Saturday, May 31, 2014

பெரு விரல்களை முத்தமிட்டுக் கொள்ளல்


கண்ணிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கப்படுகிறது, "கியாமத் நீதி தீர்ப்பு நாளிலே, அதானின் போது என்பெயர் கேட்டவுடன் தன் பெருவிரல்களை தன் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டவரை நான் தேடுவேன். அவரை நான் சுவனத்திற்கு இட்டுச் செல்வேன்."
[ஸலாத் அல் மஸ்'ஊதி, பாகம் - 2, அத்தியாயம் - 20]

பெரு விரல்களை முத்தமிடுவதற்கான அனுமதி

அதானின் போது பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருநாமம் கேட்டவுடன் தம் பெருவிரல் நகங்களை கண்களில் ஒற்றிக் கொள்வது ஹராம் என சிலர் கூறுவார்கள். ஆனால் அஹ்லு ஸுன்னத் வல் ஜமா'அத், பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரை அதானின் போது கேட்டவுடனேயே ஸலவாத்துக்கூறி பெருவிரல்களை முத்தமிட்டுக் கொள்வதற்கு அனுமதி உண்டு என்றுக் கூறுகிறது.

பரிசுத் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள், "யாராயினும் ஒருவர் முஹம்மத் எனும் என் நாமத்தை தன் கரங்களால் தொட்டு அக்கரங்களை தன் உதடுகளால் முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால், அவர் அல்லாஹ்வை( நாளை மறுமை நாளில்) அவனுடைய நேர்வழிப்பெற்ற நல்லடியார்கள் காண்பது போல் காண்பார். அவர் பாவியாக இருந்தாலுங்கூட அவருக்காகப் பரிந்துரைப்பது எனக்கு நெருக்கமாகிவிடும்."
[அந் நவாfபி'உல் அத்ரிய்யா]

சுவரக்க லோகத்தில் ஆதி பிதா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை காண்பதற்கு ஆவலுற்றப்போது அல்லாஹ் வஹி மூலம் அவர்களுக்கு அறிவித்தான்,
"பிற்காலங்களில் உங்களுடைய சந்ததியில் அன்னவர்கள் தெளிவாக வெளியாகுவார்கள்"
பிறகு ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் தான் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லல்லத்தைக் காண ஆவலுற்றிப்பதாகக் கூறினார்கள். அல்லாஹுத'ஆலா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வலது கரத்தின் ஷஹாதது விரலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லத்தின் நூரொளியை வெளியாக்கிக் காட்டினான்.

அந்த நூரொளி அல்லாஹுதஆ'லாவை தஸ்பீஹ் செய்துக் கொண்டிருந்தது.
இந்தக் காரணத்தால்தான் இந்த விரல் கலிமா விரல் என அறியப்படுகிறது.
அத்தோடு அல்லாஹுத'ஆலா ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இரண்டு பெருவிரல் நகங்களிலும் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லலம் அன்னவர்களின் அழகை ஒரு கண்ணாடியில் காண்பது போல் வெளியாக்கிக் காட்டினான்.

உடனே ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் தன் இரண்டு பெருவிரல் நகங்களையும் முத்தமிட்டு தனது முபாரக்கான கண்களில் தடாவிக் கொண்டார்கள்.

இதனால்தான் ஹஸ்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த ஸுன்னாவை அவர்களின் 
பரம்பரையினர் பற்றிப்பிடித்துக் கொண்டனர்.
இப்படி ஜிப்ரீல் அமீன் அலைஹிஸ்ஸலாம் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களிடம் அறிவித்தப்போது, அன்னவர்கள் கூறினார்கள்,
" ஒருவர் அதானின்போது என் பெயர் சொல்லக் கேட்டு தன் பெருவிரல்நகங்களை முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால் அவர் ஒருபோதும் குருடாகமாட்டார்."

தfப்ஸீர் ரூஹுல் பயான்

(அன்னவர்களுக்குரிய கண்ணியத்தைக் கொடுக்காததாலேயே இன்று அகக்கண் குருடர்களையும் அறிவுக்கண் குருடர்ளையும் ஏராளமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம்)

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

இக்லாஸ் எனும் இதய சுத்தி


30-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.

தலைப்பு ;- இக்லாஸ் எனும் இதய சுத்தி

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத்
துணை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

Sunday, May 25, 2014

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!


முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 27 (26-05-2014) திங்கட் கிழமை பின்னேரம்,செவ்வாய் இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் துணை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும்.


இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள்,மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச் சிறப்பாக நடைபெற்ற உள்ளது. இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அனைத்து நல்லுள்ளங்களும், கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.ஆமீன்..

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்.

தஃப்ஸீர் ( குர்ஆன் விரிவுரை. )

  23 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.




மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

தலைப்பு ;- மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!! 

சிறப்புப்பேருரை ;-
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முன்னால் பேராசிரியரும்,சென்னை,புதுப்பேட்டை,ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்,மௌலானா மௌலவி எஸ்.முஹம்மது அலி ஃபாஜில் 
மன்பயீ ஹஜ்ரத் .அவர்கள்.(23-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை.   

எஸ்எஸ்..கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.


தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னால் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னால்  முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும்.எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.

    MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 1/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 2/8



MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 3/8

MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 4/8



MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 5/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 6/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 7/8


MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 8/8

மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவுகள்.

மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -1 
Isra Wal Miraj Bayan Part -1



மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -2 
Isra Wal Miraj Bayan Part -2


மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -3 
Isra Wal Miraj Bayan Part -3

ஆட்சியும் அதிகாரமும் அவன் ஒருவனுக்கே!


23-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.

தலைப்பு ;- ஆட்சியும் அதிகாரமும் அவன் ஒருவனுக்கே! 

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத்
துணை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

Thursday, May 22, 2014

தஞ்சை மாநகரில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாஅத் வெற்றி மாநாடு


                                

ஆசிரியரும் மாணவர்களும்

  18 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

 தலைப்பு ;- ஆசிரியரும் மாணவர்களும் 
சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.


நபி சிக்கந்தர் துல் கர்ணைன் ( அலை )

  10 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

 தலைப்பு ;- நபி சிக்கந்தர் துல் கர்ணைன் ( அலை ) 
சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.


rehna mappila song 2013 இஸ்லாமிய பாடகி ரெஹ்னா

கேரளாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பாடகி ரெஹ்னா அவர்கள்,பெருமானாரை புகழ்ந்து பாடிய  அற்புதமான பாடல்கள்

Rahna sings a song - Pathinalam Ravu (49-4)



Patturumaal: 'Makka madina njan...' by Ashraf Thayneri, Rehna




Rahana singing in Pathinalam Ravu Grand Finale


Patturumal: Mappila pattu by Benzeera மாப்பிளை பாட்டு

கேரளாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பாடகி பென்ஸீரா அவர்கள்,பெருமானாரை புகழ்ந்து பாடிய  ஓர் அற்புதமான பாடல்

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 151 - ஆம் ஆண்டு விழா மற்றும் 70 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா








ஜாமிஆவின் சிறப்புமிகு 70-ஆம் ஆண்டு பட்டயம் வழங்கும் மாபெரும் பெருவிழா மென்மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன்பணி சிறக்கவும்,பட்டமளிப்பு பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும்,மரியாதைக்குரிய,உலமாப்பெருமக்கள் அனைவரையும்,பட்டமளிப்பு பெருவிழாவில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்,அகமுவந்து வரவேற்று,வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.காம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Monday, May 19, 2014

எழில் மிகு வாலிநோக்கத்தில் நமது உயிரினும் மேலான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் புனித மீலாதுப் பெருவிழா








இச்சிறப்பு மிகு பெருவிழா மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Saturday, May 17, 2014

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செயற்குழு கூட்டம்



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செயற்குழு கூட்டம்,சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலில் 09--04-- 2014 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சபையின் தலைவர் மௌலானா ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹழ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் மௌலானா தேங்கை மு.ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் அனைவரையும்,வரவேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார்கள்.மேலப்பாளையம் சைய்யிது அஹமது இன்ஜினியர் அவர்கள் மதுரையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய தலைமையகத்தைப் பற்றி விளக்கமாக தெளிவுபடுத்தி பேசினார்கள்.

மௌலானா சுல்தான் ஹழ்ரத் அவர்கள் மாநில தேர்தல் எவ்வாறுநடத்தப்படவேண்டும் என்பதை மிக விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.தொடர்ந்து மாவட்ட பொருப்பாளர்கள் தங்களின் கருத்துகளை கூறினார்கள்.இறுதியில் சபையின் தலைவர் அவர்கள் எதிர்வரும் மாநில தேர்தல் சேலத்தில் நடத்துவது எனவும்,அதற்காக,மௌலானா அபூதாஹீர் பாக்கவி ஹழ்ரத் அவர்களது தலைமையில்,நெல்லை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ ஆலோசகர் மௌலானா B.A.K.அப்துர் ரஹீம் ஹழ்ரத் உட்பட 11 உலமாக்கள் கொண்ட தேர்தல் குழுவை அறிவித்தார்கள்.




மேற்படி கூட்டத்திற்கு நெல்லை மாவட்டத்திலிருந்து  நெல்லை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ ஆலோசகர் மௌலானா B.A.K.அப்துர் ரஹீம் ஹழ்ரத் அவர்கள் தலைமையில்,நெல்லை மாநகர தலைவரும்,மாவட்ட அரசு காஜியுமான மௌலானா K.முஹம்மது கஸ்ஸாலி ஹழ்ரத்,மாநகர இணைச்செயலாளர் மௌலானா  F.ஜமால் முஹம்மது ஹழ்ரத் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.இறுதியில் சேலம் மதரஸா மழாஹிருல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா அனீஸ்கான் ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்...


நன்றி ;- அல் மதீனா மாத இதழ்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.

கண்ணிய மிகு உலமாப் பெருமக்களுக்கான சலுகை


பள்ளி வாசல் , முஸ்லிம் அனாதை இல்லம் , மதரஸா-களில் பனி புரியும் ஆலிம்கள் , ஆலிமாக்கள் , பேஷ் இமாம்கள் , அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டப் ணியாளர்கள்,
பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் முன்நேற்றம் அடைவதர்க்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப் பட்டு செயல்ப்பட்டு வருகிறது.
இவாரியத்தில் உறுப்பினராக பதிவுச் செய்ய 13 வயது‌ நிறைவு 60 க்குள் இருக்க வேண்டும். பதிவு செ‌ய்த உட‌ன் ஓர் - ID CARD (அடயாள அட்டை) இலவசமாக இவ்வாரியத்தால்
வளங்கப்படும். அடையாள அட்டை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்....

A) விபத்து

-
1) விபத்தினால் மரணம் ஏற்ப்பட்டால் - 100000
2) விபத்தினால் ஊனம் ஏற்ப்பட்டால் -10,000 முத‌ல் 100000
3) இயற்கை மரணம் -15000
4) ஈமச்சடகு சடங்கு - 2000

B) கல்வி உதவித் தொகை :-

1) 10 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000
2) 10 - ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு - 1000
3) 11 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000
4) 12 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1500
5) 12 - ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு - 1500
6) முறையான பட்டப் படிப்பு - 1500
7) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப் படிப்பு - 1750
8) முறையான பட்டப் மேற்ப் படிப்பு - 2000
9) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய முறையான பட்டப் மேற்ப் படிப்பு - 3000
10) தொழிற் கல்வி பட்டப் படிப்பு - 2000
11) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற் கல்வி பட்டப் படிப்பு - 4000
12) தொழிற் கல்வி பட்டப் மேற்ப் படிப்பு - 4000
13) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய தொழிற் கல்வி பட்டப் மேற்ப் படிப்பு - 6000
14) ITI அல்லது Polytechnic - 1000
15) மாணவர் இல்ல வசதியுடன் கூடிய ITI அல்லது Polytechnic -1200
16) ‌திருமண உதவித் தொகை - 2000
17) மகப்பேறு உதவித் தொகை மாதத்திர்க்கு ரூ.1000/வீதம் 6 மாதத்திர்க்கு - 6000
18) கண் கண்ணாடி செலவு ( தொகையை ஈடு செய்தல்) - 500 (max)
19) முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் தோறும் - 500

சகோதரர்களே ! இதுவரை 13464 உலமாக்கள் நல வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்திர்க்கு 2013 -2014ஆ‌ம் ஆண்டிற்க்கு 1 கோடி ‌‌நி‌தி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tuesday, May 13, 2014

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ்


சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது..

வண்டலூரில் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பி.எஸ்.அப்துர் ரகுமான் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது, இங்கு 45 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி பரிமாற்றம் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

இங்கு பயின்ற மாணவர்கள் சர்வதேச அளவில் உலகெங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றனர்.

அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆய்வுத்திறனை சர்வதேச அளவில் மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் வழிகாட்டுதலுக்கு வகை செய்யப்பட்டுள்ளது.


தற்போது தேசியத் தர அங்கீகாரக் கவுன்சில் வழங்கியுள்ள ஏ கிரேடு சான்றிதழ் கிடைத்திருப்பதால் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேம்படுத்தி புதிய படிப்புகள், ஆய்வு நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Monday, May 12, 2014

فيلم عمر المختار (مدبلج) - بطولة أنطونى كوين - إنتاج عام 1981 " Lion Of The Desert

பாலைவனச் சிங்கம்  ஹஜ்ரத் உமர் முக்தார் அவர்கள்



TRUTH REVEALED : The Message (1977) - History Of Islam

இஸ்லாமிய வரலாற்றைப் பற்றிய ஒரு திரைப்படம்


மூன் டிவியின் நம்மோடு தாஜ்

இஸ்லாமிய பாடகர் அல்ஹாஜ் தாஜுத்தீன் ஃபைஜி அவர்களின் மூன்டி.வி.நிகழ்ச்சியான, நம்மோடு தாஜ்

PART 1


PART 2


PART 3


PART 4

கீழக்கரையில் நடைபெற்ற மாபெரும் கிராஅத் போட்டி

கீழக்கரையில் மூன் .T.V.நடத்திய மபெரும் கிராஅத்துல் குர்ஆன் போட்டி


PART 1

ச்

PART 2


PART 3

சென்னை பிலாலியா அரபுக்கல்லூரியின் மாபெரும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ்

PART 1


PART 2


PART 3


PART 4

Thursday, May 8, 2014

மலேசியத் திருநாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பெருமானாரின் புனித மௌலிது மஜ்லிஸ்கள்

மலேசியத் தலைநகர்,DATARAN MERDEKA  வில் HABIB SYECH BIN QODIR ASSEQAF & HABIB ALI ZAENAL ABIDIN AL HAMID ஆகியோர்   சிறப்பாக நடத்திய பெருமானாரின் மௌலிது மஜ்லிஸ்,




மலேசியத் தலைநகர், PUTRA JAYA வில் HABIB SYECH BIN QODIR ASSEQAF & HABIB ALI ZAENAL ABIDIN AL HAMID ஆகியோர்   சிறப்பாக நடத்திய பெருமானாரின் மௌலிது மஜ்லிஸ்,


Monday, May 5, 2014

பினாங்கு இந்திய முஸ்லிம் கலாச்சார விழா

The Unforgettable Qawwali by : Nagore Saints live in Penang,
Indian Muslim Cultural & Heritage Celebration on : 07.07.2013
@ Kapitan Keling Mosque, Penang




Special Qawwali Song "Kapitan Palli " by Nagore Saints

The Unforgettable QIWAALI 2013 - The Nagore Saints




THANKS :- PENANG INDIAN MUSLIM .TV

நீங்களும் சந்தோசமாகலாம்.





மனிதன் சிறந்தவன்
நான் சிறந்த மனிதன்
இப்படி எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
ஆனால் நீங்கள் எப்பொழுது சிறந்த மனிதனாகி சந்தஷோப்பட்டுக் கொள்ள முடியும்?

ஆதமுடைய மக்களை நாம் கண்ணியப்படுத்தினோம் என்று அல்லாஹ் {17 ;70} கூறுகிறான்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ

மனிதன் சிறந்தவனாக,உயர்ந்தவனாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டு இருக்கிறான் என்றால், எந்த வகையில் அவன் சிறந்தவன்?,என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரங் களைத் தேடுவதிலே தேவையான அறிவையும், ஆற்றலையும் அவன் பெற்றிருக் கிறான்.அதனால் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா? என்றால், இது மாதிரியான ஆற்றலையும், அறிவையும் உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.


قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى

எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான படை கோலத்தை கொடுத்து அவைகள் வாழும் வழிவகைகளை {அவைகளுக்கு} அறிவித்துக் கொடுத்தானோ அவன் தான் எங்கள் இறைவன்என்று அவர் {மூஸா நபி  {அலை} அவர்கள்}கூறினார். {அல்குர்ஆன் : 20 ; 50}

உலகத்தில் வாழுகின்ற எல்லா உயிரினங்களுக்கும், தாங்கள் எப்படி வாழ வேண்டும், தங்கள் உணவுகளை எப்படித் தேட வேண்டும் என்ற அறிவையும் அதற்குத் தேவையான ஆற்றலையும், அல்லாஹ் கொடுத்து வைத்திருக்கிறான். எனவே நாம் இந்த வகையில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது.

தேளுக்கும்,தேரைக்கும் உணவளித்த அல்லாஹ் அவைகளை எங்கே எப்படித் தேட வேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்தான்

தேளுக்குறிய உணவுகளில் மிகவும் பிடித்த உணவு {நமக்கு பிரியாணியைப் போல} அதற்கு கரப்பான் பூச்சி.அதைப் பார்த்து விட்டால் அதற்குக் கொண்டாட்டம் தான். உடனே அதனை கபளிகரம் செய்து விடும்.

கரப்பான் பூச்சி நடக்கும், ஒடும். தேவைப்பட்டால் பறக்கும். ஆனால் தேள் மெதுவாக ஊர்ந்து செல்லும்.பறக்கவோ,வேகமாக ஓடவோ முடியாது. அது எப்படி கரப்பான் பூச்சியை வேட்டையாட முடியும்? என்றால், அல்லாஹ் தேளுக்கு வசீகரம் செய்யும் ஒரு யுக்தியை அதற்கு கொடுத்திருக்கிறான். கரப்பான் பூச்சியைக் கண்டவுடன் கொடுக்கை மேலே தூக்கி அது நடனமாட ஆரம்பித்து விடும். அந்த நடனத்தைப் பார்த்து கரப்பான் பூச்சி அதன் அழகிலே மயங்கி,சொக்கிப் போய் அப்படியே நின்று விடும். அழகுக்கும், நடனத்திற்கும் மயங்காதோர் இந்தப் பாரில் உண்டோ! இந்த ஆட்டத்தைப் பார்த்து மயங்கிய அந்த கரப்பான் பூச்சியை தனது கொடுக்கால் ஒரு போடு போட்டு மயக்க நிலையில் வைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சுவைத்து உண்ணும்.

உலகில் மனிதன் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எறும்புகள் வாழ்ந்துள்ளன.அவை எட்டாயிரத்திற்கும் அதிகமான இனங்களாக உள்ளன.எறும்புகள் தன் எடையை விட ஐம்பது மடங்கு அதிகமான பளுவான பொருட்களையும் நகர்த்த முடியும்.எறும்புகளுக்கு ஆறு கால்களுண்டு.அந்தக் கால்களால் பூமியைத் தோண்டி புற்றுகள் அமைத்துக் கொள்ளும். உலகில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் பிராணிகள் நான்கு ;  மனிதன்,எலி,ஹுத்ஹுத் பறவை,எறும்பு.

எறும்பு குளிர் காலத்திற்குத் தேவையான தன்னுடைய உணவை கோடை காலத்திலேயே சேமித்து வைத்துக் கொள்ளும். ஏனெனில் மழை காலத்தில் இரை தேட முடியாத காரணத்தினால் அது வெளியே வருவதில்லை. மண்ணுக்கடியில் சேமித்து வைக்கப்படும் விதை முளைத்து விடக்கூடாது என்பதற்காக அதை இரு துண்டாக உடைத்து விடும். அப்போது தான் அது முளைக்காது. மழை பெய்து முடிந்து விட்டால் ஈரமாகி விட்ட அந்த உணவுப் பொருட்களை மேலே எடுத்து வந்து பரப்பி காய வைக்கும்.காய்ந்த பின் மீண்டும் பொந்தில் எடுத்து வைத்துக் கொள்ளும். ஆக எறும்புக்கும் தேளுக்கும் கூட இரை தேடக்கூடிய அறிவும் அதை பாதுகாக்கக் கூடிய அறிவும் இருக்கிறது.

பாம்பு பாலை வனத்தில் இரை கிடைக்க வில்லையெனில் தன்னை மரக்கட்டை மாதிரி ஆக்கி அப்படியே கிடக்குமாம். அப்போது அதன் மீது வந்து அமரும் பறவைகளை அடித்துத் திண்ணும்.

முதலைக்கு பல் வலி வரும். அதன் பல் இடுக்குகளில் சிக்கியிருக்கும் இறைச்சி தான் காரணம்.இப்போது முதலைக்கு பல் குத்த வேண்டும்.யார் குத்தி விடுவது? அது தானாக குத்த முடியாது. அதற்கு கை இல்லை.வேறு யாரும் குத்த வந்தால் அது சும்மா விடுமா?அதற்காக அதை படைத்தவன் பல்வலியோடு அதை சும்மா விட்டு வைப்பானா...? அதனால் பல் வலி அதிகமாகும் போது அது கரைக்கு ஒதுங்கி தனது அகன்ற வாயை திறந்து வைத்துக் கொண்டு ஆடாமல் அசையாமல் அப்படியே கிடக்கும். அப்போது குக்கூ என்ற ஒரு பறவை அதன் வாயில் அமர்ந்து அதன் பற்களுக்கு இடையே இருக்கும் இறைச்சியை தனது அலகால் கொத்திக் கொத்தித் திண்ணும்.முதலைக்கு இப்போது சுகமாக இருக்கிறது. பறவைக்கு அது உணவாக இருக்கிறது.இடுக்கிலுள்ள இறைச்சியை பறவை எடுத்து திண்ணதும் பல் வலியிருந்து சுகம் பெற்ற நன்றி கெட்ட முதலை தனக்குப் பல் மருத்துவம் பார்த்த அந்தப் பறவையை சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்டு வாயை மூடப் போகும். அப்போது அந்தப் பறவையின் தலைக்கு மேலே கூர்மையான ஒரு எலும்பு தள்ளிக்கொண்டிருக்கும். அது முதலையின் வாயில் குத்த ஆ..... என்று அது திரும்ப வாயைப் பிளக்க பறவை தப்பிக்க பறந்து விடும்.

இப்படி முதலைக்கு பல் குத்துவதற்கு வகை செய்த அல்லாஹ்,அந்த பறவைக்கு முதலையின் பல் இடுக்கில் உணவு கொடுத்த அல்லாஹ்,அதன் தலையில் தற்காப்புக்காக ஊசி எலும்பை வைத்த அல்லாஹ் எல்லாப் படைப்புகளுக்கும் வாழ வழிவகை செய்திருக்கிறான். எனவே மனிதன் வாழ்வாதாரம் தேடி தன்னைத் அவன் தற்காத்துக் கொள்கிறான் என்பதினால் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியாது அல்லவா......!

மனிதனுக்கு அறிவு இருக்கிறது என்ற காரணத்தினால் அவன் சிறந்தவனா?மனிதனுக்குத் தெரியாத அடிப்படையான சில விஷயங்கள் கூட மற்ற உயிரினங்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதிலிருந்து மனிதன் பாடம் பெற்றிருக்கிறான்.

உலகத்தின் முதல் மனித வரலாறு இதற்கு சான்று. ஆதம் (அலை) அவர்களின் இரண்டு மகன்களில் காபில் என்பவர் ஹாபிலைக் கொலை செய்து விடுகிறார். கொலை செய்து விட்டு அந்தப் பிரேதத்தை என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரிய வில்லை. பிரேதத்தை தோளிலே போட்டுக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சுமந்து திரிகிறார்.அப்போது அல்லாஹ் ஒரு காகத்தின் வழியே அவருக்குக் கற்றுக் கொடுத்தான்.


فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْأَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَا أَعَجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْأَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِين
َ
தன் சகோதரனின் பிரேதத்தை எவ்வாறு மறைப்பது என்பதை அவருக்குக் காட்டுவதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான்.அது பூமியைத் தோண்டியது.{அதைப் பார்த்த} அவர்அந்தோ! நான் இந்தக் காகத்தைப் போன்று ஆகுவதற்குக் கூட இயலாது போகி விட்டேனே!அப்படியிருந்தால் என் சகோதரனின் பிரேதத்தை மறைத்திருப்பேனே! என்று கைசேதப்படுபவராக ஆகிவிட்டார். அல்குர்ஆன்.  {5 ; 31}

மனிதனுக்கு பிரேதத்தைப் புதைக்கும் அறிவை காகம் கற்றுக் கொடுத்தது. இந்த வகையில் காகம் தான் மனிதனுக்கு முதல் ஆசிரியன்.

நபி மூஸா (அலை) அவர்கள் ஞானத்தைத் தேடி கிழ்ர் (அலை) அவர்களிடம் சென்றார்கள். கப்பலிலே அந்த ஆன்மீகப் பயணம் தொடங்குகிறது, அந்தப் பயணத்தில் சிட்டுக்குருவி ஒன்று கப்பலின் விளிம்பில் வந்து அமர்ந்து, அந்த கடலில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை கொத்தியது. அப்போது பாடம் ஆரம்பித்து விட்டது, அங்கே புத்தகம் இல்லை. அங்கு பாடப் புத்தகமே அந்தச் சிட்டுக்குருவி தான். கிழ்ர்{அலை}  அவர்கள் மூஸா (அலை) அவர்களிடத்தில் சொன்னார்கள் ; கல்வி என்பது இந்தக் கடல் அளவு என்றால் நாம் பெற்றிருக்கும் கல்வி என்பது இந்தக் சிட்டுக்குருவியின் அலகில் ஒட்டியிருக்கும் தண்ணீர் சொட்டின் அளவு தான். இங்கே சிட்டுக் குருவியின் மூலமாக அல்லாஹ் பாடம் கற்பித்துக் கொடுத்தான்.

இன்று உலக நாடுகளில் பல்வேறு துறைகள் இருந்தாலும், உளவுத் துறை என்பது எல்லா நாட்டிலும் இருக்கக்கூடிய முக்கியமான துறைகளில் ஒன்று. ஒரு நாட்டுக்கு எதிரான செய்திகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கக்கூடிய முக்கியமான தகவல்களை சேகரிக்கும் அந்த உளவுத்துறை  மனிதனுக்கு சொந்தமானது, மனிதனுக்கு மட்டும் விஷேசமானது என்று சொல்லமுடியுமா .....?அந்த உளவுத்துறை ரிப்போர்ட்டை சுலைமான் (அலை) அவர்களுக்கு ஹுத்ஹுத் பறவை சொன்னதாக குர்ஆன் சொல்கிறது.


وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ الي اخر قصة بلقيس

அகில உலகத்தையும் கட்டி ஆண்ட சுலைமான் (அலை) அவர்களுக்கு “நாம் இன்னும் பிடிக்க வேண்டிய ஒரு நாடு இருக்கிறது,அதன் பெயர் ஸபா. அந்த நாட்டில் ஒரு அரசும் இருக்கிறது,அதை ஆளுபவர் ஒரு அரசி” என்ற செய்தியை அந்த ஹுத்ஹுத் பறவை சொன்னது. {அல்குர்ஆன் : 27 ; 22 }

மட்டுமல்ல,அந்தப் பறவை வானில் உயரத்தில் பறந்தாலும் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் அறிவையும், தெளிவையும் பெற்றிருக்கிறது. நிலத்தில் நீர் ஓட்டம் எங்கிருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும் என்றால் கருவி வேண்டும். ஆனால் அது கருவி இல்லாமலேயே பார்த்து விடுகிறது. இந்த விஷயத்தில் நாம் பறவையை விட தாழ்ந்த நிலையில் தான் இருக்கிறோம்.

மனிதனுக்கு மருத்துவ ஞானம் இருக்கிறது என்பதால் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா?முடியாது.ஏனெனில் எல்லா உயிரினங் களுக்கும் தன் உடல் நலத்தைப் பாதுகாக்கும் தேவையான அறிவு இருக்கிறது.

தேவ்பந்த தாருல் உலூமின் துணை வேந்தராக இருந்த காரி தைய்யிப் ஸாப் அவர்கள் ஒரு அனுபவத்தைக் குறிப்பிடுகிறார்கள். அயோத்தியாவில் குரங்குகள் அதிகம்.வீடுகளில் அது புகுந்து செய்யும் தொல்லைகளும் அதிகம்.{குற்றால குரங்குகளில் நமக்கும் இந்த அனுபவம் உண்டு} உணவுகளை பத்திரமாக பாதுகாக்க முடியாது.அது வந்து எடுத்துச் சென்று விடும். அதற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து  ரொட்டியில் விஷம் கலந்து அதை வீட்டு மொட்டை மாடியில் பரத்தி வைத்தார்கள்.

ஒரு குரங்கு வந்தது.அது அதை எடுத்து சாப்பிடப் போனது. தொடர்ந்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கு அங்கே ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வந்த குரங்கு அந்த ரொட்டியை எடுத்து சாப்பிடாமல் அதை எடுத்து நுகர்ந்து பார்த்தது.பிறகு அதை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டது.

ஆகா.....! திட்டம் தோல்வியுற்று விட்டதே என்று எண்ணிக் கொண்டிருக் கையில் சென்ற குரங்கு அங்கு பெரிய பட்டாளத்தோடு திரும்பி வந்து சேர்ந்தது.வந்த எல்லா குரங்கின் கையிலும் ஒரு செடி இருந்தது. ரொட்டியை ஒரு கடி,செடியில் ஒரு கடி. அது விஷ முறிவு மூலிகைச் செடி.வீட்டுக் காரனைப் பார்த்து கண்ணடித்துக் கொண்டே எல்லா ரொட்டிகளையும் திண்ணுத் தீர்த்து ஏப்பம் விட்டு பை பை சொல்லிச் சென்று விட்டது.

வீட்டுக்காரன் அதற்கு புத்தி புகட்ட நினைத்தால் அது அவனுக்கு புத்தி புகட்டிச்சென்று விட்டது.இங்கே மனிதன் குரங்கிடம் ஏமாந்தான்.

எனவே எல்லா உயிரினங்களுக்கும் உடல் நலம் காக்கும் மருத்துவ அறிவு தேவையான அளவு இருக்கிறது.எனவே மனிதன் மருத்துவ ஞானத்தாலும் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியாது.

திரை கடல் ஒடி திரவியம் தேடுவதில் நாம் சிறந்தவர்கள் என சொல்ல முடியுமா....?

இதில் கடல்வாழ் மீனினங்களும்,வான் பறவைகளும் நமக்கு சளைத்தவர்கள் அல்ல.

ஐரோப்பா கண்டத்திலிருந்து சற்றும் ஒய்வெடுக்காமல் திசை தப்பாமல் வேடந்தாங்களுக்கு வருடந்தோறும் அதிசயமான முறையில் வரும் பறைவைகளை நாம் பார்த்திருக்கிறோம். உலகத்தில் வாழும் மொத்த பறவைகளில் ஐந்தில் ஒரு பங்கு குளிர்காலத்தில் இப்படி பரதேசம் போகின்றன. அண்டார்ட்டிக்கா வின் ஸ்கூவா பறவைகள் ஜப்பானுக்கு போகின்றன.

குக்கூ பறவை நியூசிலாந்திலிருந்து சாலமன் தீவுகளுக்கு பறந்து போகின்றன. சில பறவைகள்,ஆச்சரியம், நடந்து கூட போகின்றன.

வைட்டாக்கி என்னும் பறவைகள் நதிகளை கடக்கும் போது மட்டும் பறந்து, மற்ற நேரங்களில் நடந்தே செல்கின்றன. ஆர்ட்டிக் டெர்ன் என்பது படு ஆச்சரியப்பறவை. வருஷத்திற்கு இரு முறை வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை போகிறது.

பறவை மட்டுமல்ல, மிருகங்களும் கூட.....! மீன் வகைகளும் திமிங்கலங்களும் கூட இவ்வாறு பயணம் செய்கிறது. எல்லாமே குளிர்காலத்தை தவிர்ப்பதற்காகவும்,உணவு தேடுவதற்காகவும் இப்படி தூரப்பயணம் செய்கின்றன. இவற்றால் எப்படி வருடம் தவறாமல் திசை பிசகாமல் ஒரே இடத்திற்கு சென்று திரும்ப வர முடிகிறது.....?ஆராய்ச்சி செய்கிறார்கள். கிரேமர் என்பவர் குறிப்பாக பல பரிசோதனைகள் செய்திருக்கிறார்.

பறவைகளுக்குள் ஒருவிதமான காலபரிமாணம் இருக்கிறது என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். காலத்தைப்பற்றிய உள்உணர்வு இல்லாவிட்டால் இம்மாதிரி பயணம் செய்ய முடியாது. கிரேமரின் பரிசோதனைகள் பறவைகள் சூரியனின் திசைகளைக் கொண்டு பறக்கலாம் என்று நிருபித்தன. திருகுர்ஆனின் 20; 50 வது வசனத்திற்கான விளக்கமாக அமைந்த இந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளும் நிரூபனங்களும் சொல்லும் செய்தி என்ன வென்றால், எல்லா உயிரினங்களும் வயிறு வளர்க்கவும், பிழைக்கவும்,உயிர் வாழவும் வழிவகைகள் தெரிந்திருகின்றன. எனவே வையகத்தில் வெறுமனே இப்படி உயிர் வாழ்வதால் மட்டும் மனிதன் சிறந்தவன் என்று கருதி விட முடியாது.

இன்னும் நாம் சிந்தித்துப் பார்த்தால் சின்னஞ் சிறிய பிராணிகளிடம் கூட மனிதனிடம் இல்லாத நேயங்களும்,இனம் காக்கும் உணர்வுகளும் அதிகம் இருக்கிறது.

அதே சுலைமான் {அலை} அவர்களைப் பற்றி இன்னொரு செய்தியும் குர்ஆனில் பதிவாகியிருக்கிறது. படைபரிவாரங்களோடு நபி சுலைமான் (அலை) அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு எறும்பு சொன்ன செய்தி ;


قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

எறும்புக் கூட்டமே! சுலைமானும் அவரது படைகளும் அறியாத நிலையில் உங்களை நசுக்கி விடாமல் இருக்க நீங்கள் உங்களது புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள் என்று ஒரு எறும்பு சொன்னது. அல்குர்ஆன். {27 ; 18}

ஆட்சியும்,ஆதிகாரமும் மனிதனுக்கு மட்டுமல்ல எறும்புக்குக் கூட  இருக்கிறது, நமக்கு மட்டுமல்ல எறும்புகளுக்கும் அதிகாரம் செய்யும் ஒரு ஆட்சித் தலைவர் இருக்கிறார். தலைமைக்குக் கட்டுப்படுகின்ற தன்மை மனிதனை விட எறும்புக்கு நல்லவே இருக்கிறது என்பதை சுலைமான் {அலை} அவர்களுக்கு அல்லாஹ் அந்த எறும்பின் மூலம் உணர்த்தினான்.

தன் இனம் வாழ வேண்டும்,அது அழிந்து விடக்கூடாது என்ற கவலையும்,சமுதாய சிந்தனையும் அந்த எறும்புக்கு இருந்த காரணத்தினால், தன் இனத்திற்காக அது செய்த உத்தரவை குர்ஆனில் அல்லாஹ் பதிவு செய்திருக்கிறான்.

எறும்பு பார்ப்பதற்கு ஒரு சின்னப் பிராணியாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட எறும்புக்குக் கூட ஒரு ஆட்சியும்,கட்டமைப்பும் இருக்கிறது. தலைமைக்குக் கட்டுப்படுகின்ற தன்மை இருக்கிறது,சோம்பேறித்தனம் இல்லாத சுறுசுறுப்பு இருக்கிறது.

எறும்புகளுக்கு தன் இனத்தைக் காக்க வேண்டும்,வாழ வைக்க வேண்டுமென்ற சமூக சிந்தனையும் உண்டு.உணவிருக்கும் இடம் ஒரு எறும்புக்கு தெரிந்து விட்டால் மற்ற எறும்புகளையும் அழைத்து வந்து அவ்வுணவுப் பொருட்களை சாப்பிடும்.பிறகு எஞ்சியதை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதைப் பார்க்கிறோம்.


எனவே நாம் சிறந்தவர்கள் என அல்லாஹ் சொல்வதற்கும், நாம் கருதுவதற்கும் என்ன காரணம் என்பதை நாம் சிந்தித்தால், அதற்கான விடையை  திருக்குர்ஆன் {2 ; 30} நமக்குத் தருகிறது.


إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً

“மனிதன் இந்த உலகத்தில் என்னுடைய பிரதிநிதி” என்று அல்லாஹ் கூறுகிறான்.

பிரதிநிதி என்றால் பிரதிபலிப்பவன். ஆகவே அல்லாஹ்வுடைய பிரதிநிதியான மனிதன் அவனை தன்னில் வெளிப்படுத்தி அவனை பிரதிபலிக்க வேண்டும். ஒரு நாட்டினுடைய பிரதிநிதியாக இன்னொரு நாட்டிற்கு செல்லக் கூடிய தூதர் தனது  நாட்டினுடைய கருத்தை அங்கே பிரதிபலிக்கிறார். தனது சொந்த நாட்டினுடைய சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் அங்கே அவர் எடுத்துச்சொல்கிறார்.

அல்லாஹ்வுடைய பிரதிநிதியாக இருக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை பிரதிபலிக்க வேண்டும். அல்லாஹ்வை எப்படி பிரதிபலிக்க வேண்டும்..?அல்லாஹ்வுக்கு கோலம் இல்லை. ஆனால் குணங்கள் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு தன்மைகள் இருக்கிறது. அந்த தன்மைகளை நாம் நம்மில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.


تخلقوا باخلاق الله

“அல்லாஹ்வுடைய குணங்களை நீங்கள் உங்களிடத்தில் பிரதிலிக்கச் செய்யுங்கள்” என்று கண்மணி நாயகம் {ஸல்} அவர்கள் சொன்னார்கள்.

சூரியன் உதிக்கிறது.பாறையில் விழுகிறது.பாறையில் விழுகின்ற சூரியன் தெரிவதில்லை.ஆனால் தெளிந்த நீரோடையில் விழுகின்ற சூரியன் அதிலே தெரிகிறது.ஏனென்றால் அந்த நீர் தெளிந்திருக்கிறது. அதனால் அப்படியே பிரதிபலிக்கிறது.

இதுமாதிரி நம்முடைய இதயத்தை தெளிவானதாக ஆக்கினால், நம்முடைய இதயமும் இறைபண்புகளை உள்வாங்கி ஜெகத்தில் ஜொலிக்கும்.

மோசமான தீய குணங்களை இதயத்தை விட்டும் அகற்றி மனதோடு போராடி ஆசை, கோபம், காமம் இது மாதிரியான பொல்லாத அம்சங்களை அதை விட்டும் அகற்றி அதை நாம் பரிசுத்தப்படுத்தினால் இந்த பிரபஞ்சமே அதில் பிரதிபலிக்கும் என்ற உண்மையை நாம் அதில் பார்க்கிறோம்.

அல்லாமா ரூமி (ரஹ்) அவர்கள் மஸ்னவி ஷரீபில் எழுதுகிறார்கள் ; ரோமானியர்கள், சீனர்கள் இருவருமே ஒவியக்கலையில் ரொம்ப கைதேர்ந்த நிபுணர்கள். சிறந்த முறையில் ஒவியம் வரையக்கூடியவர்கள். அந்த நாட்டின் அரசரிடத்தில் வந்து எங்கள் கலையில் நாங்கள் சிறந்தவர்கள் என்று இரண்டு பேருமே போட்டி போட்டார்கள். எனவே அதை நிரூபிப்பதற்காக வேண்டி ஒரு பெரிய கட்டிடத்தின் இரண்டு சுவர்களில் ஒன்றை  சீனரிடத்திலும் மற்றொரு சுவரை ரோமரிடத்திலும் ஒப்படைக்கப்பட்டது. இடையில் திரையிடப்பட்டு மறைக்கப்பட்டது-

ஒவ்வொருவரும் தங்களது ஒவியத்திறனை வெளிப்படுத்தி வரையுங்கள். நான் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு இறுதியாக அரசர் வந்து பார்க்கிறார். ஆரம்பமாக சீனர் வரைந்த அந்த ஒவியத்தைப் பார்த்து அதிசயித்துப் போன அரசர் பிரமித்துப் போய் நிற்கிறார்.

ஒரு அழகான தோட்டம். அதிலே பல மரங்கள் இருக்கிறது. பழ வகைகள் பூத்து காய்த்து கனிந்து குலுங்கித் தொங்கிக் கொண்டிருக்கிறது, பறவைகளெல்லாம் அதிலே வந்து அமர்ந்திருக்கிறது. தத்ரூபமான இந்த காட்சியை அந்த சீனர்கள் அந்த ஒவியத்தில் வரைந்து அரசரை அசத்தி விட்டார்கள்.

இப்படியே பிரமித்துப் போன அரசரவர்கள் திரையை நீக்கி இந்த பக்கம் பார்த்தால் அதை விடவும் அதிசயமாக ஒன்றை பார்த்தார். ஏனென்றால் அங்கே பார்த்த அதே படத்தை இங்கே அப்படியே பார்த்தார். அங்கே கண்ட அதே காட்சி இங்கே தெரிகிறது. ஆனால் அங்கே இல்லாத ஒரு அழகு இங்கே இருக்கிறது. அங்கே இல்லாத ஒரு வெளிச்சம் இங்கே பிரகசிக்கிறது.

என்ன நடந்தது என்று......பார்த்தால் ரோமர்கள் படம் வரைவதை விட்டு விட்டு அந்த சுவற்றை செதுக்கி பட்டை தீட்டி அதை பளபளவென்று கண்ணாடியாக ஆக்கிவிட்டிருந்தார்கள். கண்ணாடியாக ஆகிவிட்டதால் அந்த பக்கம் சுவற்றில் உள்ளது அப்படியே பிரதிபலித்து இங்கே பார்க்க முடிந்தது. சீனர்கள் தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தினார்கள், ரோமர்கள் மதி நுட்பத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

இதயத்தை இவ்வாறு நாம் செதுக்கி,தெளிவாக்கி நாம் அதை அழகாக்கினால், நம் உள்ளத்திலும் அகிலத்தின் கோலத்தை, அல்லாஹ்வின் அற்புதத்தை தரிசிக்க முடியும். இந்த உலகத்தில் நாம் அல்லாஹ்வுடைய குணங்களான சகிப்புத் தன்மை, மதிக்கின்ற தன்மை, இரக்கம் செலுத்துகிற தன்மை, தனக்கு மாறு செய்தவருக்குக் கூட இரக்கம் காட்டுகிற தன்மை இது மாதிரியான உயர்ந்த பண்புகளை நம்மிடத்தில் உருவாக்கி  நம்மில் அல்லாஹ்வை பிரதிபலிக்கச் செய்தால் தான் அல்லாஹ்வினுடைய பிரதிநிதியாக அல்லாஹ்வை பிரதி நிதித்துவப்படுத்தக் கூடிய உண்மையான சிறந்த மனிதனாக நாம் ஆக முடியும்.

 “உனது உறவை வெட்டியவனோடு நீ ஒட்டிக்கொள். உனக்கு அநீதமிழைத்தவனை மன்னித்து விடு. உனக்கு தீங்கு செய்தவனுக்கும் நீ உபகாரம் செய்”  நபிமொழி.
صل من قطعك واعف عمن ظلمك واحسن من اساء اليك

ஒரு நாள் ஒரு ராணுவ வீரன் ஊருக்கு வெளியே வந்து கொண்டிருந்தான். அங்கே மஹான் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களை வழியில் கண்டு “மக்கள் குடியிருப்பு எங்கே இருக்கிறது…..? எனக் கேட்டான். அதற்கு மஹான் அவர்கள் கப்ருஸ்தானை (கல்லறையை)க் காட்டி அதோ..... அது தான் என்று சொன்னார்கள். அவனுக்கு கோபம் வந்தது. நான் கப்ருஸ்தானைக் கேட்க வில்லை மக்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் கேட்கிறேன் என்று சொன்னான். அது தான் உண்மையில் மக்கள் குடியிருப்பு என திரும்பவும் சொன்னார்கள். கோபத்தில் கடுமையாக அடித்து விட்டான்.

வேகத்தோடு நகருக்கு வருகிறான். அப்போது நகரத்தில் உள்ள மக்கள் மஹானை உற்சாகத்தோடு வரவேற்றார்கள். அதுகண்டு அதிர்ச்சியுற்ற குதிரை வீரன் நாம் நைய்யப்புடைத்த இந்த மனிதருக்கு இவ்வளவு வரவேற்பா? அப்படியென்றால் இவர் யார்? இவர் தான் பல்க் நாட்டின் பேரரசராக இருந்து முடி துறந்த இறைஞானி  இப்ராஹீம் பின் அத்ஹம் என்று சொல்லப்பட்டது. அப்போது வேதனைப்பட்டு, நானிக்குருகி மஹானிடத்தில் சென்று மன்னிப்பு கேட்டான்.

நீங்கள் யார் என்று தெரியாமல் தவறு நடந்து விட்டது.என்னிடம் நீங்கள் உங்களைப் பற்றி அடிமை என்று சொன்னீர்கள்? அதனால் நடந்த விபரீதம் அல்லவா இது! ஏன் அப்படிச் சொன்னீர்கள்?. அதற்கு இறைஞானி அவர்கள்,அடிமையா?எனக்கேட்டீர். ஆம் என்றேன்.யாருக்கு அடிமை? என்று கேட்கவில்லை.கேட்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அடிமை என்று சொல்லியிருப்பேன் என்றார்.என்னை மன்னித்து எனக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கரைந்துருகி கேட்ட போது என்னை அடிக்கத் தொடங்கிய போதே உன்னை மன்னித்து உனக்கு சொர்க்கம் கிடைக்க பிரார்த்தனை செய்து விட்டேன் என்று சொன்னார்கள்.

அவன் உங்களுக்கு அநியாயம் செய்திருக்க அவனுக்காக இப்படியொரு பிரார்த்தனையா?எனக் கேட்கப்பட்ட போது, அவன் மூலமாக எனக்குத் தீங்கு ஏற்பட்டது. நான் மன்னிக்கவில்லை யெனில் என் காரணமாக அவனுக்குத் தீங்கு ஏற்படும் அல்லவா!

அப்படியென்றால் இருவருக்கும் மத்தியில் என்ன வித்தியாசம்? மேலும், நான் பொருமையாக இருந்ததால் எனக்கு அவன் மூலம் சொர்க்கத்தில் பதவி உயர்வு கிடைகும் போது என் காரணமாக அவனுக்கு நரகம் கிடைக்கக் கூடாதல்லவா! எனவே நான் அவனுக்காக பிரார்த்தனை புரிந்தேன் என்றார்கள்.

முற்காலத்தில் தாகத்தில் தவித்த நாயிக்கு தண்ணீர் புகட்டி தாகம் தீர்த்த ஒரு மனிதரை, இன்னொரு அறிவிப்பின் படி ஒரு வேசியை அல்லாஹ் மன்னித்து சுவனபதியை அதற்குப் பரிசாக வழங்கினான். {புகாரி}


عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ


இதற்கு நேர் எதிராக இன்னொரு செய்தி ;
ஒரு பூனையை சித்திரவதை செய்த காரணத்தினால் ஒரு மாது நரகம் சென்றாள்.அவள் அதற்குத் தானும் உணவளித்து நீர் புகட்ட வில்லை.தானாக திண்ணவும்,குடிக்கவும் விடவும் இல்லை.இப்படி சித்திரவதை செய்தாள்.{புகாரி}


عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا فَدَخَلَتْ فِيهَا النَّارَ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ لَا أَنْتِ أَطْعَمْتِهَا وَلَا سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا وَلَا أَنْتِ أَرْسَلْتِهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الْأَرْضِ

நபி {ஸல்} அவர்களின் கொள்ளுப் பேரர் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருக்கையில் ஒரு மனிதர் அவரை ஏசி திட்டிக் காயப்படுத்தினார்.அவரைப் பிடித்து அடிப்பதற்காக ஊழியர்கள் முனைந்த போது அவர்களைத் தடுத்து நிறுத்திய இமாம் அவர்கள் வசைபாடிய மனிதனை அழைத்து நீங்கள் சொன்னதை விட கூடுதலாக {குறை உள்ளவனாக} த்தான் இருக்கிறேன். என்னை பற்றி  உங்களுக்கு தெரிந்ததை விட  தெரியாத (குறை) தான் அதிகம் இருக்கிறது.உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் நிறைவேற்றி வைக்கிறேன் என்றார்கள்.

அப்போது அந்த மனிதர் வெட்கி, தலை குனிந்து கூனிக் குருகினார். அப்போது அவருக்கு இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தன் மேல் கடந்த சட்டையைக் கழட்டிக் கொடுத்ததோடு ஆயிரம் திர்ஹம் அவருக்கு கொடுக்க உத்தரவிட்டார்கள்.இப்படித்தான் மனிதப் புனிதர்கள் நடந்திருக்கிறார்கள்.


روي ان زين العابدين علي بن الحسين رضي الله عنه كان في طريقه الي المسجد فسبه رجل فقصده غلمانه ليضربوه ويؤذوه فنهاهم فكف عنهم رحمة به ثم قال يا هذا انا اكثر مما تقول وما لا تعرفه عني اكثر مما تعرفه فان كان لك حاجة في ذالك ذكرته فخجل الرجل واستحيا فخلع عليه زين العابدين قميصه وامر له بالف درهم

ஒருமுறை அஹ்னஃப் பின் கைஸ் ரஹ் அவர்களைத் திட்டிக் கொண்டே ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்.அமைதியாக சென்று கொண்டிருந்த அஹ்னஃப் ரஹ் அவர்கள் தனது குடியிருப்புக்கு அருகில் வந்த பொழுது நின்று நிதானமாக திரும்பி தன்னைத் திட்டியவனைப் பார்த்துக் கூறினார்கள் ; எனதருமை மகனே.... இன்னும் சொல்ல வேண்டியது எதுவும் மிச்சம் இருந்தால் இங்கேயே இப்போதே அதைக் கூறி திட்டித் தீர்த்து விடுங்கள்.ஏனென்றால் என் குடியிருப்பு வரப்போகிறது.அங்கே என் இனத்தைச் சார்ந்த சில அறிவிலிகள் உங்களது வசைவைக் கேட்டு உங்களுக்கு பதில் சொல்ல முற்படலாம்.


شتم رجل احنف بن قيس وكان يتبعه فلما قرب من الحي وقف وقال يا بني ان كان بقي في قلبك شيئ فقله كيلا يسمعك  بعض سفهاء القوم فيجيبك

என்னே…. சகித்துத்தன்மை!!! சிறந்த மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ!!! ரஹ்மானுடைய இறைப்பண்புகளை தனதாக்கிக் கொண்ட இதுமாதிரியான மனிதப்புனிதர்கள் தான் இறைவனின் பிரதிநிதிகள்.

எனவே மனதில் பகை, கோபம், விரோதம்,குரோதம் வளர்க்காமல் நல்ல மனிதப் பண்புகளை நம்மில் நாம் ஏற்படுத்திக் கொண்டால் நாம் இந்த உலகத்தில் உயர்ந்த மனிதர்களாக இறை பண்புகளை பெற்று இறைவனின் பிரதிநிதிகளாக சிறந்தோங்க முடியும்.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் யார் என்றால் சந்தோசமாக வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் ஆவர். அவர்களைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.


أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அறிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய நேசர்கள் அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் {அல்குர்ஆன் : 10 ; 62}

பயம் என்பது எதிர் காலத் தொடர்புடையது. கவலை என்பது இறந்த காலத்தோடு சம்பந்தப்பட்டது. இறைநேசர்கள் இறந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை நினைத்து கவலைப் படாமல்,எதிர் காலத்தில் ஏற்படும் என்று அஞ்சப்படுகிற நிச்சயமில்லாத ஆபத்துகளை நினைத்து பயமில்லாமல் நிச்சயமான நிகழ்காலத்தில் விழிப்போடு, தியாணத்தோடு சந்தோஷமாக இருப்பார்கள்.
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை திக்ர்{தியாணம்} செய்வதைக் கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன. {அல்குர்ஆன் :13 ; 28}

நிகழ் காலத்தில் இறை நினைவோடு வாழ்ந்தால் நீங்களும் சந்தோஷமாகலாம்.

இந்த நிலை உங்களுக்கும் வாய்த்தால் நீங்களும் வலிமார்களே!  வலிமை வாய்ந்தவர்களே.......
                                                    என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

(இல்மு லதுன்னீ) இறைவன் புறத்து இரகசிய ஞானம்

  3 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

 தலைப்பு ;- (இல்மு லதுன்னீ) இறைவன் புறத்து இரகசிய ஞானம்  

சிறப்புப்பேருரை ;- 
selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.


குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் புனித தர்ஹா ஷரிஃப் பற்றிய சில தகவல்கள்



குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) ,அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்



புனித மிஃராஜின் இரகசியம்


தலைப்பு ;- புனித மிஃராஜின் இரகசியம் 
மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 19-03-2007 மார்ச் முதல் 30-03-2007 வரை நடைபெற்ற பெருமானாரின் மீலாதுப் பெருவிழா தொடர் சொற்பொழிவு

சிறப்புப் பேருரை ;- வேலூர் -- அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

மிஃராஜ் கூறும் படிப்பினைகள்


தலைப்பு ;- மிஃராஜ் கூறும் படிப்பினைகள்

சிறப்புப் பேருரை :-

அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்.
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

புனித மிஃராஜ்


பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது.

வேந்தர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜினை பின்வருமாறு ஆராயலாம்.

1. மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?
2. மிஃராஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?
3. மிஃராஜ் கூறும் படிப்பினை என்ன?

மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.

1. நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் பேசினார்கள். நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.

2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளது என்பதையும் எடுத்துக் காட்டவேண்டி ஏற்பட்டதால் அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.

3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ‘ஷாஹிதாக’ இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

“எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர் இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்” என பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நவின்றுள்ளார்கள்.

மண்ணுக்கான அமைச்சர்கள்.
அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு)
உமர் (ரழியல்லாஹு அன்ஹு)

விண்ணுக்கான அமைச்சர்கள்.
ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்)
மீக்காயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுமாவர். (மிஷ்காத்)

மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மன்னகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வின்னகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்).

“ஒவ்வொன்றும் அதன் அஸலை நாடிச் செல்லும்” என்பது நபிமொழி. இந்த வகையில் கஃபதுல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர். அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவுகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர். ‌

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள். படைப்பினங்கள் அனைத்துக்கும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பற்றி அன்னவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.

அஹமது நபியின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதனால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளை தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.

மிஃராஜின் படிப்பினை

1. மிஃராஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றது.

2. மிஃராஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் ‘புராக்’ என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. “புராக்” என்பது “பர்க்” – மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளிவேகங்கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.

4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டியவை

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் உடலின் யதார்த்தம் மண்ணின் கூறிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சுட்டுவிரலினாலே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை. இதயம் வேறாக்கப்பட்ட போதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்ட போதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருக்கின்றார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெருகின்றோம்.

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருக்கின்றன.

1. யுத்தத்தில் காயப்பட்ட போது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோன்றும் போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டிய போதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.

2. மிஃராஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கிய போதும், வின்னகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களை கடக்கும் போதும் மலக்கானியத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.

3. ‘இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்’ என்று கூறி ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை ஹக்கானியத் என்று சொல்லப்படும். அல்லாஹ்வும், அவனது ஹபீபும் தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் “அப்தாக” அடியாராகவே இருந்துள்ளார்கள். படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் ‘அப்து’ என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் ‘தனது அப்தை இராவழி நடத்திய நாயன் தூயவன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
“இராவழி நடாத்திய நாயன் தூயவன்” என்ற கூற்று இப்பயணம் அல்லாஹ்வின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மிஃராஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.
பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமின்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகின்றது. இதனையே ‘பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்’ என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகின்றது.

2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,
புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகிறது. புராக்கிலான பயணமும், ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றப் றப் பின் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் “நிஃமத்தில்” – அருளில் தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச்செய்வான் என்பதையும் காட்டுகிறது.

கப்ரில் தொழுகை

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா செல்லும் வழியில் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கப்ரில் தொழுது கொண்டிருப்பதை கண்டதாகவும், மஸ்ஜிதுல் அக்ஸா சென்றடைந்த போது பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களை வரவேற்க மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தயார் நிலையில் நின்றதாகவும் ஹதீஸ் கிரந்தங்களில் காணமுடிகிறது.

ஆன்மாவின் வேகம்

மேலும் கூடவே மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுத நபிமார்கள் பெருமானாரை வழியனுப்பிய பின்பே பிரிந்தார்கள். ஆனால், புராக் விண்ணகம் செல்லும் முன்பே நபிமார்கள் அங்கு சென்று விட்டார்கள்.
இது, நபிமார்களுடைய ஆன்மாவின் வேகம் உச்ச ஒளி வேகங்கொண்ட புராக்கின் வேகத்தை விட வேகமானது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

மரணித்தவர் உதவுதல்

அல்லாஹ்வை தரிசித்து உரையாடிய பின் ஐம்பது வேளை தொழுகையை பரிசாக கொண்டுவந்த போது மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஐந்தாக குறைக்கும் வரை வாதாடியது.
“தொழுகை முஃமினின் மிஃராஜ்” அல்லாஹ்வை காண்பது மிஃராஜின் பூரணம். பெருமானாரை தவிர்த்து ஏனையோர் கலப்பால் அல்லாஹ்வை காணும் பாக்கியத்தை பெறுவார் என்பதனால்.
ஊசிக்காதளவு அல்லாஹ்வுடன் வசநித்து மதிமயங்கிய அனுபவத்தை பெருமானாரிடம் எடுத்துக்கூறி தினமும் ஐம்பது வேளை இறைவனை தரிசிக்கும் ஆற்றல எல்லா உள்ளங்களுக்கும் கிடையாது. எனவே குறைத்து வாருங்கள் என்று கூறியதிலிருந்து........

1. மரணித்தவர்கள் உயிருள்ளவர்களின் பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்திருக்கின்றார்கள்.
2. உயிருள்ளவர்களின் நடவடிக்கைகளில் மரணித்தவர்கள் அக்கறை கொண்டுள்ளார்கள்.
3. உயிருள்ளவர்களுக்காக மரணித்தவர்கள் உதவி செய்ய முடியும் என்பது தெளிவாகின்றது.

விஞ்ஞான தத்துவம்

மிஃராஜ் பயணம் சிலேடையாகவும், இஸ்ராப் பயணம் வெளிப்படையாகவும் அல்குர்ஆனில் கூறப்பட்டிருப்பதானது தெரிந்த உண்மைகளை கொண்டே தெரியாத உண்மைகள் விளக்கப்பட வேண்டும் என்ற விஞ்ஞானத் தத்துவம் எடுத்துக் காட்டப்படுகிறது. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பௌதீக அதீத விடயங்களான மறைஞானங்கள் பகிரங்கமாக பாமரர்கள் மத்தியில் பேசக்கூடியதல்ல என்பதனால்தான் அறிவுள்ளவர்கள் மாத்திரம் அறிந்து கொள்ளும் அமைப்பில் அல்குர்ஆன் சிலேடையாக எடுத்துக் கூறுகின்றது.
மிஃராஜ் நிகழ்வு நபித்துவ 11 ½ ல் ரஜப் திங்கள் இரவின் பிற்பகுதியில் நடந்தேறியதிலிருந்து..... பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் மார்க்கம் நடுநிலையானது என்பதையும் நடுநிலை – மத்திமமானதே – மேலானது என்பதையும் காட்டுகின்றது அதாவது.

நடுநிலை

1. நபித்துவத்தின் முளுக்காலம் 23 ஆண்டுகள். இதன் சரிபாதி 11 ½ ஆண்டுகள்.

2. நுபுவ்வத்தின் ஆரம்பம் நல்ல கனவுகலாகும். இக்கனவு ரபியுல் அவ்வலில் தொடங்கியது. இதனை நுபுவ்வத்தின் தொடக்கம் என கணக்கிட்டால் ரஜப் வருடத்தின் மத்தியாகும்.

3. ஷரீஅத்தினடிப்படையில் வெள்ளிக்கிழமை முதல் நாளாகும். இதன்படி கிழமையின் மத்தி திங்களாகம்.

4. முந்திய மார்க்கங்களில் சில ஜவாலியத் – (தீவிரம்) ஆகவும், வேறுசில ஜமாலியத் (சாத்வீகம்) ஆகவும் அமைந்துள்ளன. ஆனால் இறுதி வேதமான இம்மார்க்கம் இரண்டையும் உள்ளடக்கிய சமநிலையான மத்திய மார்க்கமாக இருப்பதனால்,

“ இந்த உம்மத் நடுத்தரமான உம்மத்” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். “நடுத்தரமானதே சிறந்தது” என்ற அடிப்படையில் “இதுவரை தோற்றுவிக்கப்பட்ட உம்மத்துகளில் இந்த உம்மத்தே சிறந்த உம்மத்” என சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ளான். இதனால், மிஃராஜ் நிகழ்வு, மத்திமத்தில் நிகழ்ந்திருப்பதால் இஸ்லாம் நடுநிலையையே போதிக்கிறது. அதுவே அழகானது. அழகையே அல்லாஹ் விரும்புகிறான் என்பதனை புலப்படுத்திக் காட்டுகிறது.

மிஃராஜ், ஹபீப், மஹ்பூபை நாடிச்செல்லும் பயணமாகும். இப்பயணத்தின் இன்பம் (விஸாவில்) சந்திப்பில் தங்கியிருக்கிறது. இச்சந்திப்பு அடக்கமான இரவு நேரத்தில் நிகழ்வதால் பூரண இன்பத்தை பெற முடியும் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது.

எனவே மிஃராஜ் பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகவும் ஆன்மீகப் பயணத்தின் ஒழுக்கத்தை விளக்கும் ஒரு செயல்முறை பயிற்சியாகவும் அமைந்திருப்பது புலனாகின்றது.

தொழுகை மிஃராஜின் பரிசாகும். இது முஃமினீன் மிஃராஜாகும். அதனால், தொழுகையின் அசைவுகள் அடிமைத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கின்றன. “அடிமைத்துவத்தின் பலன் வெற்றியாகும். இதனை அத்திய்யாத்தில் பெறமுடியும். அத்தஹிய்யாத் இறைவனுக்கு முன்னாள் நபி ﷺ அவர்கள் உரையாடியதை நினைவுப்படுத்துகின்றது. அதனால், தொழும்போது நாம் நேரே அல்லாஹ்வுடன் வசனிப்பதாகவும், நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் கூறுவதாகவும் கருதிக்கொள்ள வேண்டும். அதனால் நபி ﷺ அவர்களை நேரில் பார்ப்பதாக கற்பனை செய்துகொண்டு ஸலாம் கூறினால் நபி ﷺ அவர்கள் பதில் கூறுவார்கள் என்று ஹஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் இஹ்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றி ;- MAIL OF ISLAM.