Monday, November 30, 2015

வாழூரில் சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 24-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், வாழூர் ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை 
பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட 
12 தலைப்புகளில் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்.








இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை, மௌலானா மௌலவி 
எஸ்.சுலைமான் அலி ஆலிம் கைரி அவர்கள் கிராஅத் 
ஓதி துவக்கி வைத்தார்கள்.

சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் இமாம்,மௌலானா 
மௌலவி அல்-ஹாஃபிழ் காரீ அப்துல் காதிர் மஹ்ழரி 
ஹஜ்ரத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இறுதியாக வாழூர் ஜாமிஆ மஸ்ஜிதின் இமாம் ஆரிஃப்கான் நூரி நிஜாமி  ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு துஆவோடு மஜ்லிஸ் நிறைவு பெற்றது.

இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் 
கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment