Thursday, August 31, 2017

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!


குர்பானி கொடுப்பதால்
இறைக் கடமை நிறை வேறுகிறது.
மன நிம்மதி நிறைகிறது.
உறவுகள் ஒன்று கூடுகிறது.
ஏழைகள் பசியாறுகிறார்கள்.
பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது.
இறையருல் இறங்குகிறது.
தியாக உணர்வு உயர்கிறது.
ஜீவ காரூண்யம் நிலை நாட்டப்படுகிறது.
கூட்டுறவு மேம்படுகிறது.
வறியவர்கள் வளம் பெறுகிறார்கள்.
அனாதைகள் பலம் பெறுகிறார்கள்.
முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள்.


ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும்
 நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ்சுன்னத் 
வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் 
ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,
தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் 
செய்கிறார்கள். வஸ்ஸலாம்.....

www.chittarkottai sunnathjamath blogspot.com.

Friday, August 11, 2017

மஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 51வது நினைவு நாள் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!


                            முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!!
                                         முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

                                      இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் 
மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் 
அவர்களின் 51ம் ஆண்டு நினைவு நாள் விழா 
18.7.2017 அன்று பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை, 
முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், 
வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள் 
முன்னிலையில் ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.

மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு 
மஜ்லிஸும் அதனை தொடர்ந்து யாஸீன் 
ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.


இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை , 
அழகன் குளம், புதுவலசை, அத்தியூத்து, சித்தார் கோட்டை, 
உச்சிப்புளி, இராமநாத புரம், மற்றும் பல்வேறு 
ஊர்களிலிருந்தும் மகான் பாபாவின் நேசர்கள் 
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் 
மகான்பாபாவின் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .