Monday, June 2, 2014

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் பாவம் போக்கும் லைலத்துல் பராஅத் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!



எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்
உள்ள மஸ்ஜித் இந்தியாவில் ஷஅபான் பிறை
15-அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று
யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும்,
திக்ரு மஜ்லிஸ்களும், தஸ்பீஹ் தொழுகைகளும்,
கோலாலம்பூர்  மஸ்ஜித் இந்தியாவின் தலைமை
இமாம் மௌலானா மௌலவி  அல்ஹாஜ்
அல்ஹாஃபிழ் மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம் 
பாகவி & தேவ்பந்தி ஹளரத் மற்றும் துணை இமாம்
மௌலானா மௌலவி அல்ஹாஜ்  அல்ஹாஃபிழ்,
எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் 
ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.


இது போன்று  பினாங்கு, மற்றும் மலேசியாவில்  உள்ள
இருநூற்றுக்கும்  மேற்பட்ட மதரஸாக்களிலும்,  
இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின்
அனைத்துப் பகுதிகளிலும்  இன்ஷா அல்லாஹ் மிகச்  சிறப்பாக
நடை பெற இருக்கிறது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்களில்
அனைத்து நல்லுள்ளங்களும், கலந்துகொண்டு,கப்ரு
ஜியாரத் மற்றும் நோன்பு வைத்து அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.ஆமீன்..
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்.

0 comments:

Post a Comment