Monday, September 29, 2014

மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன?


மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில்  27 -09 -2014 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு திருக்குர்ஆன் விரிவுரை  நடைபெற்றது.

அது சமயம் மௌலானா மௌலவி முஹம்மது ஹஸ்ஸான் புகாரி ஹஜ்ரத் அவர்கள் .மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? 
என்ற தலைப்பில் சிறப்புபேருரையாற்றினார்கள்.

முதல் பாகம்.


இரண்டாம் பாகம்.

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம் சிறப்பாக நடந்து முடிந்தது


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' 
என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் 
அவர்களின் 47 வது நினைவு தினம்.மிகச்சிறப்பாக 
நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.



இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை 
சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,நடைபெற்றது.அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப்பின்,பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு 
குர்ஆன் ஷரீஃப் ஓதப் பட்டு,கண்ணியமிகு உலமாப் பெருமக்களால், ஷாதலியா தரீக்காவின் திக்ரு மஜ்லிஸும் நடத்தப்பட்டது.

பின்பு சித்தார் கோட்டை,தெக்குவாடி,முன்னால் மதரஸா 
மதீனத்துல் உலூம் முதல்வர், ஆலிம் கவிஞர்.மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.ஹாஜா முஹ்யித்தீன் காதிரி ஆலிம் B.A.ஹஜ்ரத் 
அவர்கள் சிறப்பு பயான்  செய்து, இறுதியில் சிறப்பு துஆச் செய்தார்கள்.


நிகச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேச உணவுகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சித்தார் கோட்டை சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் முக்கியஸ்தர்களான,ஜனாப் முஹம்மது ராஜிக் கனீமி,ஹாஜி முஸ்தஃபா ஆசிரியர்,மற்றும் சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் துணை முதல்வர்,மௌலானா மௌலவி அஃப்ஜலுல் உலமா சைய்யிது அபூதாஹீர் அரூஸீ ஃபாஜில் ஜமாலி ஹஜ்ரத், ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். 

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களும்,உஸ்தாதுமார்களும்,உள்ளூர் மற்றும் வெளியூரை ச் சார்ந்த ஏராளமான பொது மக்களும்,கலந்து கொண்டு,'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் துஆவையும்,வல்ல நாயனின் அன்பையும்,அருளையும் 
பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் 
அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )

வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

சமூக வலைத் தளங்கள் ஓர் ஷரீஅத் பார்வை !!!









என்றும் தங்களன்புள்ள 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா
எம்.சதீதுத்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்.M.A.,M.phil.( P.hd 

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Friday, September 26, 2014

அசத்தியம் என்றும் வெல்லாது !!!




இச்சிறப்பு மிகு மாபெரும் மஜ்லிஸ் மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் தர்ஹா ஷரீஃபில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் புனித புர்தா ஷரீஃப் சிறப்பு நிகழ்ச்சி



இச்சிறப்பு மிகு மாபெரும் மஜ்லிஸ் மென்மேலும் சிறக்க, 
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் 
இணையதளத்தினர் அகமகிழ்ந்து 
வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மப்ரூரான ஹஜ்ஜு !!!!



الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ

ஹஜ்ஜு அதற்கென குறிப்பிட்ட மாதங்கள் தான். [2 ; 197]

இது ஹஜ்ஜுடைய காலம்.அதாவது ஷவ்வால்,துல்கஅதா, துல்ஹஜ் மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்களாகும்.இதற்கு முன்னர் அல்லது இதற்கு பின்னர் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்ட முடியாது.கட்டினாலும் செல்லாது. [ஹனஃபி மத்ஹபில் செல்லும். ஆனால் மக்ரூஹ்] ஆனால் உம்ராவுக்கு கால நேரம் குறிப்பில்லை. எப்போதும் அதற்கு இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.
                                                    
இப்போது உலகெங்கிலும் நாலா பாகங்களிலிருந்தும் எட்டு திக்கு களிலிருந்தும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற புறப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம்.இந்த ஹஜ்ஜின் மாண்பை, சிறப்பைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ள வேண்டும்.



عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ

மப்ரூரான ஹஜ்ஜு,அதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை.உம்ரா to உம்ரா அவ்விரண்டுக்கு மிடையேயுள்ள பாவங்களுக்குப் பரிகாரமாகும்.[புகாரி,முஸ்லிம்]
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ

நபித்தோழர் அபூஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் 
;அல்லாஹ்வின் தூதர் நபி [ஸல்] அவர்களிடம் எந்த அமல் சிறந்தது என்று கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்புவது என்று பதிலளித்தார்கள்.பின்னர் எது [சிறந்தது] என்று கேட்கப்பட்டது.அப்போது அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வது என்றார்கள்.பின்னர் எது எனக் கேட்கப்பட்டது.மப்ரூரான ஹஜ்ஜு என்று கூறினார்கள். [புகாரி,முஸ்லிம்]

                 
மப்ரூரான ஹஜ்ஜு என்றால் என்ன ?

1 – விதிமுறை மீறப்படாத ஹஜ்ஜு.
2 – ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜு.
3 – முகஸ்துதி இல்லாத ஹஜ்ஜு.
4 – பாவம் கலந்திடாத ஹஜ்ஜு.
5 – அன்னதானம் வழங்குவது,ஸலாமைப் பரப்புவது.
6 – இமாம் ஹஸன பஸரி [ரஹ்] அவர்கள் கூறுவார்கள் ;மப்ரூரான ஹஜ்ஜு என்பது கடைசி நிலையைக் கொண்டு தான் வெளிப்படும்.அதாவது.


ان يرجع زاهدا في الدنيا راغبا في الاخرة.

ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வருகிற போது உலகப்பற்றற்று மறுமைப் பற்றுடன் திரும்புவதாகும்.

7 – ஹஜ்ஜுக்கு முந்திய நிலைமையை விட ஹஜ்ஜுக்கு பிந்திய நிலைமை நல்லதாக,சிறந்ததாக இருப்பதாகும்.இப்படி பல்வேறு விளக்கங்கள் விளம்பப்படுகிறது.           

ஹஜ்ஜை முடித்து திரும்பக்கூடியவர்கள் பல நிலைகளில் இருப்பதைப் பார்க்கிறோம்.சிலர் ஹஜ்ஜில் மரணித்து விடுகிறார்கள்.சிலர் இறைநேசர் களாக ஏற்றம் பெற்று திரும்புகிறார்கள்.மேலும் பல ஹாஜிகளின் வாழ்க்கை ஹஜ்ஜுக்குப் பிறகு மிகச்சிறப்பாக மாறி விடுகிறது.முன்பு கெட்டவராக இருந்திருந்தால் இப்போது நல்லவராக,முன்பு நல்லவராக இருந்திருந்தால் இப்போது ரொம்ப நல்லவராக,முன்பு கோபப்படக்கூடிய வராக இருந்திருந்தால் இப்போது சாந்தமானவராக மாறிவிடுகிறார்கள்.

சிலபேருக்கு ஹஜ்ஜுக்குப் பிறகு அவர்களது வாழ்க்கையிலே அவர்களின் போக்கிலே அணுகுமுறையிலே எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது. அப்படியே தான் இருப்பார்கள்.அல்லது அதை விட - முந்தைய நிலைமை யை விட படுமோசமாக மாறி இருப்பார்கள்.இதற்கெல்லாம் என்ன காரணம் ?
கஃபாவைக் கட்டி முடித்த பிறகு உலக மாந்தர்களை ஹஜ்ஜுக்கு வருமாறு அழைக்கும்படி நபி இப்ராஹீம் [அலை]அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான்.அதை ஏற்று அவர்களும் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார்கள்.


وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

[அவரை நோக்கி] ஹஜ்ஜுக்கு வருமாறு நீங்கள் மனிதர்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள்.[அவர்கள்]  கால்நடையாகவும் உங்களிடம் வருவார்கள்.இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் [உங்களிடம்] வருவார்கள். [22 ; 27]

இது ஆத்ம உலகில் இருந்த,இருக்கிற ஆன்மாக்களை நோக்கி விடுக்கப்பட்ட அழைப்பாகும்.இந்த ஆன்மாக்கள் எல்லாம் இதைக் கேட்டன.எந்த ஆன்மா இதை கேட்டதோ அவர்களுக்கு மட்டும் தான் ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது.ஆண்களின் முதுகந்தண்டில், பெண்களின் கற்பப்பையில் இருந்தவர்களிலும் இதைக் கேட்டவர்கள் பதில் சொன்னார்கள்.யார் எத்தனை முறை பதில் சொன்னார்களோ அத்தனை முறை அவர்களுக்கு ஹஜ்ஜுடைய பாக்கியம் கிடைக்கிறது. ஒருமுறை சொன்னவருக்கு ஒரு முறை.இரு முறை அல்லது அதிகமாக சொன்னவர்களுக்கு அதிகமாக ஹஜ்ஜு செய்ய முடிகிறது என்று கூறும் இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள : இதிலிருந்து தான் தல்பியா [லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க] முழக்கம் பிறந்தது.அன்று அவர்கள் பதில் சொன்னதின் வார்த்தை வடிவம் தான் இந்த தல்பியா  என்று தொடர்ந்து விவரிக்கிறார்கள். [தஃப்ஸீர் தப்ரி,இப்னு கஸீர்,குர்துபி]

ஹாஜிகளின் இன்றைய,அன்றைய தல்பியா முழக்கதின் மூலாதாரம் இந்த மூல முதல் பதில் வாசகம் தான்.முதலில் லப்பைக்க என்று தல்பியா முழங்கி பதில் சொன்னவர்கள் யமன் வாசிகள் என்றும் எனவே தான் அவர்கள் உலக மக்களில் அதிக ஹாஜிகளாக இருக்கிறார்கள் என்றும் ரிவாயத்தில் [அறிவிப்பில்] வந்துள்ளது.

இதனால் தான்  اتاكم اهل اليمن هم ارق والين قلوبا الايمان يمان والحكمة يمانية  யமன்வாசிகள் உங்களிடம் வருவார்கள்.அவர்கள் மென்மையான இதயமுள்ளவர்கள். ஈமான் – இறை நம்பிக்கையே யமன் தான்,ஞானம் என்பது எமனைச் சார்ந்ததாகும். என்று எம்பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள். [புகாரி,முஸ்லிம்]


عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ إِنِّي عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَهُ قَوْمٌ مِنْ بَنِي تَمِيمٍ فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ قَالُوا بَشَّرْتَنَا فَأَعْطِنَا فَدَخَلَ نَاسٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اقْبَلُوا الْبُشْرَى يَا أَهْلَ الْيَمَنِ إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ قَالُوا قَبِلْنَا جِئْنَاكَ لِنَتَفَقَّهَ فِي الدِّينِ

இதே யமன்வாசிகளைப் பார்த்துத்தான் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; பனூதமீம் ஏற்றுக் கொள்ளாத நற்செய்தியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்.அப்பொழுது அவர்கள் "நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.நாங்கள் உங்களிடம் வந்ததே ஞானம் பெறுவதற்குத்தான்" என்றார்கள்.


عَنِ ابْنِ عُمَرَ قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ ، قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ : قَالَ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا قَالَ ، قَالُوا وَفِي نَجْدِنَا قَالَ : قَالَ هُنَاكَ الزَّلاَزِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ

யா அல்லாஹ்! யமனிலும் ஷாமிலும் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக என்று பெருமானார் [ஸல்] அவர்கள் பிரார்த்தனை செய்த போது அங்கிருந்த சிலர் எங்களது நஜ்திலும் பரக்கத்திற்கு பிராத்தனை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.ஆனால் அண்ணல் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு பிராத்தனை செய்யாமல் மௌனமாக இருந்தார்கள்.தொடர்ந்து மூன்று அவர்கள் தங்களது கோரிக்கையை வைத்த போது அங்கே குழப்பங்களும்,நடுக்கங்களும் ஏற்படும்.அங்கே தான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என்று பதிலளித்து பிரார்த்தனை புரிய மறுத்து விட்டார்கள். [புகாரி]

இந்த நபிமொழியின் ஒளியில்,வரலாற்று வெளிச்சத்தில் பார்த்தால் ஷாமிலியே அதிகமாக நபிமார்களும்,யமனிலே அதிகமான வலிமார்களும் தோன்றினார்கள்.நஜ்திலிருந்து [இப்போதைய ரியாத்] தான் ஷைத்தானின் கொம்பான வஹ்ஹாபியத்தின் ஃபித்னா [குழப்பம்] கிளம்பியை உலகம் கண்டது.

சூரத்து நஸ்ரில் [110] அல்லாஹ்வுடைய உதவியும்,வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் பிரவேசிப்பதை நீங்கள் பார்த்தால்.......என்ற வசனத்தின் படி யமனிலிருந்து தான் மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தார்கள்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் [அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்று மில்லை.உங்களைப் போக்கி] வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான்.அவன் அவர்களை நேசிப்பான்.அவர்களும் அவனை நேசிப்பார்கள்.......[5 ; 54] என்ற வசனம் இறங்கிய போது அண்ணல் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அங்கே இருந்து அபூமூஸல் அஷ்அரி ரலி அவர்களைப் பார்த்து هم قومك يا ابا موسي  அபூமூஸாவே! அவர்கள் உமது மக்கள் தான் எனப் புகழ்ந்து கூறினார்கள்.

ஹளரத் உவைஸுல் கரனி [ரலி] அவர்கள் அந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதும் யமன் நாட்டின் சிறப்பிற்கு அணி சேர்ப்பதாகும்.

நான் யமனிலிருந்து ரஹ்மானின் மூச்சுக்காற்றை – அருள் வசந்தக் காற்றை உணருகிறேன் என்று ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் இயம்பியதும் கூட இதன் அளவில் உள்ள சமிக்கை தான்.
ஆக அல்லாஹ் இப்ராஹீம் நபி {அலை} அவர்களை ஹஜ்ஜுக்கு வரும்படி அனைவரையும் அழைக்கும்படி கட்டளையிட்டான். அவ்வாறே ஜிப்ரயீல் [அலை]அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைக்கும்படி ஏவினான்.அதன்படி அவர்களும் அழைத்தார்கள். நிறைவாக அல்லாஹ்வும் நேரடியாக ஹஜ்ஜுக்கு வருமாறு அழைத்தான்.இப்படி எல்லோரும் அழைப்பதை பார்த்ததும் இப்லீஸும் தன் மூக்கை இதில் நுழைக்க ஆசைப்பட்டு நானும் அழைப்பு விடுக்கவா ? என அல்லாஹ்விடம் கேட்டான்.நீயும் கூப்பிடு என்று அவனுக்கும் வாய்ப்பு தரப்பட்டது.

எல்லோரும் கூப்பிட்டார்கள்.அல்லாஹ் அழைத்தான்.இப்ராஹீம் நபி [அலை] அவர்கள் அழைத்தார்கள்.ஜிப்ரயீல் [அலை] அவர்கள் கூவி அழைத்தார்கள்.இப்லீஸும் சப்தம் போட்டான்.இப்போது யாருடைய அழைப்பைக் கேட்டு ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு சென்றார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது ?

அறிந்து கொள்ள முடியும்.ஹஜ்ஜுக்குப் பிறகுள்ள ஹாஜிகளின் நிலைபாட்டை வைத்து இதை அறிந்து கொள்ள முடியும். யாருடைய அழைப்பைக் கேட்டு ஹாஜிகள் ஹஜ்ஜுக்கு சென்றார்களோ அவர்களின் ஆதர்சனம்,ஆவர்த்தனம் ஹாஜிகளின் வாழ்வில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம்.

அல்லாஹ்வின் அழைப்பைக் கேட்டவர்கள் அவ்லியாக்களாக – இறைநேசர்களாக திரும்புவார்கள்.ஆன்ம பலமும்,பாக்கியமும், பரிசுச்சமும் உடையவர்கள் மட்டுமே அல்லாஹ்வின் அழைப்பை நேரடியாக கேட்க முடியும்.

ஜிப்ரயீலின் அழைப்பைக் கேட்டவர்கள் ஹஜ்ஜில் மரணித்து விடுவார்கள். அந்த மலக்கின் சப்தம் கேட்ட ஆன்மா மரணிக்காமல் இருக்க முடியாது. முந்திய சமூகத்தில் சில கூட்டம் சப்தம் கொண்டு அழிக்கப்பட்டதாக அல்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.அது ஜிப்ரயீலின் சப்தம் தான். ஜிப்ரயீலின் சப்தம் கேட்டால் மனித மனம் மூச்சற்றுப் போகும்.

இப்லீஸின் அழைப்பைக் கேட்டு ஹஜ்ஜுக்கு சென்றவர்கள் அவர்களின் வாழ்க்கையில் எந்த மறுமலர்ச்சியும் ஏற்படாது. ஹஜ்ஜுக்குப் பிறகு யாருடைய வாழ்க்கை சீராக வில்லையோ சிறப்பாக வில்லையோ மாறாக மிகவும் மோசமானதாக இருக்கிறதோ அவர்கள் யார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

யார் இப்ராஹீம் நபி [அலை] அவர்களின் அழைப்பைக் கேட்டு ஹஜ்ஜுக்கு சென்றார்களோ அவர்களின் வாழ்க்கை முன்பை விட மேலானதாக இருக்கும்.அன்பில்லாதவர் அன்புள்ளவராகவும் பண்பில்லாதவர் பண்புள்ளவராகவும் பொறுப்பில்லாதவர் பொறுப்புள்ளவராகவும் அநியாயக்காரர் நியாயவாதியாகவும் இபாதத் –வணக்க வழிபாடு இல்லாதவர் அல்லது குறைவான வணக்கசாலி வணக்கசாலியாக அதிக வழிபாடுள்ளவராக ஹஜ்ஜுக்குப் பிறகு மாறி விடுவார்.இது தான் மப்ரூரான – ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் அடையாளமாகும்.

ஆக அல்லாஹ்வின் அழைப்பை,ஜிப்ரயீலின் அழைப்பை இப்ராஹீம் நபியின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக்குச் சென்றவர்களின் ஹஜ்ஜு ஹஜ்ஜுன் மப்ரூர் – ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜு ஆகும்.இதற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை என பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
என்றும் தங்களன்புள்ள.

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.


ஹஜ்ஜு அவசரம் !!!


وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

எவர்கள் அங்கு [மக்காவுக்கு] பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார் களோ அத்தகைய மனிதர்களின் மீது அல்லாஹ்வுக்காக [அங்கு சென்று] அந்த ஆலயத்தை ஹஜ்ஜு செய்வது கடமையாகும். எவரேனும் [இதை] நிராகரித்தால் [அதனால் அல்லாஹ்வுக்கும் ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்] நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கிறான். [3 ; 97]

ஹஜ்ஜு என்பது வசதியான ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜுக் கடமை மிக முக்கிய மானதொரு கடமை.அது இறுதிக் கடமையல்ல. நிறைவைத்தரும் ஓர் கண்ணியமான கடமை.இறுதிக் கடமை ஹஜ்ஜு என்று சொல்லிச் சொல்லி வாழ்வின் கடைசி காலத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தப்பான ஒரு சிந்தனை எப்படியோ நமது மூளையில் புகுந்து ஹஜ்ஜை முதுமைப் பருவத்திற்குத் தள்ளி விட்டது.

ஹஜ்ஜு முதுமைக் கடமையல்ல.முழுமையான கடமை, முழுமையாக்கும் கடமை.ஹஜ்ஜை முடித்து அருளை சுமந்து வரும் ஹாஜி,அன்று பிறந்த பாலகனாக பாவமற்ற அப்பாவி முஸ்லிமாக மாறி வருகிறார்.ஆகவே அதற்குப் பிறகு எந்தப் பாவமும் செய்யாது எந்தப் பாவக்கணக்கையும் தொடங்காது தூய்மையாகவே வாழ்க்கையைத் தொடர வேண்டும். இதற்கு வசதியாக வயதான பிறகு இதை செய்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்ன ? செய்ய நினைக்கும் எல்லா பாவத்தையும் செய்து முடித்த பிறகு கடைசியாக பாவம் செய்ய முடியாத வயோதிகப் பருவத்தில் ஹஜ்ஜை முடித்து வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.எல்லா பாவத்தையும் செய்து முடித்து விட்டு கடைசியாக ஹஜ்ஜு செய்யலாம் என்று நினைப் பவர்,ஹஜ்ஜு செய்யும் வரை அவர் உயிரோடு இருப்பார் என்று யார் உத்தரவாதம் கொடுத்தார்கள் ? இதற்கிடையில் இவருக்கு மரணம் வராது, வரவே வராது என்று இவருக்கு உறுதிமொழி வழங்கியவர்கள் யார் ? இதை நாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா ?

ஏன் இளமையிலேயே ஹஜ்ஜை முடித்து முழுமை பெற்று தூய்மை யாக வாழ்வைத் தொடங்கி தூய்மையாகவே ஏன் வாழ்வைத் தொடரக்கூடாது ? இப்படி ஏன் சிந்திக்கக் கூடாது?  ஹஜ்ஜை அந்திம காலத்திற்கு ஒத்தி வைப்பது இளமையில் இடைபட்ட காலத்தில் பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழ்நிலையை நமக்கு நாமே உருவாக்கித் தருவதாகும். இளமையில் ஹஜ்ஜை நிறைவேற்றுவது வாலிபத்தி லேயே பாவத்திற்கு முள்வேலி போடுவதும்,இளமையிலேயே இறையச்சத்திற்கு இரை போட்டு தூய்மைக்கு தூபமிடுவதுமாகும்.

இளமையில் இறை மறுப்பை,இறை வெறுப்பை,இறைவனுக்கு மாறு செய்வதைத் தடுக்கும் அரணாக அமையும் இளமை ஹஜ்ஜு சிறந்ததா ?வாலிபத்தில் சல்லாபத்திற்கும், எல்லா பாவத்திற்கும் வலிகோலும் வயோதிக ஹஜ்ஜு சிறந்ததா ? இப்படி சிந்திக்க வேண்டாமா ?

ஒரு முஸ்லிமுக்கு உடல் வலிமை,பொருளாதார வசதி, பயணப்படும் பாதை,அமைதி,பாதுகாப்பு இருந்தால் ஹஜ்ஜு செய்வது கடமையாகி விடும்.இந்த வசதி ஒருவருக்கு வாலிபத்தில வந்தால் அவர் இளமை யிலேயே ஹஜ்ஜை நிறைவேற்றுவது கடமையாகும்.முதுமைக்கு தள்ளிப் போடக் கூடாது.அவருக்கு ஹஜ்ஜு இறுதிக் கடமையல்ல. மாறாக தொழுகை,நோன்பிற்கு அடுத்து மூன்றாவது கடமை. ஏனென்றால் பணம் வந்தவுடன் ஜகாத் கடமையாகாது.அது ஒரு வருடம் முழுமையாக சேதமில்லாமல் அவருடைய சேமிப்பில் அப்படியே இருந்தால் தான் கடமையாகும்.

ஒருவருக்கு நோன்பு முடித்து ஹஜ்ஜு செய்யும் வசதி வந்தால் அவருக்கு தொழுகைக்குப் பிறகு ஹஜ்ஜு இரண்டாவது கடமை. ஆயுளில் ஒருமுறை எப்போது செய்தாலும் கடமை நிறைவேறி விடும்.ஆனால் அதற்கிடையில் ஹஜ்ஜு கடமையாகி அதை நிறைவேற்றாமல் மரணித்து விட்டால் அவர் குற்றவாளியாவார்.

ஹஜ்ஜு கடமையாகி பல வருடங்கள் கழித்து பின்னர் அதை மரணித்திற்கு முன் நிறைவேற்றி விட்டால் குற்றவாளியாக மாட்டார் தான்.ஆனால் மரணம் அவர் கையில் இல்லையே. அதனால் உடன் நிறைவேற்றுவது தானே உத்தமம்.

தொழுகையை அதற்குரிய நேரம் கழிந்த பின் நிறைவேற்றினால் அது களா.அவ்வாறே நோன்பை ரமலானுக்குப் பிறகு நிரை வேற்றினால் அது களா.ஆனால் ஹஜ்ஜை  அது கடமையான பின் அதாவது அதற்கான வசதி வந்த பின் பல வருடம் கழித்து நிறைவேற்றினாலும் கூட அது அதா தான். களா அல்ல. ஆயினும்.எவ்வளவு சீக்கிரம் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹஜ்ஜுக்கு சென்று விட வேண்டும்.


ஏனெனில் ஏந்தல் நபி [ஸல்] அவர்கள் ஏவினார்கள் ;


عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَرَادَ الْحَجَّ فَلْيَتَعَجَّلْ

ஹஜ்ஜு செய்ய நாடினால் உடன் சீக்கிரம் செய்து கொள்ளட்டும்  [அபூதாவூது]

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلُوا إِلَى الْحَجِّ يَعْنِي الْفَرِيضَةَ
 فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي مَا يَعْرِضُ لَهُ

சீக்கிரம் ஹஜ்ஜு செய்யப் புறப்படுங்கள்.காரணம்,உங்களில் ஒருவர் அறிய மாட்டார்.அவருக்கு என்னவெல்லாம்    [தடங்கள் பின்னால்] ஏற்படும் என்று. [முஸ்னது அஹ்மது]

அப்போ...இறுதிக்கடமை ஹஜ்ஜு என்று சொல்கின்றார்களே அது எப்படி என்றால்.....ஐந்து இஸ்லாமியக் கடமைகளில்,அவை கடமையான வருட வரிசையை வைத்துப் பார்த்தால் அது ஐந்தில் இறுதியாக கடமையானது என்ற பொருளில் அப்படி சொல்லப் படுகிறது.

முதலில் ஈமான் – நம்பிக்கை தான் கடமையானது.அப்புறம் தொழுகை. தொடர்ந்து ஜகாத்.இம்மூன்றும் ஹிஜ்ரத்திற்கு முன்னர் மக்கா வாழ்க்கை யில் வைத்தே கடமையாகி விட்டது.ஜகாத்தின் சட்ட திட்டங்கள் அதன் அளவு போன்ற விபரங்கள் மதீனாவில் இறங்கினால அதன் கடமை மக்கா விலேயே இறங்கி விட்டது.தொழுகையை கூறுமிடத்திலெல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே அல்லாஹ் மொத்தம் 82 இடங்களில் கூறுகிறான். நான்காவது, நோன்பு ஹிஜ்ரி 2 ல் கடமையானது.ஐந்தாவது ஹஜ்ஜு ஹிஜ்ரி 3 அல்லது 6 ல் கடமையானது.இந்த வரிசையில் ஐந்தாவதாக இறுதியில் கடமையானது ஹஜ்ஜு என்ற அர்தத்தில் தான்“இறுதிக்கடமை ஹஜ்ஜு” என்று சொல்லப்படுகிறதே தவிர இறுதியாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்ற பொருளில் அல்ல.

இதல்லாமல் ஹஜ்ஜில் உடல் உழைப்பிற்கு அதிக வேலை இருக்கிறது. முதலில் நீண்ட துர பயணம்.பயணத்தில் ஏற்படும் சிரமம் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இரண்டாவது,ஹஜ்ஜுக் கடமையே ஓடுவதும் நடப்பதும் தான்.மேலும் கூட்ட நெரிசலை சமாளிக்க வேண்டும். சமான்களை தூக்கி சுமக்க வேண்டும்.இதற்கெல்லாம் வாலிபத்தின் வலிமை இருந்தால காரியங்கள் சுலபமாகும். இல்லையென்றால் சிரமமாகும்.

முதுமையின் தளர்ச்சி,அயர்ச்சி பாரதூரமான ஹஜ்ஜின் செயல்பாடுகளுக்கு சுகம் தராது.மாறாக முதுமை, ஹஜ்ஜுக்கு சுமையாகும்.ஆகவே

இளமையும்,துடிப்பும்,ஆரோக்கியமும்,ஆர்வமும் இருக்கும் போதே ஹஜ்ஜை நிறைவேற்றிடப் புறப்படுங்கள்.அதிக வயதான பிறகு தான் இந்தியாவிலிருந்து ஹஜ்ஜுக்கு கிளம்புகிறார்கள்.ஆனால் நல்ல இளமைப் பருவத்திலேயே திடகாத்திரமாக இருக்கும் போதே மலேசியாவிலும், இந்தோநேசியாவிலும் ஹஜ்ஜை நிறைவேற்றி விடுகிறார்கள்.இது பாராட்டத்தக்க மெச்சத்தக்க ஒரு காரியம்.
نا يعلى بن الأشدق قال : سمعت عمي عبد الله بن جراد ، يقول : قال رسول الله صلى الله عليه وسلم : « حجوا ، فإن الحج يغسل الذنوب كما يغسل الماء الدرن »رواه الطبراني

ஹஜ்ஜு செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக ஹஜ்ஜு என்பது தண்ணீர் அழுக்கை கழுவி சுத்தம் செய்வது போல பாவங்கள் கழுவி சுத்தம் செய்து விடும்.[தப்ரானி]
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَابِعُوا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ فَإِنَّهُمَا يَنْفِيَانِ الْفَقْرَ وَالذُّنُوبَ كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ وَالذَّهَبِ وَالْفِضَّةِ.رواه الترمدي وابن ماجه وابن خزيمه.وفي رواية البيهقي فإن متابعة بينهما يزيدان في الأجل.

ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவ்விரண்டும் வறுமையைப் போக்கும்.பாவத்தைப் போக்கும்.நெருப்பு உலை இரும்பின் துருவை,தங்கம், வெள்ளியின் அழுக்கை போக்குவது போல. பைஹகியின் அறிவிப்பில் ;அவ்விரண்டும் ஆயுளை அதிகரிக்கும் என்று கூடுதல் இணைப்பு உள்ளது.
"ஹாஜி ஒரு போதும் ஏழையாக மாட்டார்" [நபிமொழி]
என்றும் தங்களன்புள்ள.


மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா 
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Tuesday, September 23, 2014

சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம்.


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின்
47 வது நினைவு தினம்.

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின்,சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,
பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதி,
கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் திக்ரு மற்றும் சிறப்பு பயான் நடைபெற இருக்கிறது.


இறுதியில் ஏராளமான உலமாப்பெருமக்கள் கலந்து கொண்டு, சிறப்பு துஆச் செய்ய இருக்கிறார்கள். பெண்களுக்கு சின்னப் பள்ளிவாசல் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதா திருமண மண்டபத்தில் 
இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.

அவ்லியாக்களை ஞாபகம் செய்யும் இடத்தில் 
அல்லாஹ்வின் பேரருள் இறங்குகிறது. ( நபிமொழி )

வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

சேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு !!!


'' சூஃபி ஹளரத்'' என்றும்,சேது நாட்டின் தீன் முத்து என்றும் புகழ் பெற்ற இவர்களின் இயற்பெயர் அஹ்மது இப்றாஹீம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் கி.பி.1882 ல் பிறந்தார்கள்.

தந்தை பெயர் ; சீனி சையீது. பதிமூன்று வயதிலேயே வாணிபத்தின் பொருட்டு மலேயா ( மலேசியா ) அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள்,வாணிபத்தில் விருப்பமில்லாது ஊர் திரும்பி,கொழும்பு ஆலிம் சாஹிபின் ஆதரவில்,அதிராம்பட்டணம் 
சென்று மார்க்க கல்வி பயின்றார்கள்.





பின்னர் வேலூர் மதரஸா அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தில் ஓதித் தேர்ந்தனர்.அங்கேயே ஆசிரியராக பணியாற்றுமாறு,அக்கல்லூரியின் முதல்வர் இவர்களிடம் கூற,தாம் பிறந்த ஊர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறிச் சித்தார் கோட்டைக்கு வந்த இவர்கள்.அங்கு சின்னப்பள்ளி வாயிலுக்கு அண்மையில்
 '' மதரஸா மல்ஹருஸ் ஸூஅதா '' என்ற பெயருடன் ஒரு கல்விக்கூடத்தை நிர்மாணித்து மார்க்கப் பணிபுரிந்து வந்தனர்.


'' யா அல்லாஹ்.''  '' யா ரஹ்மான்,''  '' யா ரஹீம்.'' என்ற இறைவனின் திருப் பெயர்களை அடிக்கடி கூறி வந்த இவர்கள், '' தவகல்து அலல்லாஹ் என்பதை அடிக்கடி மொழிந்து வருமாறு நோயாளர்களிடம் பணிப்பதோடு,நோய் வராமல் தடுக்க அதுவே சிறந்த மருந்து என்று ஏனையோரிடமும் கூறுவர்.இவர்கள் தம் ஊரில் பல சீர்திருத்தங்களை செய்தனர்.திருமணத்தை வெள்ளியன்று ஜூம்ஆவிற்குப்பின் பள்ளியில் வைத்து நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு இவர்கள் கூறிய சுருக்கமான வாசகம் '' பள்ளி,வெள்ளி,பகல் '' என்பதாக இருந்தது.


இல்லை என்பார்க்கு இல்லை என்னாது வழங்கி வந்த இவர்களின் வரவு,செலவு புத்தகத்தில் '' அல்லாஹ்விற்காக அழகிய கடன்கள் '' என்ற தலைப்பில் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள்,ஏழைப் பெண்களின் திருமணத்திற்காகவும்,பயணம் செல்பவரின் கப்பல் கூலிக்காகவும்,ஏழைகளின் பசிப்பிணி நீக்குவதற்காகவும் செலவழிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.ஏழை,எளியவர்கள் தலையில் சுமந்து விற்கும் பொருள்களை மொத்தமாக வாங்கிப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து ம்கிழ்வார்கள்.


மக்களிடையே நீதிபதி போன்றிருந்து அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார்கள் இவர்கள். ஷாதலியா தரீக்காவைப் பின்பற்றி வந்த இவர்கள்.அந்தத் தரீக்காவின்  திக்ரு முறைகளை நியமமாகப் பின்பற்றி வரும் வழக்கத்தையும் சித்தார் கோட்டையில் ஏற்படுத்தினார்கள்.


இவர்கள் 1967 செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை வைகறையில் காலமானார்கள்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.இவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொண்ட ஷைகு நாயகம் அவர்கள். '' நான் என் கண்ணால் கண்ட இரு வலிமார்கள்,பல்லாக்கு வலியுல்லாஹ்வும்,அஹ்மது இப்ராஹீம் வலியுல்லாஹ்வும் ஆவர் '' என்று கூறினார்கள். இவர்களின் புனித அடக்கஸ்தலம் சித்தார் கோட்டை சின்னப் பள்ளியின் வடபுறத்தில் இருக்கிறது.வஸ்ஸலாம்...

நூல் ஆதாரம் ; இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், 
நான்காம் பாகம்,பக்கம் -185.

வெளியீடு  ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

'' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் வரலாறு


வெளியீடு - மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் சித்தார் கோட்டை கிளை.

Sunday, September 21, 2014

புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு !!!


selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
20 -09 -2014 சனிக்கிழமை 
திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு. 

தலைப்பு ;- புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு  

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
முஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.


முதல் பாகம்.


இரண்டாம் பாகம்.

Monday, September 15, 2014

சிராஜுல் ஹுதா தஃப்ஸீர் துவக்க விழா !!!


14-09 2014 ஞாயிறு மாலை அன்று தாமன் பத்துகேவ்ஸ்,
சிராஜுல் ஹுதா மதரஸாவில் தஃப்ஸீர் வகுப்பின் துவக்க விழா 
(திருக்குர்ஆன் விரிவுரை துவக்கம் ) 

அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களால் 
திருக்குர்ஆன் விரிவுரை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. . 


புனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு !!!


மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி 
மதரஸாவில், ( 13-09-2014 ) அன்று மஃரிபுத் 
தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தப்ஸீர் 
( திருக்குர்ஆன் விரிவுரை) வகுப்பு, 

அது சமயம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஹம்மது ஷாஃபீ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரை நடத்தினார்கள்.

Saturday, September 13, 2014

யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு !!!


12-09-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;- யுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு !!! 

குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

ஏர்வாடி சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி தமிழக மற்றும் கேரளவைச் சார்ந்த பாடகர்கள் பாடிய அழகிய பாடல்கள் !!!!!


ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றி 
அபுல் பரக்கத் அவர்கள் பாடிய பாடல்கள்.



ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
கேரளச் சிறுமியின் அழகிய பாடல்



ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
கேரளச் சிறுவனின் அழகிய பாடல்



ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
அழகிய மலையாளப் பாடல்



ஏர்வாடி ஷஹீது சைய்யிது இப்றாஹீம் பாதுஷாவைப் பற்றிய
ஏர்வாடி ராஜா மாப்பிள்ளை பாடல்


ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்.


ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சைய்யித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.



புனித ஏர்வாடி மண்ணில் ஆன்மீகப் பேரரசு நடத்திவரும் சங்கை மிகு ஷஹீது மார்களின் தியாக வரலாறு !!!


முதல் பாகம்.



இரண்டாம் பாகம்.



மூன்றாம் பாகம்.



நான்காம் பாகம்.

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- இரண்டாம் பாகம்.


யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்:
அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் 
பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


மகிமை:

ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள்.

மக்பராக்கள்:

ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும்,







ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின் தாயார் சையிது பாத்திமா, துணைவியர் சைய்யிது அலிபாத்திமா என்னும் ஜைனப், தங்கை சையிது ராபியா, மைத்துனர் சையிதுஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர்களின் சமாதிகளும் காணமுடியும்.


நோய் தீர்க்கும் தலம்:

ஏர்வாடி தர்கா வளாகத்தில் ஜாதிமத பேதமின்றி நோய்வாய்ப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி பிணி நீங்கிசெல்கின்றனர். ராமநாதபுரத்தை ஆண்ட முத்துக்குமாரசுவாமி ரகுநாதசேதுபதியின் மாமனார் முத்து விஜயன் என்பவருக்கு தீராத வியாதி இருந்து வந்தது. ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகத்தின் மகிமையை அறிந்த முத்துவிஜயன் ஏர்வாடி தர்காவிற்கு சென்றுள்ளார். பாதுஷா நாயகத்தின் மகிமையால் முத்துவிஜயன் நோய் முற்றிலுமாக நீங்கியுள்ளது. ஏர்வாடி தர்காவின் மகிமையை தனது மருமகனான மன்னர்சேதுபதியிடம் கூறியுள்ளார். மன்னரும் தனது மனைவிக்கு ஆண்வாரிசில்லை என்று கூறி மனைவி பானுமதி நாச்சியாருடன் ஏர்வாடி தர்கா சென்று பாதுஷா நாயகம் சமாதிமுன் முறையிட்டுள்ளனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு ஆண்வாரிசு கிட்டியது. இதற்கு பகரமாக ராமநாதபுரம் மன்னர் ஏர்வாடியை சுற்றியுள்ள நஞ்சை, புஞ்சை நிலங்களை தானமாக வழங்கினார். மதநல்லிணக்கத்திற்கு இதைவிட சான்று தேவையில்லை.

சந்தனக்கூடு திருவிழா:

சேதுபதி மன்னர் இணைந்து ஆரம்பித்து வைத்ததுதான் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் துல்கஃதா பிறை 1 ல் புனித மௌலீது ஷரீப் ஆரம்பித்து அடிமரம் ஏற்றுதல், கொடியேற்றம், சந்தனக் கூடு திருவிழா போன்ற வைபவங்கள் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழா அன்று புனித மௌலீது நிறைவடைந்து சிறப்பு துஆ ஓதப்படும். சந்தனக்கூடு ஊர்வலத்துடன் பாதுஷா நாயகம் மக்பராவிற்கு (சமாதிக்கு) சந்தனம் பூசும் புனித நிகழ்ச்சிநடைபெறும், துல்கஃதா பிறை 30 அன்று புனிதகுர்ஆன் ஷரீப் ஓதி தமாம் (நிறைவு) செய்து கொடி இறக்கப்படும். சந்தனக்கூடு செய்வதில் இந்து மதத்தினருக்கு பங்களிப்பு உள்ளது. 

யார்வாடி நின்றாலும் ஏர்வாடி வந்தால் நலம் பெறலாம் என்று ஏர்வாடி தர்கா அருகில் உள்ள கடல் அலைகள் முழங்கிக் கொண்டே இருக்கின்றன.வஸ்ஸலாம்,

நன்றி ;- முஹம்மது இக்ராமுல்லாஹ் கனீமீ அவர்கள்.

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- இரண்டாம் பாகம்.


12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்..

கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் ..

அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான்.

நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என குலசேகர பாண்டியன் கெஞ்சலானான்.. ஆன்மீக செல்வரும் அதை ஒப்பு கொண்டு பங்காளி துரோகத்தை முறியடிக்க தன்னிடம் இருந்த போர் வீரர்களையும் கு.சே பாண்டியனிடம் இருந்த படை வீரர்களையும் ஒன்று திரட்டி அநியாயக்காரனான விக்கிர பாண்டியனுடன் போர் புரிகிறார்கள்..போரில் விக்கிரம பாண்டியன் உயிர் இழக்கிறான்.அதன் பின் அந்த ஆன்மீக செல்வர் குலசேகர பாண்டியனுக்கு சேர வேண்டிய பகுதியை அவனிடம் ஒப்படைக்கிறார்கள்..

மீதமுள்ள பகுதியை குலசேகர பாண்டியன் அந்த ஆன்மீக செல்வரிடம் ஒப்படைத்து அதை நீங்களே அரசாள வேண்டும் என வேண்ட அவன் விருப்பபடி அவனுக்கு முடி சூட்டி ஆட்சியில் அமர செய்து விட்டு ஏனைய பகுதிகளுக்கு தாமே அரசராக பொறுப்பேற்று கி.பி.1195 முதல் 1207 வரை பன்னிரண்டு ஆண்டுகள் ஏழு மாதங்கள் செங்கோல் செலுத்தினார்கள்..
அதன்பின் போரில் மாண்ட விக்கிரம பாண்டியனின் உறவினனான திருபாண்டியன் என்பவன் ஆந்திரா மன்னனின் உதவியோடு ஆன்மீக செல்வருடன் போர் புரிய போரில் ஆன்மீக செல்வரும் அவர்களுடன் வந்த ஏனைய இஸ்லாமிய வீரர்களும் ஷகிதாகினர்..

இஸ்லாத்தை பரப்பி நியாயத்துக்காக போராடி வென்று செங்கோலும் செலுத்தி நல்லாட்சிப் புரிந்து மனித நேயராய் மார்க்க சீலராய் வாழ்ந்து உயிர் நீத்த அந்த உத்தமரின் உடல்
ராமநாதபர மாவட்டம் ஏர்வாடி என்னும் ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது .. அந்த இறைநேசர்தான் செய்யது இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ்..அதற்கு பிறகு பட்டத்திற்கு வந்த திருபாண்டியன் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் முந்திய ஆட்சியை பாராட்டி அன்னாரின் மகனுக்கும்,வழித்தோன்றல் களுக்கும் பல மானியங்களை வழங்கி கெளரவித்தான்..

இன்று மதுரையில் உள்ள காஜியார் குடும்பத்தினர் செய்யது இபுறாஹிம் ஷஹீத் அவர்களின் வழித்தோன்றல்கள் என கூறபடுகிறது ..இவர்கள் இன்றும் அந்த மானியங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர் ..இது ஏர்வாடி இபுறாஹிம் சாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம் முழுமையான வரலாறு நீளுகிறது..அது மூமின்களின் உள்ளங்களை ஆளுகிறது.வஸ்ஸலாம்.

நன்றி ;- கவிஞர் நாகூர் காதர்ஒலி...

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- முதல் பாகம்.


ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்த ஏர்வாடி ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்,நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் 18- வது தலைமுறையில் மதீனாவில் பிறந்த ஏர்வாடி ஷஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹிஅலைஹி அவர்கள், சுமார் 3000 தொண்டர்களுடன் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இந்தியா வந்தார்கள்.

அக்காலத்தில் இந்தியாவின் நுழைவாயிலாக இருந்த சிந்து மாகாணத்தில் தங்கினார்கள். அங்கு தம் தொண்டர்களை பல பிரிவாகப் பிரித்து சிந்து மாகாணத்தின் பொது மன்றங்கள், சந்திப்புகள், சந்தைகள், மக்கள் ஒன்று கூடும் இடங்களெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தார்கள். இவர்களின் அன்பான அழைப்பை ஏற்று பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.அங்கிருந்து சிறு குழுவுடன் குஜராத் சென்று அங்கும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.


அங்கெல்லாம் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்த போது அங்குள்ள அரசர்களால் இழைக்கப்பட்ட இடையூறுகள் ஏராளம்.அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு இஸ்லாத்தை வளர்த்தார்கள்.பிறகு குஜராத்திலிருந்து புறப்பட்டு இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக தொண்டர்கள் புடைசூழ கன்னனூர், ஆலப்புழை, கொச்சி, கொல்லம்,கண்ணியாகுமரி வழியாக காயல்பட்டிணம் வந்தனர்.

அந்நேரத்தில் நெல்லைப் பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் தனது பகுதிக்கு வந்து தங்கியிருப்பவர்கள் யார் என்று அறிய தூது அனுப்பினான்.அப்போது இப்றாஹீம் ஷஹீத் பாதுஷா அவர்கள் தான் பெருந்திரளாக நாடு பிடிக்க வரவில்லை என்றும்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யவே வந்ததாக தெறிவித்தனர்.பின்பு அங்கிருந்து தொண்டர்கள் புடைசூழ மதுரையை நோக்கி வந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்ட போது, மதுரை மன்னன் திருப்பாண்டியன் அதை ஏற்காமல் இவர்களுடன் போர் செய்ய தயாரானான்.

இப்போரில் திருப்பாண்டியன் தோல்வியுற்று குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்று தஞ்சம் புகுந்தான்.இப்றாஹீம் ஷஹீத்
பாதுஷா அவர்கள் மதுரைக்கு முழுப்பொறுப்பேற்று ஆட்சி நடத்தினார்கள்.13 ஆண்டு கால ஆட்சியில் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாத்தைப் பரப்பினார்கள்.



பின்பு திருப்பதியில் தஞ்சம் புகுந்த திருப்பாண்டியன் பெரும்படையோடு தமிழகம் நோக்கி வர, ஷஹீத் அவர்களின் படையில் பெரும்பாலானோர் மக்கா நகருக்கு திரும்பியிருந்தார்கள். எனவே எளிதாக திருப்பாண்டியன் மதுரையை கைப்பற்றி பின்பு ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் தங்கியிருந்த இராமநாதபுரத்திற்கு வந்து ஷஹீத் அவர்களை எதிர்கொண்டான். மீதமிருந்த சிறுபடையுடன் போரில் இறங்கினார்கள்.

உச்சகட்டமாக ஷஹீத் அவர்களின் குதிரையின் கால்களை பாண்டியமன்னன் வெட்ட, பதிலுக்கு அவனின் தோள் புஜங்களை ஷஹீத் அவர்கள் வெட்டினார்கள்.மயங்கி விழுந்த அவன் பின்பு தெளிவடைந்து எதிர்பாராத விதமாக ஈட்டியால் ஷஹீத் அவர்களின் மார்பைத் தாக்க,


ஷஹீத் இப்றாஹீம் பாதுஷா அவர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன். இவர்களின் அடக்கஸ்தலம் ஏர்வாடியில் உள்ளது.

ஏர்வாடி தர்ஹாவில் வாழும் இப்புனித ஷுஹதாக்களை நாம் முறையாக ஜியாரத் செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோமாக ஆமீன்.. 


தகவல்- காயல்பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் 
அரபுக்கல்லூரியின் 15-வது ஆண்டு மலர்) வஸ்ஸலாம்..

வெளியீடு-

மன்பயீ ஆலிம்.காம் 
மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளையினர்கள். 

தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) 06-09-2014

selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
06 -09 -2014 சனிக்கிழமை 
திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு. 

தலைப்பு ;- சூனியம் ஓர் ஆய்வு

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
முஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.

Friday, September 5, 2014

ஹஜ்ஜு செய்யாத நபிமார்களே இல்லை !!!


05-09-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;- ஹஜ்ஜு செய்யாத நபிமார்களே இல்லை !!! 
குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர் , மலேசியா.

ஹஜ்ஜும் உம்ராவும் சில முக்கிய குறிப்புகள் !

ஹஜ்ஜும் உம்ராவும் சில முக்கிய குறிப்புகள் !!!

ஆசிரியர் ;- அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு 
டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம்,B.A. ( Hons ),M.A.,Ph.D.,