொடுத்த சைரன் வைத்த காரை வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
2. அரசு ஒதுக்கிய வீட்டை (கோட்டஸ்) வேண்டாம் என்று புறக்கணித்தவர்.
.
3. அரசு கொடுத்த சம்பளத்தை புறக்கணித்தவர்.
.
4. அரசு கொடுத்த தலைமை அலுவலகத்தை புறக்கணித்தவர்.
.
5. அரசு அதிகாரி என்ற கிரீன் கார்டு சலுகைகள் அனைத்தையும் புறக்கணித்தவர்.
.
இத்தகைய ஒரு மார்க்க அறிஞரை ஒழிப்பதில் மும்முரமாக செயல்படும் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் என்னும் வஹாபி இயக்கம் ஒரு ஸியோனிச கைக்கூலி என்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள்.
.
காலம் முழுதும் பொய் பேசி, மார்கத்தை அரசியலாக்கி ஹராத்தை சாப்பிட்டு இயக்கம் வளர்க்கும் தமிழ்நாட்டு தௌஹீத் ஜமாஅத் என்னும் வஹாபி தருதலைகள் இவரைப் போன்ற ஒரு நேர்மையான மார்க்க அறிஞர் மீது குற்றம் சாட்டுவது சாத்தான் வேதம் ஓதிய கதைதான் என்றும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
.
மேலும் இவர்கள் மீது எந்தவொரு தமிழக முஸ்லிம் ஆலிம்கள் யாரும் சுட்டு விரல் நீட்டி அவரை குற்றம் சாட்டியதில்லை. வஹாபிகள் 
மட்டும்தான் குறை கூறி திரிகிறார்கள்.
.
தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் தமிழக முஸ்லிம்களுக்கு மட்டும்தான் காஜி வஹாபிகளுக்கு அல்ல என்றும் தமிழக 
முஸ்லிம்கள் கூறுகிறார்கள். 
.
ஆதலால் முஸ்லிம்கள் அனைவரும் வஹாபிகளின் சொல், செயலை பின்பற்றாமல், வஹாபிகளின் சூழ்ச்சிகளில் சிக்கி விடாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தார்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.
.
நன்றி: தமிழக முஸ்லிம்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.