Saturday, July 30, 2016

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின் 50ம் ஆண்டு நினைவு நாள் விழா

முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   
முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் அவர்களின், 
50ம் ஆண்டு நினைவு நாள் விழா 28.7.2016 அன்று பனைக்குளம் 
முஸ்லிம் பரிபாலன சபை, முஸ்லிம் நிர்வாக சபை, ஐக்கிய 
முஸ்லிம் சங்கம், வாலிப முஸ்லிம் சங்கம் ஆகியவற்றின் 
நிர்வாகிகள் முன்னிலையில், பனைக்குளம் மகான் பாபா 
செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் நினைவு நாள் விழா 
ஜும்ஆ பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.


மஃரிப் தொழுகைக்குப் பின் ஷாதுலிய்யா திக்ரு மஜ்லிஸும்,
அதனை தொடர்ந்து யாஸீன் ஓதி சிறப்பு துஆவும் நடைபெற்றது.



 இவ்விழாவில் பனைக்குளம், பேரையூர், மதுரை, சென்னை,வாலிநோக்கம்,ஆற்றங்கரை,அழகன்குளம், புதுவலசை, 
அத்தியூத்து, சித்தார்கோட்டை,வாழூர்,பெருங்குளம், உச்சிப்புளி, இராமநாதபுரம், மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்தும் மகான்பாபாவின் 
நேசர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.












விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகான்பாபாவின்
 குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள். 

Thursday, July 28, 2016

பனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி மஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) அவர்களின், நினைவு நாள் விழா,


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!!

பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,
அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,
அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,
ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,
செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) 
ஹழரத் கிப்லா அவர்களின்,50- ஆம் ஆண்டு நினைவு 
நாள் விழா,நாள்  ( 28-07-2016 ) வியாழன் பின்னேரம்
வெள்ளி இரவு 7-00 மணிக்கு



தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு,
  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான
 இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ 
அன்புடன் அழைகின்றோம்.

இப்படிக்கு.

மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
            M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                 

 S/O அல்ஹாஜ் மௌலானா மர்ஹூம் 
M.முஹம்மது முபாரக் ஆலிம் மன்பயீ.

விழாக் குழுவினர், பனைக்குளம்.


  
இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் அனைவர்களும் தவறாது 
கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் 
கிளையினரும், துஆச்செய்து அகமகிழ்ந்து,அன்புடன் 
அழைக்கின்றார்கள் வஸ்ஸலாம்.

வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம்.

மெஞ்ஞான கருவூலங்களே மேன்மைமிகு வலிமார்களே! 
நால்வகை அரண்போன்ற வலிமார்களே! 
நாடிவருவோரை காப்பீர்களே!

கவிஞர் நாகூர் காதர் ஒலி 1975 ல் எழுதிய பாடல் 
1977ல் பாடகர் A.ஜெய்னுல் ஆபிதீன் சிங்கப்பூர் 
மஜீது பிரதரஸ் ஆடியோ நிறுவனத்தில் பாடியது.

முஸ்தபா மஸ்லஹியின் முன் மண்டியிட்ட வஹ்ஹாபிசம் ( த த ஜ )


கோவையில் நடந்த மாநாடு ஒன்றில் வஹ்ஹாபிகளே! உங்களுக்கு ஆண்மை இருந்தால் நீங்கள் பெட்டைகள் இல்லையென்றால் வாதத்துக்கு வாருங்கள் என ஓர் குரல் ஒலித்து சொரணைகெட்டுக் கிடந்த வஹ்ஹாபிசத்துக்கு கொஞ்சம் ரோஷமேற்றியது. அந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் முஹம்மது முஸ்தபா மஸ்லஹி என்னும் வஹ்ஹாபிசத்தின் சிம்ம சொப்பணம்!ரோஷத்தி விளைவு வேறு வழியில்லாமல் விவாத களத்தை சந்தித்து தனக்கு தானே மண்ணைவாரிப்போட்டுக்கொண்டார்கள ததஜ மூடர்கள்.விவாதத்தில் த த ஜ வினர் எழுந்து நிற்க முடியாத வகையில் சொத்தைகளாக்கப்பட்டனர்.

திருக்குர் ஆனில் எழுத்துப்பிழையென ஓர் கொள்கையை வகுத்து யூத கைக்கூலித்தனத்தின் முழு செல்லப்பிள்ளைகளாக வலம் வந்த ஜெயினுலாபிதீன் கோஷ்டியினரின் வேஷ்டியை தூத்துக்குடியில் அவிழ்த்தெறிந்ததில் தொடங்கியது மஸ்லஹியின் விவாதப்பயணம்! அல்ஹம்துலில்லாஹ்!

அற்புதமான பேச்சாற்றலும் தெளிவான சொற்களும் கொண்ட முஸ்தபா மஸ்லஹியின் வாதங்களுக்கு முன் வஹ்ஹபிசத்தால் எழுந்து நிற்கமுடியவில்லை.இதுவே கோவை விவாதத்திலும் தொடர்ந்தது.

எந்தெந்த ஹதீதுகளை எல்லாம் ஆபாசம் என த த ஜ காபிர்கள் மறுத்து வந்தார்களோ அவை அத்துனையையும் தெளிவாக மொழிபெயர்த்து ஆபாசம் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் விளக்கமளித்து பெருமானாரின் ஹதீதுகளின் கௌரவத்தை விவாத களத்தில் பாதுகாத்த முஸ்தபா மஸ்லஹி ஹசரத் அவர்களின் வாதங்கள் எதிர்த்தரப்பு பார்வையாளர்களைக்கூட சிந்திக்க வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை!

த த ஜ இயக்கத்தின் போதை என அறியப்படக்கூடிய கஞ்சா இபுராஹீம் செய்த கேலி கிண்டல்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் புன்சிரிப்போடு ஹசரத் அவர்கள் வைத்த மறுப்புக்கள் நிச்சயம் கஞ்சாவை கடுப்பாக்கியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை!

ஹழரத் அவர்களின் வழிகேட்டுக்கெதிரான சத்தியமெனும் வாள் மத் ஹபு விவாதத்திலும் வஹ்ஹபிசத்தை கருவறுக்கும்! வஹ்ஹாபிசத்தின் மரண ஓலத்தை கோவையில் மீண்டும் ஒலிக்கச் செய்யும்!

முஸ்தபா மஸ்லஹி போன்ற இளம் அறிஞர்கள் களத்தில் இருப்பது த த ஜ போன்ற யூத சரக்கு வியாபாரிகளுக்கு ஒரு போதும் நல்ல சகுணமாக இருக்கப்போவதில்லை!

யா அல்லாஹ்! முஸ்தபா மஸ்லஹி ஹழரத் அவர்களின் ஆயுளை நீடித்து அவர்களின் இல்மிலும் பரக்கத் செய்து சத்தியத்துக்காக தொடர்ந்தும் போராடக்கூடிய ஆற்றலையும் வழங்கிடுவாயாக!

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.