Sunday, May 25, 2014

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!


முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 27 (26-05-2014) திங்கட் கிழமை பின்னேரம்,செவ்வாய் இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் துணை இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும்.


இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள்,மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச் சிறப்பாக நடைபெற்ற உள்ளது. இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அனைத்து நல்லுள்ளங்களும், கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.ஆமீன்..

வெளியீடு ;-- மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment