Showing posts with label பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது. Show all posts
Showing posts with label பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது. Show all posts

Saturday, October 26, 2013

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற இமாம் மௌலானா பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..!

manbai
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற மௌலானா இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது……….!!
அது ஒரு வித்தியாசமான செய்தியாகவும்,விழாவாகவும் இருந்தது.
ஓர் ஊரில், ஒரு பள்ளிவாசலில்,தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் இமாமாகப் பணியாற்றுவது, இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்கள் மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
ஆம்..! கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில்அவர்கள் சேவையாற்றத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய இந்தச் சாதனையைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகமும் உள்ளூர் மக்களும் இணைந்து பொன்விழாவையே கொண்டாடிவிட்டார்கள்.


விழாவில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.

இமாம்களைப் பாராட்டுபவர்கள் பலரும்அவருடைய மார்க்க அறிவு, பேச்சாற்றல், உழைப்பு,தியாகம், அர்பணிப்பு ஆகியவற்றை வாயளவில் பாராட்டிவிட்டுச்சென்றுவிடுவார்கள்.
"உங்கள் சேவைக்கு மறுமையில் நற்கூலி கிடைக்கும் ஹஜ்ரத்,துஆச் செய்கிறோம்" என்று சொல்லி மெல்ல நழுவிவிடுவார்கள்.
ஆனால் கோட்டாறு இளங்கடை ஜமாஅத்தினர் வாயளவில் பாராட்டியதோடு நின்றுவிடாமல்,இமாம் அவர்களின் ஐம்பதாண்டு சேவையைக் கண்ணியப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கியும் வாழ்த்தியுள்ளனர்.
பொற்கிழி என்றால் ஏதோ ஒரு பத்தாயிரம் இருக்கும் அல்லது அதிகபட்சம் 25,000 ரூபாய் இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் மூன்றரை இலட்சம் (3,50,000) ரூபாயைப் பொற்கிழியாக அளித்து அசத்தியுள்ளார்கள். இளங்கடை ஜமாஅத்தினர்.
மௌலானா அவர்களின் இணையற்ற இறைப்பணிக்கு எத்தனை லட்சம் கொடுத்தாலும் ஈடாகாது என்றாலும் சமுதாயத்தினரால் ஒரு மார்க்க அறிஞர் கண்ணியப்படுத்தப்படுகிறார் என்பதை நினைக்கும்போது நெஞ்சம்நெகிழ்ந்து, கண்கள்கசிந்தன.
ஆலிம் பெருமக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத்  அவர்கள் திகழ்கிறார்கள் எனில்,பள்ளிவாசல் நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இளங்கடைப் பகுதி மக்கள் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
எல்லா ஊர்களும் இளங்கடைகளாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…!
நன்றி:-லால்பேட் எக்ஸ்பிரஸ்.