Saturday, September 28, 2013

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!



'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் சென்று மார்க்க கல்வி பயின்றார்கள்.பின்னர் வேலூர் மதரஸா 
அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில் '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை 
நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர்.






'' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி கூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ் என்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த மருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள் தம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய சுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.




 இல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி வந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில் '' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து ம்கிழ்வார்கள்.


மக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள். 
ஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத் தரீக்காவின்  திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் 
வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.


இவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட ஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின் புனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப் பள்ளியின் வடபுறத்தில் இருக்கிறது.வஸ்ஸலாம்...

நூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், நான்காம் பாகம்,பக்கம் -185.

வெளியீடு  ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, September 14, 2013

இஸ்லாமிய மார்க்க உண்மையான விளக்கம் !!!


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இடம் ;- முகமதியர் தெரு ( கோரிப்பாளையம் )

தேதி ;- 15.09,2013 ( ஞாயிற்றுக்கிழமை )
நேரம் ;-- மாலை 5.30 மணிமுதல் 9.30 மணி வரை

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் நாளை 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை சரியாக 5.30 மணிமுதல் 9.30 மணி வரை,சுன்னத் வல் ஜமாஅத் மதுரை மாவட்ட கோரிப்பாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சியும்,ஷரீஅத் கேள்வி -- பதில் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால், இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம்


தங்கள் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான சிறப்பான பதிலை தருவதற்கு
சிறப்பு அழைப்பாளர் ; மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

தலைமை ;- மௌலானா, அல்ஹாஜ்,மின்னல் முஸ்தபா நூரி ஹஜ்ரத் அவர்கள்.
          ( மாநில துணைச் செயலாளர்,ஐக்கிய சமாதானப்பேரவை )

கிராஅத் ;-- மௌலானா.ஷேக் மதார் ஹஜ்ரத் அவர்கள்.
( இமாம் தர்ஹா பள்ளி,கோரிப்பாளையம்.)

வரவேற்புரை ;-- மௌலானா,அல்ஹாஜ் ஷாகுல் ஹமீது மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
( தலைவர்,மதுரை மாநகர் ஜமாஅத்துல் உலமா சபை )

அறிமுகவுரை ;-- மௌலானா ஹாஃபிழ் காரி முஹம்மது காஸிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.
( செயலாளர்,மதுரை மாநகர் ஜமாஅத்துல் உலமா சபை )

முன்னிலை ;-- மௌலானா  அல்ஹாஜ் முகம்மது யூசுப் ஷிப்லி ஆலிம் அன்வாரி அவர்கள்
( இமாம், பேட்டை பள்ளி,கோரிப்பாளையம் )

அல்ஹாஜ் மௌலானா முகம்மது நாசர் அவர்கள்.
( மாநில செயலாளர், சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் )

ஹாஜி மௌலானா சூரத் நாகூர் கனி அவர்கள்.
( மாநில பொருளாளர்,சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் )

நன்றியுரை ;-- மௌலானா முஹம்மது சுல்தான் ஹஜ்ரத்அவர்கள்
( இமாம்,ஹவுசிங் போர்டு காலனி,வில்லாபுரம்,மதுரை )

துஆ ;-- மௌலானா காஜா முஹ்யித்தீன் ஹஜ்ரத் அவர்கள்.
( இமாம் அப்துல் ரஹ்மான் பள்ளி,மதுரை )

இப்படிக்கு ;-
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம்,
கோரிப்பாளையம் கிளை,முகமதியர் தெரு,
மதுரை -- 2;

வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Wednesday, September 11, 2013

லால்பேட்டை ஜாமிஆவில் மாணவ சொற்பயிற்சி மன்றத் தொடக்க விழா, மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜி அவர்களுக்குபாராட்டுவிழா !!!

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் மன்பவுல் பயான் மாணவ சொற்பயிற்சி மன்றத் தொடக்க விழா மற்றும் கடலூர் மாவட்ட அரசு காஜியாக தேர்ந் தெடுக்கப்பட்ட ஜாமிஆவின் முதல்வர் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களுக்கு பாராட்டு விழாவும், ஜாமிஆ மன்பவுல் அன்வார் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் 5 ஆம் தேதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மௌலவி அபுல் பயான்,ஷைகுல் ஹதீஸ் அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமை தாங்கினார்கள். ஜாமிஆ பேராசிரியர்கள் மௌலானா மௌலவி முஃப்தீ அப்துர் ரப் ஹஜ்ரத்,மௌலானா மௌலவி அப்துல் அலி ஹஜ்ரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முஹம்மது ஆசிக் கிராஅத் ஓதினார், ரியாஜூல்லா கீதம் வாசித்தார், வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர்   மௌலானா மௌலவி ஸலாஹூத்தீன் வரவேற்புரை ஆற்றினார்.
சென்னை அடையார் ஜூம்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் பாகவி ஹஜ்ரத்  வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா மௌலவி முஹம்மது அஹ்மது ஹஜ்ரத், ஜாமிஆ பேராசிரியர் மௌலானா மௌலவி சைபுல்லாஹ் ஹஜ்ரத், ஆயங்குடி மௌலானா மௌலவி ஜாபர் அலி ஹஜ்ரத்   ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். இறுதியாக கடலூர் மாவட்ட காஜி ஜாமிஆவின் முதல்வர் மௌலானா மௌலவி நூருல் அமீன் ஹஜ்ரத் ஏற்பு உரையாற்றினார்.  ஜாமிஆ பேராசிரியர் மௌலானா மௌலவி ஜாக்கிர் ஹூசைன் ஹஜ்ரத் நன்றி கூறினார் மௌலானா மௌலவி அல்லாமா முப்தி அப்துர் ரப் ஹஜ்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நன்றி ;- லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.