Showing posts with label பனைக்குளம் மாநாடு. Show all posts
Showing posts with label பனைக்குளம் மாநாடு. Show all posts

Wednesday, March 18, 2015

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!!




                       முதஅவ்விதன்!  முபஸ்மிலன்! முஹம்திலன்!
                                         முஸல்லியன்! வமுஸல்லிமா!!

                                            எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே

15.3.2015 அன்று பனைக்குளம் மாநகரில் அமைந்துள்ள, மத்ரஸா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ்வில், ராத்தீப் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்  ஓதும் மஜ்லிஸும், மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ். பிற்பகல் சரியாக 2:30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு, இரவு 9:15 வரை நடைபெற்றது.

ஆரம்பமாக ராத்திப்பத்துல் ஜலாலிய்யா என்னும் திக்ரு 
மஜ்லிஸ் அஸர் வரையும், அஸர் தொழுகைக்குப் பின் 
அண்ணல் நபி  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதும் மஜ்லிஸ்,மஃரிப் வரை நடைபெற்றது.


மஃரிப் தொழுகைக்குப் பின் நாடறிந்த நாவலர்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,
தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத்
கிப்லா அவர்களின் சிறப்புப் பேருரை இரவு 9:00 மணி
வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்து லில்லாஹ்.


இச்சிறப்பு மிகு நிகழ்வில் முஸ்லிம் பரிபாலன சபை,
முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம் ,
வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள்,
மலேசியாவிலிருந்து, ஹாஜி ஷராஃபத் அலி, டத்தோ ஹாஜி
அமீர் ஹம்ஜா, உள்ளுர், மற்றும் வெளியூர்களிலிருந்து.
இஸ்லாமியப் பெருமக்கள் பலரும் கலந்து,
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும், பெற்றுக்கொண்டனர்..

இச்சிறப்பு மிகு மாநாட்டினை, மத்ரஸா செய்யிது 
முஹம்மது வலியுல்லாஹ் நிர்வாகக் குழு 
மிகச் சிறப்பாக,ஏற்பாடு செய்திருந்தது.
வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.