Showing posts with label மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும். Show all posts
Showing posts with label மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும். Show all posts

Tuesday, December 24, 2013

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!


பிஸ்மிஹி தஆலா

''சன்மார்க்க உணர்வு மேலோங்கிடவும்''
''சமுதாய ஒற்றுமை வளர்ந்திடவும்''

மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும்!!

மௌலானா டி,ஜெ,எம். ஸலாஹுத்தீன் ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

அகிலத்தின் அருட்கொடையாம் நமது உயிரினும் மேலான கண்மணி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் பிறந்த மாதம் 
ரபீயுலவ்வல் வந்து விட்டது
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள் மீதுள்ள நமது அன்பையும், பாசத்தையும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நம்மீது கட்டாய கடைமையாகும்.

எனவே நாடெங்கிலும் எல்லா ஊர்களிலும் மீலாது விழாக்கள் நடத்திட நாம் முன்வர வேண்டும்.புனிதமான இந்த விழாவை பெருமானார் பிறந்தநாள் விழா,உத்தம நபியின் உதய தின விழா,மீலாது விழா என்ற பெயரில் தான் நடத்த வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய மற்றய பிறந்த நாள் விழாக்களுடன் நபி (ஸல்) பிறந்த நாள் விழாவாகிய மீலாது விழாவை ஒப்பிட்டு பார்ப்பதோ,விமர்ச்சனம் செய்வதோ அறிவுடைமையாகாது.

மீலாது விழாக்களில்  அனாச்சாரம்,  ஆடம்பரம்,கேளிக்கூத்துகள்  எதுவும் இருக்காது.மனித சமுதாயத்தின் உயர்வுக்கும்,அன்பு, பண்பு, பாசம், நேசம் மனிதாபிமானம் வளர்வதற்கும், தேவையான மிக அவசியமான வழிகாட்டல் மட்டும் மீலாது விழாக்களில் இருந்து கொண்டிருக்கும். 

பெண்கள் சன்மார்க்க விழிப்புணர்வு பெற்று இறை அச்சத்துடன் வாழவும், மனித நேயம் வளரவும் காரணமாக இருந்த மீலாது விழாக்கள் சமீபகாலமாக குறைந்து விட்டதால் நமது மக்களும்,சமுதாயமும் பல சோதனைகளுக்கும்,வேதனைகளுக்கும் ஆளாக வேண்டிய 
அவல நிலை ஏற்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் பிறந்தநாள் பெருவிழாக்கள் மூலமாக நாட்டிற்கும்,மனித சமுதாயத்திற்கும் நல்ல பல செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்ததுடன், நமது  சமுதாய இளைஞர்களிடம் தீனுல் இஸ்லாத்தின் உணர்வுகள் மேலோங்கி எல்லா வகையிலும் எழுச்சியுடன் செயல்பட மீலாது விழாக்கள் காரணமாக இருந்தன. 

எனவே மனிதநேயம், மனிதாபிமானம் வளர்ந்திடவும், அமைதியும்,கண்ணியமும் நிறைந்த வாழ்வு அமைந்திடவும், ஒற்றுமை ஓங்கவும்,சமுதாய சாபக்கேடுகள் சாகவும், அல்லாஹ்வின் அருளும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆசியும்,அன்பும், கிடைக்கவும், நமது வாழ்வு பரக்கத்தான வாழ்வாக அமைந்திடவும், எல்லா ஊர்களிலும், மஹல்லாக்களிலும் மீலாது 
விழாக்கள் நடத்தப்பட வேண்டும். 

சங்கைக்குரிய ஆலிம்களும்,மஸ்ஜிதுகளின் இமாம்களும், பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும், சமுதாய ஆர்வமும்,துடிப்பும், நிறைந்த இளைஞர்களும், எல்லா பகுதியிலும் மீலாது விழாக்கள் நடத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று,மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அருளாளன் அல்லாஹ் எல்லா நலன்களையும்,பரக்கத்தான வாழ்வையும்,நபி (ஸல்) அவர்களின் 
பொருட்டால் தந்தருல் புரிவானாக! ஆமீன். வஸஸலாம்.

வெளியீடு;- T-J-M- பாசறை திருநெல்வேலி-4

தொகுத்து வழங்கியவர்கள்-

மன்பயீ ஆலிம்.காம்
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.