Showing posts with label பள்ள பட்டி மக்தூமிய்யா ஷுஹதாக்கள்.. Show all posts
Showing posts with label பள்ள பட்டி மக்தூமிய்யா ஷுஹதாக்கள்.. Show all posts

Wednesday, April 15, 2015

சாலை விபத்தில் பள்ள பட்டி மக்தூமிய்யா அரபுக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களுமாக 9 பேர் ஷஹீதானார்கள்.

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கொடைக்கானலுக்கு சென்று திரும்பும் வழியில்,சித்தையன் 
கோட்டைக்கு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில், பள்ள பட்டி மக்தூமிய்யா அரபுக்கல்லூரியின் ஆசிரியர்களும்,
மாணவர்களுமாக 9 பேர் 03-04-2015 அன்று  தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஷுஹதாக்களின், 
நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் 
சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து 
தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், ஷுஹதாக்களின்,
பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், 
மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் 
அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை 
தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் 
ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும், 
ஷுஹதாக்களின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் 
கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.