Tuesday, March 8, 2016

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!!!


முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! 
முஸல்லியன்! வமுஸல்லிமா!!

வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் 
கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில், பாரம்பரியமாக 
தொண்டு தொட்டு நடைபெற்று வரும், நாகூர் அல் குத்துபுல் 
மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் 
சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு, 
இன்ஷா அல்லாஹ் 10 -03 -2016 வியாழக்கிழமை மாலை,
வெள்ளி இரவு ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1437 ) 
மிக விமர்சையாக ஆரம்பமாக 
இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் 
தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் 
நடைபெறும் மௌலிது ஷரீஃப் 19-03-2016 (ஜமாதுல் ஆகிர் 
பிறை 10-1437 ) சனிக்கிழமையோடு நிறைவு பெறும்.

ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் 
மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் 
சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் 
கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் 
பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களின் 
சீரிய தலைமையில் நடைபெறும்.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் 
அனைவரும் தவறாது கலந்து கொண்டு,
அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,
அருளையும்,பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்...


வெளியீடு
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment