Friday, October 30, 2015

தாஜுல் உலூம் மௌலானா M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களின் தாயார் மறைவு !!!


தமிழ் பேசும் உலகில் புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க 
அறிஞரும், சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவருமான,
கண்ணியத்திற்கும், மரியாதைக்குரிய "அஃப்ழலுல் உலமா" 
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் 
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத்  அவர்களின்  
தாயார், ரஹ்மத்துல் குபுரா அவர்கள் 29-10 -2015 நேற்று 
இரவு11:30 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் 
பகாவை அடைந்து விட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



அன்னாரின் ஜனாஸா 30-10-2015 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு, ஹழ்ரத் அவர்களின் சொந்த ஊரான, மல்லிப்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், ஹழ்ரத் அவர்களின் தாயாரின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும், தாஜுல் உலூம் உஸ்தாது அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்,சுன்னத் வல் ஜமாஅத் வாழூர் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment