Monday, November 3, 2014

பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர், '' நடமாடும் மதரஸா '' என்று அழைக்கப்படும்,மௌலானா மௌலவி மு.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு தொக்கோ மஅல் ஹிஜ்ரா என்ற உயரிய விருது !!!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
01-11-2014 அன்று பினாங்கில், முஸ்லிம் லீக் சார்பாக,இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு,நிம்மதியான வாழ்வு எங்கே? என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.

இச்சிறப்புக் கருத்துக் களத்தில்,  தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் 
பாக்கவி ஹஜ்ரத் கிப்லா, 

பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர் மௌலானா மௌலவி மு.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் 

மற்றும் பினாங்கு மதரஸா உஸ்வத்துன் ஹஸனாவின் ஆசிரியர்,அல்ஹாஃபிழ் மௌலானா ஹஸனுத்தீன்  மன்பயீ ஆகியோர் பங்கு பெற்றனர்.
இறுதியில் பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர் மௌலானா மௌலவி மு.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு தொக்கோ மஅல் ஹிஜ்ரா என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இதில் ஏராளமானோர் 
கலந்துகொண்டனர் வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

0 comments:

Post a Comment