Tuesday, November 29, 2016

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1491 வது மீலாதுப் பெருவிழா!!!



முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!! 
வமுஸல்லிமா !!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர
நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு 
தினங்களும் பயான் செய்யப்படும்,

ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1491 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!



தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 15 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு 
அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான 
மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு 
வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்
 1491 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு 
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை 
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 30--11--2016 புதன் கிழமை  
தொடங்கி 11--12--2016 ஞாயிறு வரை 12 தினங்களுக்கு 
இஷா தொழுகைக்குப் பின் சரியாக 
ஒரு மணி நேரம் பயான் நடைபெறும்.

உரையாற்றுபவர்கள் ;---
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
K.I.ஷாஹுல் ஹமீது ஆலிம் வாஹிதி
இமாம் அப்பா ஜும்ஆப் பள்ளிவாசல்
பேராசிரியர்,ஸபீலுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி
வடகரை,தென்காசி,நெல்லை மாவட்டம்.

ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் 
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் 
அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு 
அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் 
இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,
மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ்
 எஸ்.எஸ்,அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் 
அவர்களை  016--9276127  இந்த  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகக் குழு மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.

நாமறிவோம்!
நபி (ஸல்) பிறந்தநாள்
ஹி.மு.53 ரபீஉல் அவ்வல் --12
கி.பி.570 ஆகஸ்ட் --20
திங்கட்கிழமை -- அதிகாலை

வெளியீடு ;-- 
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.