Tuesday, January 1, 2013

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்!



நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் 

சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔
அது குறித்து ஒரு கட்டுரை:


 (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும் 
அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று'' (புஹாரி. முஸ்லிம்)

அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்?
அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான்.
إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا)) [رواه البخاري ح100، ومسلم 2673].

''நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  (புஹாரி. முஸ்லிம்)


இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் கூறுவது:

قال ابن مسعود: عليكم بالعلم قبل أن يرفع، ورفعه هلاك العلماء، والذي نفسي بيده ليودن رجال قتلوا في سبيل الله أن يبعثهم الله علماء لما يرون من كرامتهم. [مفتاح دار السعادة 1/121].
يقول ابن مسعود: أتدرون كيف ينقص الإسلام؟ يكون في القبيلة عالمان، فيموت أحدهما فيذهب نصف العلم، ويموت الآخر فيذهب علمهم كله.
وعنه رضي الله عنه أنه قال: (أتدرون كيف ينقص الإسلام ؟ قالوا: كما ينقص الثوب، وكما ينقص سمن الدابة، وكما ينقص الدرهم. قال: إن ذلك لمنه. وأكبر من ذلك موت العلماء) [رواه الطبراني، وقال الهيثمي: رجاله موثوقون. مجمع الزوائد 1/202]

அறிவு ஞானம் உயர்த்தப்படுவதற்குமுன் அறிவை அவசியாமாக்கிக் கொள்ளுங்கள். அறிஞர்கள் மறைவதுதான் அறிவு உயர்த்தப்படுவதாகும்.
அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதான தியாகிகள் கூட மறுமையில் ஆலிம்களாக எழுப்பப்படவேண்டுமென்று மிகவும் விரும்புவார்கள் ஏனெனில் மறுமையில் ஆலிம்களுக்கு அவ்வளவு மரியாதையும் சங்கையும் செய்யப்படும் என்பதை அறிந்துகொண்டதால்.
ஆலிம்கள் மறைவதன் மூலம் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துவிடும்.

ஆலிம்களின் மறைவு அகிலத்தின் முடிவு:

{أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا} [سورة الرعد الآية (41)] قال سيّدنا عبدالله بن عباس رضي الله عنه:نقصانها خرابها، وخرابها بموت علمائها وفقهائها وأهل الخير منها.
''பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?''
என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு குர்ஆன் விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்:
பூமியிலுள்ள ஆலிம்களும் சட்டக்கலை நிபுணர்களும் நல்லவர்களும் குறைந்துகொண்டே வருவதுதான் இங்கு குறிப்படப்பட்டுள்ளது.
எனவே،
 ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும்:
((وموت العالم مصيبة لا تجبر، وثلمة لا تسد، ونجم طمس، وموت قبيلة أيسر من موت عالم)) [روى الطبراني في الكبير
நபி ஸல் கூறினார்கள்:
''ஒரு ஆலிமின் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு; நிரப்பமுடியாத பள்ளம்; ஒளியிழந்த விண்மீன். ஒரு கூட்டம் இறப்பது ஒரு ஆலிமின் இறப்பைவிட லேசானது.''     (தப்ரானி)

 قال رسول الله صلى الله عليه وسلم (فقيه أشد على الشيطان من ألف عابد) رواه الترمذي وابن ماجه وغيرهما. 
''ஆயிரம் வணக்கசாலிகளைவிட ஒரு மார்க்கசட்ட நிபுணர் ஷைத்தானுக்கு மிகக் கடுமையானவர்.'' (திர்மிதி, இப்னுமாஜா)

இந்த நபிமொழிக்கு விளக்கம் தந்த விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறுகிறார்கள்:


 إنّ الشياطين قالوا لإبليس: يا سيدنا مالنا نراك تفرح بموت العالم ما لا تفرح بموت العابد؟ والعالم لا نصيب منه والعابد نصيب منه؟ قال: انطلقوا، فانطلقوا إلى عابد فأتوه في عبادته، فقالوا: إنا نريد أن نسألك فانصرف، فقال إبليس: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ فقال: لا أدري، فقال: أترونه كفر في ساعة، ثم جاؤوا إلى عالم في حلقته يضحك أصحابه ويحدثهم فقالوا: إنا نريد أن نسألك، فقال: سل، فقال: هل يقدر ربك أن يجعل الدنيا في جوف بيضة؟ قال: نعم، قالوا: كيف؟ قال: يقول كن فيكون. فقال: أترون ذلك لا يعدو نفسه، وهذا يفسد عليّ عالماً كثيراً، وفي رواية أخرى قال: فقال: أترون ذلك أترون؟ هذا يهدم في ساعة ما أبنيه في سنين (مفتاح دار السعادة لابن القيّم (2/69)

ஒருமுறை மற்ற ஷைத்தான்களெல்லாம் தலைவன் இப்லீசிடம் வினவினார்களாம்: ''ஒரு ஆபித் இறந்தால் மகிழ்ச்சியடையாத நீ ஒரு ஆலிம் இறந்தால் ஆனந்தத்தில் துள்ளுகிறாயே?''

''அதற்கு காரணம் இருக்கிறது. ஆபிதை (சுலபமாக வழிகெடுத்து ) நாம் நிறைய பலன் பெறமுடிகிறது. ஆனால் ஆலிமிடம் அவ்வாறு முடிவதில்லை. (வாருங்கள் இதைக் கண்கூடாகக் காட்டுகிறேன்)''
முதலில் ஒரு ஆபிதிடம் சென்றார்கள். அவரிடம் வினவினார்கள்:
''அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''எனக்குத் தெரியாது'' என்றார்.
''பார்த்தீர்களா? கண நேரத்தில் அவர் காஃபிராகிவிட்டதை (குஃப்ருடைய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டதை)!

அடுத்து ஒரு ஆலிமிடம் சென்றார்கள். அவர் தன் சகாக்களிடம் நகைச்சுவையாக உரையாடிக்கொண்டிருந்தார்.
இப்லீஸ் கேட்டான்: ''உம்மிடம் ஒரு கேள்வி. அல்லாஹ் இந்த உலகத்தை ஒரு முட்டையின் துளையில் வைக்கமுடியுமா?''
''நிச்சயமாக முடியும்''
''எப்படி?'' ''
''ஆகு! என்பான் அது ஆகிவிடும்''
''பார்த்தீர்களா? இவர் (எந்த நிலையிலும்) நிலை தவறாமல் இருப்பதை!'' இப்படித்தான் அதிகமான ஆலிம்கள் என்னை நிலைகுலைய வைத்துவிடுகின்றனர். நான் ஆண்டாண்டு காலம் சிரமப்பட்டு அமைத்ததை சிறிது நேரத்தில் தகர்த்துவிடுகின்றனர்'' என்றான் இப்லீஸ்.

அதுமட்டுமல்ல.. அண்ணல் நபி ஸல் அவர்களுக்கும் இப்லீஸுக்கும் நடந்த ஒரு நீண்ட உரையாடலில் ''உன் கோபத்திற்குரிய பிரதான எதிரிகள் யார் யார்? ''என்ற நபிகளாரின் கேள்விக்கு அவன் கூறிய பதிலில் முதலாவது இடம் நாயகம் ஸல் அவர்கள். இரண்டாவது அல்லாஹ்விற்காக தன்னை அற்பணித்த இளைஞன். மூன்றாவது பேணுதலுள்ள ஒரு ஆலிம். அதற்குப் பிறகு அவனது எதிரிகள் என்று ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறான். அவ்வாறெனில் ஒரு இறையச்சமுள்ள ஆலிம் அல்லாஹ்விற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
நன்றி ;--மௌலானா சதக் மஸ்லஹி

வெளியீடு;--  மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment