Wednesday, November 23, 2016

ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமை --இரண்டாம் பாகம்


ஒடுக்கம் எனும் தமிழ் வார்த்தைக்கு கடைசி என்பது பொருளாகும். ஸஃபர் மாதத்தின் கடைசி புதன்கிழமைக்கு ஒடுக்கத்து புதன் என்ற சொல்லுக்கு தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிரபல்யமாக உள்ளது.

ஒடுக்கத்து புதனில் இஸ்லாமியர்கள் தங்களது நோய்கள் அகல்வதற்காக குர்ஆன் வசனங்களை எழுதி கரைத்துக் குடிக்கிறார்கள் ஏனென்றால், பிணி தீர்க்கும் அருமருந்தாக குர்ஆன் அமைநதுள்ளது. இறைவன்
கூறினான். “இறைநம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும்,நோய்களுக்கு நிவாரணமாகவும் அமைந்துள்ள குர்ஆன் வசனங்களை இறக்கி வைப்போம். 17.82

அதை எந்த நாளிலும் செய்யலாமென்றாலும் இஸ்லாமியர்கள் புதனை தேர்ந்தெடுத்தற்கும் சில காரணங்கள் உண்டு.

-தொழுநோயின் ஆரம்பம் புதன்கிழமை.
-அய்யூப் அலை அவர்களின் நோயின் துவக்கம் புதன் கிழமை.
-துர்ப்பாக்கியமுள்ள நஹ்ஸுடைய நாள் புதன் கிழமை.
-இறைத்தூதர் ஸல் அவர்களின் இறுதிகட்ட நோய் ஆரம்பமானது ஸஃபர் மாத கடைசி புதன் கிழமை.
நோயின் துவக்கம்.

عن ابن عمر رضي الله عنهما قال إني سمعت رسول الله صلي الله عليه وسلميقول ما نزل جذام ولا برص إلا في ليلة الأربعاء[الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். வென்குஷ்டமும் கருங்குஷ்டமும் புதன்கிழமை இரவில்தான் இறங்கும். அறிவிப்பாளர். 
 உமர் ரலி நூல் ஹாகிம்.

عن عبدالله بن عمر رضي الله عنهماقال إني سمعت رسول اللهصلي الله عليه وسلم يقول اجتنبوا الحجامة يوم الأربعاء فإنه الذي ابتلي الله أيوب فيه بالبلاء وما يبدو جذام ولا برص إلا في يوم الأربعاء أو في ليلة الأرباء[ابن ماجه، الحاكم في المستدرك علي الصحيحين]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் சொன்னார்கள்.புதன்கிழமையன்று
(உடம்பிலிருந்து)இரத்தம் வெளியேற்றுவதை தவ்ர்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால், புதன்கிழமையில்தான் அய்யூப்(அலை)அவர்கள் சோதிக்கப்பட்டார்கள். வென்குஷ்டம் மற்றும் கருங்குஷ்டமென்ற தொழுநோய் புதன்கிழமை பகலிலோ அல்லது இரவிலோதான் ஆரம்பமாகும்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلي الله عليه و سلم قال من احتجم يوم الأربعاء ويوم السبت فرأى وضحا فلا يلومن إلانفسه[البيهقي]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இயம்பினார்கள். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் ஒருவர் தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேற்றி அதன் காரணமாக தொழுநோயின் அடையாளத்தை தனது உடம்பில் பார்த்தால் அவர் தன்னைத்தானே பழித்துக் கொள்ளட்டும்..அறிவிப்பாளர் அபூஹூரைரா رضي الله عنهநூல்.பைஹகீ
நஹ்ஸுடைய நாள்.
நஹ்ஸ் என்ற அரபிச் சொல்லுக்கு தீங்கு மற்றும் துர்ப்பாக்கியம் என்பது பொருளாகும்.,ஆத் கூட்டத்தினருக்கு தண்டனை இறக்கிவைத்த நாளை இறைவன் நஹ்ஸுடைய நாள் என குர்ஆனில் பெயரிடுகிறான்.

إنا أَرْسلْنا عليهم رِيْحًا صرْصرًا في يوم نحسمسْتمر

இறைவன் கூறினான். தொடராக துர்ப்பாக்கியமுள்ள நாளில் கடும்புயல் காற்றை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்54:19
அந்த நஹ்ஸுடைய நாள் புதன் கிழமையென்பதை கீழ்க்கானும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

عن جابر قال نزل جبريل عليه السلام علي النبي صلي الله عليه وسلم فقال اقض باليمين مع الشاهد،وقال يوم الاربعاء يوم نحس مستمر[الطبراني في المعجم الاوسط]

இறைதூதர் صلي الله عليه وسلمஅவர்களிடம் ஜிப்ரில்அலைஹிஸ்லாம் அவர்கள் வந்து கூறினார்கள் ஒரு சாட்சியோடு சத்தியமிடுதலைக்கொண்டு தீர்ப்பு வழங்குங்கள்! புதன்கிழமை தொடர்பான தீங்குள்ள நஹ்ஸுடைய நாளாகும்.
அறிவிப்பாளர்.ஜாபிர் رضي الله عنهநூல்.தப்ரானி(அவ்சத்)

عن جابر بنلاعبدالله قال قال رسول الله صلي الله عليه وسلم أتاني جبريل عليه السلام فأمرني أن أقضي باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء نحس مستمر[البيهقي]
عن جابر قال قال النبي صلي الله عليه وسلم [أتاني جبريل فأمرني باليمين مع الشاهد وقال إن يوم الاربعاء يوم نحس مستمر[مسند أبي عوانة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் மொழிந்தார்கள்.
ஜிப்ரீல் عليه السلامஅவர்கள் என்னிடம் வந்து, ஒரு சாட்சியுடன் சத்தியமிடுதலும் இருந்தால் அவற்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கு எனக்கு கட்டளையிட்டார்கள். மேலும்,கூறினார்கள் புதன்கிழமை தொடர்ந்து தீங்குள்ள(நஹ்ஸுடைய) நாளாகும். அறிவிப்பாளர் ஜாபிர் رضي الله عنهநூல்.பைஹகீ.

நபிகளாருக்கு நோயின் தொடக்கம்.

قال الواقدي وقالوا بدأ رسول الله صلي الله عليه وسلم يوم الأربعاء لليلتين بقيتا من صفر،وتوفى يوم الاثنين لثنتي عشرة ليلة خلت من ربيع الأول[السيرة النبوية لابن كثير]

ஸஃபர் மாதத்தில் இரு நாட்கள் மீதமிருந்த நிலையில் நோய் ஆரம்பமானது. ரபீவுல்அவ்வல் பனிரெண்டாம் நாள் திங்கட்கிழமை இவ்வுலகைவிட்டும் மறைந்தார்கள்.

عن الزهري أخبرني أنس بن مالك قال أول ما اشتكىرسول الله صلي الله عليه وسلم كان ذلك يوم الأربعاء لليلتين بقيتا من صفر وهو في بيت ميمونة حتى أغمي عليه من شدة الوجع [السيرة الابن حبان]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் முதன்முதலாக நோய்வாய்ப்பட்டது புதன்கிழமையாகும், ஸஃபர் மாதம் முடிய இருநாட்கள் மீதமிருந்தன. அந்த நேரத்தில் அருமைத் துணைவியார் மைமூனாரலி அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். கடுமையான வலியின் காரணமாக மயக்கமுற்றார்கள்.
அறிவிப்பாளர் அனஸ்رضي الله عنهநூல்.:சீரா,,ஆசிரியர்.:இப்னுஹிப்பான்.

قال أبوعمر ثم بدأ برسول الله صلي الله عليه وسلم مرضه الذي مات يوم منه يوم الأربعاء، لليتين بقيتامن صفر سنة إحدى عشرة في بيت ميمونة، ثم انتقل حين اشتد مرضه إلي بيت عائشة،رضي الله عنها، وقبض يوم الاثنين ضحى في الوقت الذى دخل فيه المدينة لاثنتي عشرة خلت من ربيع الأول[أسد الغابة]

இறைத்தூதர் صلي الله عليه وسلمஅவர்கள் இவ்வுலகைவிட்டும் மறைவதற்கு காரணமாக இருந்த நோய் புதன் கிழமைதான் ஆரம்பமானது.ஸஃபர் முடிவிற்கு இருநாட்கள் மீதமிருந்தன. அப்போது மைமூனாரலியல்லாஹ் அன்ஹா அவர்களின் இல்லத்தில் இருந்தார்கள். நோய் கடுமையானபோது ஆயிஷாரலியல்லாஹூ அன்ஹா அவர்களின் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். ரபீவுல்அவ்வல் பிறை 12 ஆம் நாள் திங்கட்கிழமை ளுஹா நேரத்தில் அவர்களின் உயிர் பிரிந்தது.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் -- முதல் பாகம்



ஒடுக்கம் என்பது பழம் தமிழ்ச் சொல்லாகும்.இது 
பல்வேறு பொருள்களில் பயன்படுத்தப்பட்ட போதினும் 
முக்கியமாக முடிவு,இறுதி என்ற பொருள்களிலேயே 
பயன்படுத்தப் படுகிறது..சிலப்பதிகாரத்திலும்

ஒடுங்கங் கூறா ருயர்ந்தோ ருண்மையின்
முடிந்த கேள்வி முழுதுணர்ந் தோரே

என்ற அடிகளில் முடிவு அல்லது இறுதி என்ற 
பொருளிலேயே இது .பயன்படுத்தப் பட்டுள்ளது

இதே பொருளில் அல்லாஹ்வின் இறுதித் தூதுவராம் 
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் 
அவர்களை ஒடுக்கத்து நபி என்றும் நியாயத் தீர்ப்பு 
நாளை ஒடுக்கத்து நாள் என்றும் ஒருவரின் இறப்பு  
நேரத்தை ஒடுக்கம் என்றும் கூறுவர்.

ஸஃபர் மாதத்துடைய கடைசிப் புதன் கிழமைக்கு 
ஒடுக்கத்துப் புதன் என்று பெயர்.
.இதற்கு உர்தூவில் ஆகி ஷம்பா என்று கூறுவர்.ஹூத் 
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தினர் மீது 
அல்லாஹ்வின் முனிவு ஏற்பட்டு அதன் விளைவாக, 
இதற்கு  முன்னுள்ள புதன் கிழமையிலிருந்து இப்புதன் 
கிழமை வரையில் கடுங்காற்று வீசி அவர்களை அழித்தொழித்தது.
அந்த காற்று வந்த  நாளை ''யவ்முந் நஹ்ஸ் ( கெட்ட நாள் ) 
என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்.

இதனை ஆதாரமாகக் கொண்டு,ஸஃபர் மாதத்தின்  கடைசிப் புதன் 
கிழமையை  மட்டுமல்லாது ஒவ்வொரு மாதத்தின் கடைசி புதன் கிழமையையும் நஹ்ஸுடைய நாள் என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இது தீயோர்களான இறை மறுப்பாளர்களுக்குத்தான் 
தீய நாளே யன்றி நல்லோர்களான இறை நம்பிக்கையாளர்களுக்கு 
நல்ல நாள்.விடுதலை நல்கிய நாளாகும்.தவிர '' புதன் கிழமை குழிப்பதும்,அலுவல்களை துவங்குவதும் புகழத் தக்கதாகும்.
அன்று தான் சுவர்க்க நீர் மற்ற நீர்களுடன் கலக்கிறது.
என்றும் கூறப்படுகிறது. 

நோய் வாய் ப்பட்டிருந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்கள் ஸஃபர் மாதத்து இறுதிப் 
புதன் கிழமையன்றுதான் சிறிது நோய் நீங்கப் பெற்றனர் 
என்றும் கூறப்படுகிறது.ஆனால் சிலரோ அன்றுதான் அண்ணல் 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள்  
நோயுற்றார்கள்  என்று கூறுகின்றார்கள்.

ஆனால் இந்தியாவிலுள்ள ஷீயாக்கள்  இதனைத் 
துர்க்குறியான நாள் என்று கருதுகின்றனர்.இதனைச்
'' சார் ஷம்பா சூரி ''( இறுதியாக சூர் என்ற எக்காளம் 
ஊதக்கூடிய புதன் கிழமை ) என்றும் கூறுகின்றனர்.
அன்று ஏழு ஸலாம்களை அதாவது.

(1) ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர் ரஹீம் (36--58) 

(2) ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆளமீன் (37--79)

(3) ஸலாமுன் அலா இப்றாஹீம் (37--109)

(4) ஸலாமுன் அலா மூஸா வஹாரூன் (37--120)

(5) ஸலாமுன் அலா இல்யாஸீன் (37--130)

(6) ஸலாமுன் அலைக்கும் திப்தும் 
ஃபதுஹுலூஹா ஹாலிதீன் (39--73)

(7) ஸலாமுன் ஹிய ஹத்தா  மத்லயில் ஃபஜ்ர் (97--05)

ஆகிய திருவசனங்களை மாவிலையில் 
எழுதிக் கரைத்துக் குடிப்பின் வருங்காலத்தில் 
நலன் அமைதி,மகிழ்ச்சி ஆகிய வற்றைப் பெறலாம்.
என்று கூறப்படுகிறது.

நக் ஷபந்தியா தரீக்காவைச் சேர்ந்த ஷைகு ஃபரீதுத்தீன் 
என்ற பெரியார் ஓர் ஒடுக்கத்துப் 
புதன் இரவு இலட்சோபலட்சம் துன்பங்கள் இறங்குவதாகக் 
கனவு கண்டார்.ஆனால் 
எவ்வாண்டு ஒடுக்கத்துப் புதன் இரவு என்று அக்கனவில் குறிப்பிடப்படவில்லை.
இதைப் பற்றி  அவர் தம் மாணவர்களிடம் கூறவே,
 '' அது நிகழின் என் செய்வது? '' 
என்று அவர்கள் வினவ மேற் கூறப்பட்ட ஏழு 
ஸலாம்களை ஓதிக் கொள்ளுமாறு 
சொன்னார் அவர்.அதுவே அவற்றை மாவிலையில் 
எழுதிக் குடிக்கும் வழக்கமாக மாறிவிட்டது.
ஸஃபர் மாதத்தில் 320,000 சோதனைகள் இறைவனால் 
இவ்வுலகில் இறக்கப்படுகின்றன 
என்றும் எனவே அதன் இறுதிப் புதன் கிழமை 
நான்கு ரகஅத் நபில் தொழுதுவிட்டு
 '' யா ஷதீதுல் குவா,யா ஷதீதுல் மிஹால்,யா மிப்அல் யா 
மக்ரூஹ்,யா லா இலாஹ இல்லா அன்த்த பி ரஹ்மத்திக 
யா அர்ஹமர் ராஹிமீன் '' என்று 
ஓத வேண்டுமெனவும் காஜா முயீனுத்தீன் ஷிஸ்தி
 ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள்.

முஹ்யித்தீன் இப்னு அரபி ரஹ்மத்துல்லாஹி 
அலைஹி அவர்கள் தங்களுடைய
 '' புதூஹாத்தில் மக்கியா '' என்ற நூலில் '' ஆண்டில் 
மறைவானதோர் இரவு உள்ளது.
அந்த இரவில் பயங்கரமான நோய்கள் இறங்குகின்றன.திறந்து 
கிடக்கும் பாத்திரங்களையும்,துருத்திகளையும் அவ்வாறான 
நோய்கள் தொத்திப் 
பிடித்துப் பரவுகின்றன.எனவே தான் இரவில் 
பாத்திரங்களை மூடி வைக்குமாறும் 
மூடி வைக்க ஒன்றும் கிடைக்காவிடின் ஒரு குச்சியை எடுத்து
 ''பிஸ்மில்லாஹ் '' என்று  கூறி அல்லாஹ்வின் மீது 
பொறுப்புச் சாட்டி அவற்றின் மீது வைக்குமாறும் 
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ 
ஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர் '' 
என்று எழுதியிருப்பது கவனிக்கற் பாலதாகும்.

ஆனால் உண்மையில் ஒடுக்கத்துப் புதன் இரவு மாண்பார்ந்த 
இரவாகும்.அன்று தஹஜ்ஜுத் தொழுது பின்னர் இஸ்திகாராத்
 தொழுகை தொழுது, ஸலாமுன் கௌலன்மின் ரப்பிர் ரஹீம்
 '' என்ற திருவசனத்தில் ''கௌலன் என்பதை விட்டு விட்டு
 '' ஸலாமுன் மின் ரப்பிர் ரஹீம் என்று முப்பத்து மூன்று,
முப்பத்து மூன்று முறை வீதம் ஓதி ஒவ்வொரு 33 க்கும்
 பின்னும் கலிமாவும், ஸலவாத்தும் ஓதிக்கொள்வது 
சிறப்புடைத்ததாகும் என்று வேறு சிலர் இயம்புகின்றனர்.
மலேசியாவில் ஓர் இராஜ்ஜியமாகிய மலாக்காவில் 
இந்நாளே மண நாளை நிச்சயபபடுத்துவதற்கேற்ற 
நன்னாளாக பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இது தமிழ் நாட்டின் சில பகுதிகளில் புல் மிதிக்கும் 
பெருநாள் என்றும் முட்டைப் பெருநாள் என்றும் 
சபர்க்குளிநாள் என்றும் கடல்குளி நாள் என்றும் 
பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.

நன்றி ;- இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
இரண்டாம் பாகம்,பக்கம் 586


தொகுத்து வழங்கியவர்கள்
பன்னூல் ஆசிரியர்,பேரறிஞர்,மர்ஹூம் 
எம்.ஆர்.அப்துற் றஹீம் ஸாஹிப் அவர்கள்
தொண்டி,இராமநாதபுரம் மாவட்டம்.

ஒடுக்கத்து புதன் அன்று கண்டிப்பாக வெளியில் போக வேண்டும் என சொல்கிறார்களே அது மார்க்கத்தில் இருக்கா ?


மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர்.
அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )



வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.