Monday, August 6, 2012

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்



லைலத்துல் கத்ர் இரவு வணக்கம் பற்றி
அண்ணலார் (ஸல்அவர்கள் யார் நன்னம்பிக்கையுடனும்,
தூய நிய்யத்துடனும், ''லைலத்துல் கத்ர்'' எனும் இரவில்
விழித்திருந்து இறை வணக்கத்திலே கழிக்கிறாரோ அவரின்
சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

(1)ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறைஅல்ஹாக்கு
முத்தகாதுரு 1 முறைகுல்ஹுவல்லாஹு 3 முறை
ஓதி தொழ வேண்டும்
இதன் பலன்மரண வேதனை இலேசாக்கப்படும்,
மண்ணரை வேதனை குறைக்கப்படும்.

(2) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 27 முறை ஓதி தொழ
வேண்டும் இதன் பலன் அன்று பிறந்த பாலகனைப்
போன்று பாவ மற்றவராகிறார்

(3) ரக்கஅத் 4; அல்ஹம்து 1 முறை இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 50 முறை ஓதி தொழ வேண்டும்.
இத் தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தாவில் 3-ம் கலிமா ஒரு முறை 
ஓதிய பின் துஆ கேட்டால் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது

(4) இரண்டு இரண்டாக  12 ரக்கஅத்துக்கள் அல்ஹம்து 1 முறை 
இன்னா அன்ஜல்னா 3 முறைகுல்ஹுவல்லாஹு 10 முறை
ஓதி தொழ வேண்டும்.

(5) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை குல்ஹுவல்லாஹு 7 முறை
தொழுகை முடிந்த பின் அஸ்தஃபிருல்லாஹ வஅத்தூபு இலைஹி
 70 முறை ஓத வேண்டும்.

(6) ரக்கஅத் 2 அல்ஹம்து 1 முறை,இன்னா அன்ஜல்னா
முறை குல்ஹுவல்லாஹு 3 முறை ஓதிதொழ வேண்டும்.
இவ்விரவின் நன்மை கிட்டுவதுடன் நோன்புகள் 
ஒப்புக் கொள்ளப்படுகின்றன.

(7) லைலத்துல் கத்ர் இரவின் தொழுகையில் குறைந்தது
நடுநிலை 100, அதிகம் 1000 ரக்கஅத்துக்கள் தொழவேண்டும்.

(8) தஸ்பீஹ் நபில் தொழுகை ரக்கஅத் 4 இதற்கு
அபரிமிதமான நன்மைகள் உண்டு.

(9) இஷா தொழுகைக்குப்பின் இன்னா அன்ஜல்னா 
சூராவை 7 முறை ஓதினால் அல்லாஹ் அவனை
அனைத்துச் சோதனைகளை விட்டும் காப்பாற்றுகிறான்
அவனுக்காக 70,000 மலக்குகள் துஆச்செய்கிறார்கள்

உறங்காது தொழுவோம் உயர்வை பெறுவோம்,
நாயனை தொழுவோம்நன்மை பெறுவோம்.
தொகுத்து வழங்கியவர்கள்.
அல்ஹாஜ் மௌலானா மௌலவி மர்ஹும் S.A.
முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ
அவர்கள்
வெளியீடு;- மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவாழூர்
முக்கிய அறிவிப்பு-
இன்ஷா அல்லாஹ் புனித லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு நல்லமல்கள்,
ரமழான் பிறை 27-ல் உலகம் முழுவதும் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் 
சுப்ஹு வரை நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்து கொண்டு,
அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்கள்.வஸ்ஸலாம்..

0 comments:

Post a Comment