Wednesday, April 20, 2016

சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் மறைவு !!!

பேரன்புடையீர்! 
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சித்தார் கோட்டை,சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் 
அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் 12-04-2016 அன்று 
மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை 
அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா 
இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்
 13-04-2016 புதன் கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு  
பெரிய பள்ளிவாசல்  கப்ருஸ்தானில்  நடைபெற்றது.


வள்ளல் அவர்களைப் பற்றி சில

சென்ற மாதம் 18-03-2016 அன்று சித்தார் கோட்டையில் 
மீலாதுப் பெருவிழாவை வள்ளல் அவர்கள் நடத்தி வைத்தார்கள்.


மறைந்த வள்ளல் அவர்கள்,சித்தார் கோட்டையின் 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தூணாக வாழ்ந்தவர்கள்.
யா அல்லாஹ் இவர்களை போல நல்ல மனிதர்கள் பலரை,
சித்தார் கோட்டைக்கு வாரி வழங்குவாயாக ஆமீன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நல்லறங்களை 
ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய
 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய 
வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் 
பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், 
உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' 
எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய 
தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் 
அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் 
கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment