Monday, November 16, 2015

சாம்பிராணிக்கு என்று மருத்துவ குணங்கள் இருக்கின்றன !!!


பிரசவ வீட்டில் பிள்ளைகளின் கழிவுகள் ...
தாய்மார்களின் நிபாஸ் எனும் துடக்குகளின் நாற்றம் ..போன்றவைகளை சாம்பிராணியின் வாசம் மிகுந்த அந்த புகை ..நீக்கும்

கிருமி நாசினியாகவும்....
துர்வாடைகளை நீக்கி மனதுக்கு உகந்த மணங்களை,,சாம்பிராணி ,,குங்கிலியம் ...போன்ற வஸ்துகளை உபயோகிக்க அல்லாஹ் வழங்கியுள்ள நிஹ்மத் !

அரபியர்கள் இப்போதும் பஹூர் எனும் சாம்பிராணியும் வூத்..எனும் நறுமண கட்டையையும் பல லட்சம் கொடுத்துக்கூட வாங்குகிறார்கள் !

எனக்கு இவ்வுலகில் பிடித்தது முதலில் நறுமணம் ..என்று தான் ..கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் சொன்னார்கள் !

ஆதலால் குளிதத்துமே..இன்றும் கூட அரபி அந்த சாம்பிராணி யான அகில் ..ஊத் ..பஹூர்..என்பதை எலெக்ட்ரானிக் சாம்பிராணி சட்டியில் போட்டு எரித்து அதன் புகையை தன் உடல்முழுதும் படும்படியாக ,,,வெற்றுடம்பில் நின்று ஏற்றிக்கொள்வார்கள் !

அராபிய பெண்ணோ..ஆணோ..தூரத்தில் வந்தால்கூட கண்டுக்கொள்ளலாம் ..அவர்கள் மேல் உள்ள நறுமணத்தை !

அது சாதாரண பெர்புயூம் கிடையாது !

சாம்பிராணி புகையால் தன் உடம்பை வாசம் கொடுதுக் கொண்டதுதான் !

நம்மவர்கள் அத்தரையும் செண்டையும்,,,சட்டையில் அப்பிக்கொண்டு கொஞ்சநேரத்தில் ,,வியர்வையில் காய்ந்ததும் ...வியர்வை நாற்றமும் செண்டும் கலந்து வித்தியாசமான நாற்றம் குடலை பிடுங்கும் !

நாங்கள் குழந்தையின் தொட்டில் துணி .. வானித்துணி பீத்துணி..எல்லாம் சாம்பிராணி புகை காட்டித்தான் திருப்பி யூஸ் பண்ணுவோம் !

இப்போது ...அதை கெடுதல் என்று சொல்லி ..

பிள்ளை பிறந்த வீடு டெட்டால் நாற்றம் தான் நாறுகிறது !

சாம்பிராணி புகை போட்டுவந்த பிள்ளை குளித்ததும் அதில் காட்டுவதால் அயர்ந்து தூங்கும் !

மேல்வலி இல்லாமல் இருக்கும் !

தாய்ப்பாலின் கவுச்சி இல்லாமல் ...பாலை குடித்து குடித்து கக்காது!

ஆனால் ,,இப்போதோ...டெட்டால் நாற்றமும் ...மற்ற ஆங்கில மருந்துகளின் நாற்றமும் சேர்ந்து பிள்ளை குளித்தாலும் கத்துவதும் ..அசந்து தூங்காமல் இருப்பதும் ..

பாலை அடிக்கடி கக்குவதும் ...அறியாமையின் உச்ச கட்டம் ! 
பாவம் !

சாம்பிராணி போட்டு மஜ்லிஸ் நடத்தினால் ஷிர்க் ...என்கிறது ஜாஹிலிய்யா கூட்டம்

சாம்பிராணி என்ற வாசனைப்பொருள் ஷிர்க்கா ?
அதன் புகை ஷிர்க்கா ?

அதன் தணல் ஷிர்க்கா ?

போடுவது ஷிர்க்கா ..?

அப்படியானால் ...

அரபி ஷிர்க் செய்து கொண்டே இருக்கானே..?

சாம்பிராணி புகைக்கு ஷைத்தான் பேய் பிசாசு கண்ணூறு நாவூறு எதுவும் அண்டாது என்பது தெரியுமா ..?

அது சாம்பிராணிக்கு றப்பு கொடுதிருக்கிற சக்தி !

சுக்கு மிளகு திப்பிலி சாப்பிட்டால் சளி போய்விடும் என்று ஆங்கிலேயன் கண்டுபிடித்து சொன்னால்தானே ஏற்றுக்கொள்வீர்கள் ?

அதேபோல்தான் இந்த மருந்துக்கு அல்லாஹ் வழங்கிய சக்தி !

நறுமணம் கமழும் இடத்திற்கு ரஹமத்துடைய மலக்குகள் வருகை தருவார்கள் அல்லவா .>?

மஜ்லிஸ்களில் துஆ ஒதும்போதும் வீடுகளில் பள்ளிகளில் சாம்பிராணி புகை எனும் நறுமணம் போடும் காரணம் இப்பவாவது புரிகிறதா ..?

இறுதியில் துஆக்களில் மலக்குகள் ஆஜராகுவர்கள் கண்மணி நாயகத்தின் மீது ஸலவாத் சொல்லி ஆமீன் கூறுவார்கள் ...மலக்குமார்களின் வருகைக்காகக் ..நல்லடியார்களான நம் முன்னோர்கள் வருகை வரவேற்க ,,,நாம் நறுமணம் கமழ வைப்பதும் மிகவும் ஏற்றமான செயல் அல்லவா .>?

ஷைத்தான்கள் விரண்டு ஓடுவார்கள் அல்லவா ..?

சாம்பிராணியை வணங்குவதற்கு அதில் என்ன இருக்கிறது ..அதை ஷிர்க் என்று சொல்ல ?

நோக்கம் நல்ல நோக்கம் தானே ..?

சாம்பிராணி ஷிர்க் ஷிர்க் என்று பயான் பண்ணி ஓலமிட்ட ஆலிம்கள் இப்போது டெங்கு காய்ச்சல் வராமல் வீட்டில் சாம்பிராணி பிடிக்கிறார்களே ..?

வெண்டிலேஷன் சரியில்லாத கிரவுண்ட் ப்ளோர் வீடுகளுக்கெல்லாம் அடிக்கடி சாம்பிராணி பிடித்தால் கெட்ட ஷைத்தான் பேய் பிசாசு போவதுடன் கிருமிகள் ,,கொசுக்கள் ,,சிறு சிறு பூச்சிகள் ஒழியும்,,மனதும் ராஹத்தாக இருக்கும் !

மவ்லீத் மஜ்லிஸில் சாம்பிராணி போடுவது ஷிர்க் ..

கொசுவுக்கு டெங்கு வராமல் சாம்பிராணி போடுவது ஸுன்னத்...அப்படியா ..?

முட்டாள்களே ..?

சிந்தியுங்கள் !
விசேஷங்கள் நல்ல நாள்கள்,,வெள்ளி திங்கள் இரவு மிஹ்ராஜ் பராஅத் இரவு .. லைலத்துல் கதர் ,,பெருநாள் இரவு என்று சாம்பிராணி புகையிட்டு கொள்வது சிறந்தது !
நன்றி-- shafiyath Qadiriyah.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment