Thursday, June 22, 2017

சித்தார் கோட்டையில் ரமழானில் கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப் மஜ்லிஸ் !!!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சித்தார் கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் 
சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில்,புனித ரமழான் மாதம்
முழுவதும் ஹிஜ்புல் குர்ஆன் ஓதியதற்கு 
பின்னால், கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப் 
ஓதப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
.
கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப்,சித்தார் கோட்டையில், 
நூற்றாண்டுகளுக்கு மேல் ஓதப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதாவின் 
முன்னால் இன்னால் மாணவர்களாலும்,பெரிய சீதேவிகளாலும் 
இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.இதை ஓதக்கூடியவர்களுக்கு 
அல்லாஹ் எல்லாச் சிறப்பையும் வழங்குவானாக.ஆமீன்.

இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை பல மஹான்மார்கள் 
தலைமை யேற்று நடத்தி இருக்கிறார்கள்.

அல்லாஹ் அந்த மஹான்மார்களுக்கு நாளை 
மறுமையில் உயர் பதவி வழங்குவானாக ஆமீன்.

யா அல்லாஹ் இந்த சிறப்பு வாய்ந்த கஸீதத்துல் 
வித்ரிய்யா ஷரீஃப் மஜ்லிஸ்,கியாம நாள் வரை 
நடைபெறுவதற்கு பேருதவி செய்வாயாக ஆமீன்.
வஸ்ஸலாம்...

வெளியீடு ;-  சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

0 comments:

Post a Comment