Showing posts with label சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்கள். Show all posts
Showing posts with label சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்கள். Show all posts

Tuesday, September 23, 2014

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம்.


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின்
47 வது நினைவு தினம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின்,சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,
பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதி,
கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் திக்ரு மற்றும் சிறப்பு பயான் நடைபெற இருக்கிறது.


இறுதியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு துஆச் செய்ய இருக்கிறார்கள். பெண்களுக்கு சின்னப் பள்ளிவாசல் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா திருமண மண்டபத்தில் 
இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.

அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் 
அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )

வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.