Friday, February 6, 2015

வாழூர் முன்னால் இமாம் தென்காசி,மௌலானா கே.எ.ஷாஹுல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத்தின் தந்தை, மௌலானா மௌலவி அஹ்மது ஷாஹ் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் மறைவு !!!!


பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
வாழூர் முன்னால் இமாம் தென்காசி,மௌலானா  மௌலவி 
கே.எ.ஷாஹுல் ஹமீது பாகவி ஹஜ்ரத்தின் தந்தையும்,பொதக்குடி,
அந்நூருல் முஹம்மதிய்யி அரபுக் கல்லூரி, மற்றும் கடைய நல்லூர் ஃபைஜுல் அன்வார் அரபுக் கல்லூரி ஆகியவைகளின் முன்னால் பேராசிரியருமான,மௌலானா மௌலவி அஹ்மது ஷாஹ் 
பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் தென்காசியில் (05.02.2015) 
வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில்,தாருல் 
ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  (05.02.2015) அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு  தென்காசியில் நடைபெற்றது .

எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்   பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்!


உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment