Monday, August 1, 2016

தூக்கம் !!!


"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் :
* பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது 
வறுமையை உண்டாக்கும்.

* லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில் 
சோம்பலை ஏற்படுத்தும்.

* சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில் 
தூங்குவது அறிவாற்றலை அதிகப்படுத்தும்.

* சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம் 
சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும் 
தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும்.

* பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது 
அழிவை ,நாசத்தை ஏற்படுத்தும்.

மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில் 
கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது 
அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும்.


அதிகமான தூக்கம் கீழ் காணும் 
விளைவுகளை ஏற்படுத்தும் ,

* மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும்,

* சளியை அதிகப்படுத்தும்,

* உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்.,

* வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்,

* பார்வையை பலகீனப்படுத்தும்..

இன்னும் இது போன்ற பல நோய்களை ஏற்படுத்துகின்றது.
எனவே ஸுப்ஹு , அசர் நேரத்தில் தூங்குவது இதை 
விட தங்கடமானதும் கெட்டதுமாகும்.

( நூல் - முஹிம்மாதுள் முதஅல்லிமீன்)


வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment