Showing posts with label பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ். Show all posts
Showing posts with label பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ். Show all posts

Saturday, July 30, 2016

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 50ம் ஆண்டு நினைவு நாள் விழா

முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 
50ம் ஆண்டு நினைவு நாள் விழா 28.7.2016 அன்று பனைக்குளம் 
முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய 
முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் 
நிர்வாகிகள் முன்னிலையில், பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா 
ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.


மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு மஜ்லிஸும்,
அதனை தொடர்ந்து யாஸீன் ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.



 இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை,வாலிநோக்கம்,ஆற்றங்கரை,அழகன்குளம், புதுவலசை, 
அத்தியூத்து, சித்தார்கோட்டை,வாழூர்,பெருங்குளம், உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் மகான்பாபாவின் 
நேசர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.












விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின்
 குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.